என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aakash Chopra"

    • டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா இன்னும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
    • இதனால் இந்திய அணி பரிசோதனை என்ற பெயரில் வீரர்களை அடிக்கடி மாற்றக் கூடாது.

    இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் மற்றும் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டது. மற்ற 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் காம்பினேஷன் மாறிக் கொண்டே இருந்தது. இந்த அணி நிர்வாகம் இதை பரிசோதனை எனக் குறிப்பிடுகின்றது.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. இதனால் அனைத்து பரிசோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இது பரிசோதனை கட்டமாகும். இந்த பரிசோதனைகள் நின்றுவிடும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி பரிசோதனை கட்டத்தில் இருக்கிறது. இதனால் யாரைம் டாப் வரிசை அல்லது கீழ் வரிசையில் விளையாட வைக்க முடியும், விளையாட அல்லது யாரையும் நீக்க முடியும் என்று சொல்கிறார்கள். வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, அவர்கள் பரிசோதனை செய்யலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

    எனினும், சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 பேட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அது பரிசோதனை முடிவுக்கு நேரம் என்று நினைக்கிறேன். நாம முடிச்சிட்டோம்னு நினைக்கிறேன். இதற்கு அப்புறம் நீங்க அதிகமாக பரிசோதனை பண்ண முடியாது. நீங்க செய்யக் கூடாது. ஏனெ்றால், உலகக் கோப்பை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

    • ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர்.
    • இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.

    இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட தகுதியாக இருந்தும் ஒரு சில வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது பலரது மத்தியிலும் பேசுபொருளானது.

    அந்த வகையில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பெற்று விளையாட தகுதியானவர் ஜெய்ஸ்வால் என அவரை ஆதரித்தும், இந்திய அணியின் நிர்வாகத்தை விமர்சித்தும் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட வைக்கப்பட்டு வருகிறார். இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.

    ஏனெனில் அவரைப் போன்ற ஒரு திறமையான துவக்க வீரர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இடம்பிடித்து விளையாட வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரை ஒரு வடிவத்தில் மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார்.

    அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்குள் பலத்த போட்டி நிலவுவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் விரைவாக தனது வாய்ப்பை எட்டிப்பிடிப்பார்.

    என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    • இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் கேள்விகள் எழும்.
    • கேட்டதை எல்லாம் கொடுத்ததாக தேர்வாளர்கள் எண்ணி, ரிசல்ட் என்னவானது என கேள்வி எழுப்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    கவுதம் கம்பீர் பதவி ஏற்ற பிறகு இந்தியா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா மண்ணில் 1-3 எனத்தோற்றது.

    இந்த நிலையில் ஐந்து போட்டிகளில் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பதவி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    காம்பீர் மீது ஏராளமான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் அதிகரித்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவரது தலைமையில் இந்திய அணி அதிக போட்டியில் வெற்றி பெறவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. தோல்வி.! தோல்வி..! என சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

    ஒயிட்பால் கிரிக்கெட்டில் அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அணி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில், கேள்வி எழுகிறது. இந்த தொடரில் ஏராளமான அழுத்தம் இருப்பதாக நினைக்கிறேன். இந்த தொடர் இந்தியாவுக்கு சரியாக அமையவில்லை என்றால், கடவுளே வேண்டாம், சிறப்பாக செல்லும் என்று நம்புகிறேன். சிறப்பாக விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அப்படி சிறப்பாக இல்லை என்றால், கேள்விக்குறி எழும் எங்கே சென்றீர்கள்? என்ன செய்தீர்கள்? போன்ற கேள்விகள் எழும்.

    ஏனென்றால், அணி நிர்வாகம் கேட்டதையெல்லாம் கொடுத்ததாக தேர்வாளர்கள் உணர்கிறார்கள். ஆகவே, ரிசல்ட் காட்ட வேண்டும். சாக்குபோக்கு சொல்ல முடியாது.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை
    • லக்னோ அணி இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம்.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    இந்நிலையில், ரிஷப் பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "தன்னை பொருத்த வரை ரிஷப்பை அணியில் இருந்து விடுவித்து விட்டு மினி ஏலத்தில் ரூ.14 அல்லது ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கலாம். மீதமுள்ள தொகையை வைத்து இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம். அதன்மூலம் நீங்கள் அடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியாக மாறலாம்" என்று தெரிவித்தார்.

    • நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.
    • இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பையில் வங்காள தேசத்துக்கு எதிராக நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் வீராட் கோலி தங்களை திசை திருப்பும் முயற்சியாக போலியாக பீல்டிங் செய்ததாக வங்காளதேச வீரர் நூருல்ஹசன் குற்றம் சாட்டி இருந்தார்.

    அக்‌ஷர் படேல் வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை லிட்டன்தாஸ் அடிக்க பவுண்டரி லைன் அருகே நின்ற அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து வீச விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதை பிடித்தார். ஆனால் இடையே நின்றிருந்த விராட் கோலி பந்து தன்னை கடக்கையில் அதை பிடித்து பந்து வீச்சாளர் பகுதியை நோக்கி எறிவது போல் பாவனை காட்டினார்.

