search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SA20"

    • முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 204 ரன்கள் குவித்தது.
    • 205 ரன் இலக்கை நோக்கி சென்ற டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் 115 ரன்னில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்காவில் ஆறு அணிகள் பங்கேற்ற "SA20" 20 ஒவர் தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளனர்.

    ஆறு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    அதடிப்படையில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 115 ரன்னில் சுருண்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் ஆகிய அணிகள் இந்த லீக்கில் விளையாடின.

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிகள் பட்டியில் முறையே முதல நான்கு இடங்களை பிடித்தன.

    குவாலிபையர் 1-ல் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டரில் பார்ல் ராயல்ஸை ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

    குவாலிபையர் 2-ல் ஜோகன்னஸ்பர்க்கை டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது.

    • தென் ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
    • 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    கெபேஹா:

    தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஈஸ்டன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்.ஐ. கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    கெபேஹாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஈஸ்டன் கேப் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×