என் மலர்
நீங்கள் தேடியது "டி வில்லியர்ஸ்"
- ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரேவிஸ் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
- காயத்தால் விலகிய ஒரு வீரருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அவரை ஒப்பந்தம் செய்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 218 ரன்கள் குவித்தது. 4ஆவது வீரராக களம் இறங்கிய டெவால்டு பிரேவிஸ் 56 பந்தில் 125 ரன்கள் விளாசினார். 41 பந்தில் சதம் விளாசினார்.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை அணிகள் ஏலத்தில் எடுக்காதது குறித்து டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி. வில்லியர்ஸ் கூறியதாவது:-
ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை ஏலம் எடுக்க அணிகளுக்கு பொன்னான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் மோசமான வகையில் அவற்றை தவறவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த குர்ஜாப்நீத் சிங் காயம் அடைந்தார். இதனால் 2.2 கோடி ரூபாய்க்கு மாற்று வீரராக சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது. இதற்கு முன்னதாக 2022 முதல் 2024 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.
பிரேவிசை இன்னொரு டி வில்லியர்ஸ் என அழைக்கிறார்கள். இவரது ஆட்டம் டி வில்லியர்ஸ் ஆட்டத்தை ஞாபகப்படுத்துவபோன்று இருக்கும்.
- 2015-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 பந்தில் டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்திருந்தார்.
- ஜெயசூர்யா, குசால் மெண்டிஸ், கப்தில், லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.
அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 1 பவுண்டரி, 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார். பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாகவே அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2015-ல் 16 பந்தில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 10 வருடங்கள் கழித்து அவரது சாதனையை மேத்யூ போர்டு சமன் செய்துள்ளார்.
ஜெயசூர்யா (1996) பாகிஸ்தானுக்கு எதிராகவும், குசால் பெரேரா (2015) பாகிஸ்தானுக்கு எதிராகவும், மார்ட்டின் (2015) கப்தில் இலங்கைக்கு எதிராகவும், லிவிங்ஸ்டன் (2022) நெதர்லாந்துக்கு எதிராகவும் 17 பந்தில் அரைசதம் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளனர்.
- விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
- விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.
புதுடெல்லி:
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.
ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.
4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.
அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.
விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.
காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.
- இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இளம் வீரர்களை அடிப்படையாக கொண்ட லீக்கின் மதிப்பை உயர்த்தும்.
- தினேஷ் கார்த்திக் இந்த வருடம் விளையாட வருவது அற்புதமானது. இந்த தொடருக்கு சிறப்பானது.
இந்தியாவில் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ், பாகிஸ்தானில் பி.எஸ்.எல். நடைபெறுவது போன்று தென்ஆப்பிரிக்காவில் SA20 லீக் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதிக்கும் என டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி வில்லியர்ஸ் கூறுகையில் "இந்திய வீரர்கள் SA20 லீக்கில் விளையாட எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என நம்புகிறேன். இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இளம் வீரர்களை அடிப்படையாக கொண்ட லீக்கின் மதிப்பை உயர்த்தும்.
தற்போது தினேஷ் கார்த்தில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஆனால் இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேலும் அதிகமான இந்திய வீரர்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.
தினேஷ் கார்த்திக் இந்த வருடம் விளையாட வருவது சிறப்பானது. இந்த தொடருக்கு சிறப்பானது. தற்போது பீக் பார்மில் இருக்கும் வீரர்கள் வந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.
பும்ரா, ரஷிப் பண்ட், விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை தேர்வு செய்வேன்.
சூர்யகுமார் யாதவ் இங்கே விளையாடினால் கற்பனை செய்து பாருங்கள். அமேசிங்காக இருக்கும். பழைய வீரர்களை எடுத்துக் கொண்டால் உத்தப்பா, இர்பான் பதான் போன்றோர் என் நினைவில் உள்ளனர்" என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிநாடுகளில் நடைபெறும் எந்தவொரு லீக்கிலும் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை. SA20 லீக் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணி உரிமையாளர்கள்தான் உரிமையாளர்களாக உள்ளனர்.