    ஆனால் கோலியின் அந்த செயலை வங்காளதேச பேட்ஸ் மேன்களான லிட்டன்தாசும், நஜ்குல ஹூசைனும் கவனிக்காமல் 2 ரன்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு தான் நூருல்ஹசன் மைதான நடுவர்களை விமர்சித்துள்ளார்.

    நடுவர்கள் அதை முறையாக கவனித்து இந்திய அணிக்கான தண்டனையாக வங்காள தேசத்துக்கு 5 ரன்கள் வழங்கி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கிடைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும் என்றும் கூறினார்.

    ஐ.சி.சி. விதிப்படி போலியான பீல்டிங் பாவனையால் பேட்ஸ்மேன்கள் திசை திருப்பப்பட்டதாக நடுவர்கள் கண்டறிந்திருந்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்குவர். ஆனால் கோலியின் பாவனை நடுவர்களால் கவனிக்கப்படவில்லை என்றாலும் பேட்ஸ்மேன்கள் அந்த செயலால் திசை திருப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலி 100 சதவீதம் போலியான பீல்டிங்தான் செய்தார் என்றும் அவர் தவறு செய்துவிட்டார் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி செய்தது கண்டிப்பாக 100 சதவீத போலி பீல்டிங்தான். பந்தை பிடிக்காமலேயே பேட்ஸ்மேனை ஏமாற்றும் விதமாக தான் 'துரோ' எறிவது போல் ஆக்‌ஷன் செய்தார். நடுவர் அதை பார்த்து இருந்தால் 5 ரன் அபாரமாக கொடுத்திருப்பார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றது. எனவே நாம் தப்பித்தோம். இந்த விஷயத்தில் வங்காள தேச வீரரின் குற்றச்சாட்டு சரியானவைதான்.

    இவ்வாறு சோப்ரா கூறி உள்ளார்.

    • விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான்.
    • இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை.

    காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பும்ரா தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பும்ரா இல்லாததால் இந்திய அணியின் வேகப்பந்து வரிசை தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இதனை ரசிகர்கள் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலேயே உணர்ந்தனர்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 206 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் மேலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர். இலங்கை அணி வீரர்கள் 9ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியில் தற்போது முகமது ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களைத் தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த திறமையை வெளிப்படுத்தவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை. எனவே அவர் இல்லாமலும் விளையாடுவதற்கு இந்திய அணி பழகிக் கொள்ள வேண்டும்.

    விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான். எனவே குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே நம்பி ஒரு அணி இருக்க கூடாது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நீக்கப்பட்டார். இது நல்ல செய்தி இல்லைதான். ஆனால் அணி உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டியுள்ளது.

    • நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.
    • பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும்.

    ஜஸ்பிரித் பும்ரா நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாகத் தகுதி பெற வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் சில ஆட்டங்களைத் தவறவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய பேட்டர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

    முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா கடந்த செப்டம்பரில் இருந்து வெளியேறினார் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். பங்களாதேஷ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்து இந்தியாவுக்காக விளையாடவில்லை.

    இந்நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் முதலில் இந்திய வீரர். பிறகு உங்கள் பிரான்சைஸிற்கு (franchise) விளையாடுங்கள். எனவே, பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஏழு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது.

    அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்யத்துடன் வைத்திருக்கும்.

    என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    • டெல்லி அணியில் எந்தெந்த வீரருக்கு என்னென்ன பணிகள் என்றே இதுவரை தெளிவு இல்லாமல் உள்ளனர்.
    • அவர்களின் கீப்பர் யார் என்பதே புரியாமல் தான் இருக்கிறது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    டெல்லி அணியில் எந்தெந்த வீரருக்கு என்னென்ன பணிகள் என்றே இதுவரை தெளிவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும். டேவிட் வார்னர் - பிரித்வி ஷா ஓப்பனிங் ஆடுவார்கள். மிட்செல் மார்ஷ் 3-வது இடத்தில் ஆடலாம். ஏனென்றால் வார்னர் - பிரித்வியை 3-வது இடத்தில் களமிறக்க முடியாது.

    4-வது இடத்தில் மணிஷ் பாண்டே. ரீலே ரூசோவ் அல்லது ரோவ்மன் போவெல் 5-வது இடத்தில் களமிறங்கலாம். 6-வது இடத்தில் சர்ஃப்ராஸ் கான். பெரும்பாலும் சர்ஃபராஸ் தான் கீப்பராக இருப்பார் என்று தெரிகிறது. வேறு பெரிய தேர்வுகள் அவர்களிடம் இல்லை. அவர்களின் கீப்பர் யார் என்பதே புரியாமல் தான் இருக்கிறது.

    பவுலிங்கில் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தான் ஸ்பின்னர்களுக்கு இருக்கின்றனர். இதனைவிட்டால் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பெரியளவில் இருக்கின்றனர். சேட்டன் சக்காரியா, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, ஆன்ரிக் நார்ட்ஜே ஆகிய 4 பேரில் 3 பேர் மட்டும் ப்ளேயிங் 11-ல் சேர்க்க வாய்ப்புள்ளது.

    பழைய அணிகளில் 3 அணிகள் மட்டும் இதுவரை கோப்பையை வெல்லாமல் இருக்கிறது. டெல்லி அணி கோப்பைக்கு அருகில் சென்றுவிட்டது. ஆனால் இந்த முறை அருகில் கூட வரமாட்டார்கள்.

    என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் இந்தாண்டு ஐபிஎல்-ல் விளையாட முடியாது. இதனையடுத்து புதிய கேப்டனாக டேவிட் வார்னர் களமிறங்குகிறார். இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்லாமல் உள்ள டெல்லி, இந்த முறை புதிய கேப்டனின் திட்டங்களால் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    • டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது.
    • உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

    கடந்த முறை சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இதனால் இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடததுதான் காரணம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது:-


    நாம் டி20 உலக கோப்பையை பார்த்திருக்கிறோம். அதில் பென் ஸ்டோக்ஸ் சில பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன் பிறகு தான் அதிரடியை தொடங்கினார். அவர் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இறங்கி இருக்கிறார்.

    பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் அவர் பேட்டிங் ஆர்டரின் முன் வரிசையில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. எனினும் இம்முறை சென்னை அணி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மெதுவாக இன்னிங்சை தொடங்கி அதன் பிறகு தான் வேகத்தை கூட்டுவார்.

    ஆனால் இம்முறை அப்படி விளையாட கூடாது. அதற்கான சூழலும் இல்லை. டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது. எனவே ருதுராஜ் வேகத்தை அதிகரிக்கக்கூடிய மின்சார வாகனம் போல் இருக்க வேண்டும்.

    என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ருத்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு சீசன்னில் 635 ரன்கள் அடித்திருந்து அசத்தினார். மேலும் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் 368 ரன்கள் அடித்தார்.

    • டோனிக்கு கீழ் வீரர்களின் அபார செயல்பாட்டை பார்க்கவே அழகாக உள்ளது.
    • அதுவும் ரகானே ஃபுள் ஷாட்டில் சிக்சர் விளாசியது அருமை.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் சென்னை பெங்களூரு அணி மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது. ஆனால், டோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பெங்களூருவுக்கு எதிராக ரகானே களத்தில் பேட் செய்தவரை அபாரமாக ஆடி இருந்தார். துபேவும் சிறப்பாக பேட் செய்தார். அவர் இதற்கு முன்னர் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். மற்ற அணிகளுக்கும், டோனிக்கும் இருக்கும் அணிக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றன. டோனியோ தனது தலைமையின் கீழ் அவர்களுக்கு வளர வாய்ப்பு கொடுக்கிறார். அதன் மூலம் வளர்த்துவிடுகிறார்.

    அவருக்கு கீழ் வீரர்களின் அபார செயல்பாட்டை பார்க்கவே அழகாக உள்ளது. மனதை கவர்கிறது. அதுவும் ரகானே ஷாட் பந்தை சிக்சர் விளாசியது அருமை. கான்வே சுதந்திரமாக விளையாடுகிறார்.

    என ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    • இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது.

    ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்சும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28-ம் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

    இந்நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50 சதவீதம் வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா:-

    குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது. இந்த சீசன் முழுவதும் முதலிடத்தில் இருந்த அணி குஜராத். எனவே குஜராத் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த போட்டி மிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.

    இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்புள்ளது. ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம். முகமது ஷமியை மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள்.
    • ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும்.

    மும்பை:

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்த அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியின் நடு வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்யலாம். நிச்சயம் திலக் வர்மாவை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வைக்கும் யோசனை அணிக்கு இருக்காது. அவர் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு பேட் செய்ய வருகிறார் என்றால் அதற்கு ரிங்கு சிங் தான் சிறந்த தேர்வாக நிச்சயம் இருப்பார்.

    டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள். அது தான் அவர்கள் பேட் செய்ய ஏற்ற இடமும் கூட. சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளையாடுவார்.

    ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும். அந்த இடத்திற்கு திலக் வர்மா, சரி வருவாரா என்பது தான் எனது கேள்வி. அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். இதை கடந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்திருந்தோம். அதே சீசனில் கேமரூன் கிரீன் டாப் ஆர்டரில் ஆடி இருந்தார். அதனால் திலக் பின்வரிசையில் ஆடினார். ஆனால், இந்திய அணியில் அவர் பின்வரிசையில் ஆடுவதற்காக தேர்வாகி இருந்தால் நிச்சயம் அதற்கு ரிங்கு தான் சரியான நபர்.

    என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    ×