search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aakash Chopra"

    • இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.

    இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • உடற்தகுதி தொடர்பான பிரச்சினை இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்க மாட்டார்.
    • ஆப்கானிஸ்தான் தொடரிலும் பாண்ட்யா ஆடவில்லை.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டோனி தலைமையிலான இந்திய அணி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

    இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) அணிகள் அதிகபட்சமாக தலா 2 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகியவை தலா 1 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

    9-வது 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்துகிறது. இந்தப் போட்டி ஜுன் 1-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.

    நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா உள்பட 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மட்டுமே 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது. வருகிற 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, இந்தூர், பெங்களூரில் இந்தப் போட்டிகள் நடக்கிறது.

    ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்த அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வாகி உள்ளார்.

    2022-ம் ஆண்டு உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மாவும், விராட்கோலியும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடியது இல்லை.

    இருவரும் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடும் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காகவே அவர்கள் தற்போது ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 ஓவர் உலகக்கோப்பை அணியிலும் அவர்கள் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.

    20 ஓவர் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் உள்ளார். ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. முழு உடல் தகுதி பெறாததால ஹர்திக் பாண்ட்யா ஆப்கானிஸ்தான் தொடரில் ஆடவில்லை. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் ரோகித்சர்மாவே கேப்டனாக இருப்பார் என்றும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு இல்லை என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உடற்தகுதி தொடர்பான பிரச்சினை இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்க மாட்டார். அவர் தற்போது விளையாட முடியாத நிலையில் உள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரிலும் அவர் ஆடவில்லை. டெஸ்ட் தொடரில் ஆடமாட்டார். நேரடியாக ஐ.பி.எல்.லில் தான் ஆடுவார். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையிலும் ரோகித்சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு உள்ளார். ரோகித்சர்மா இடத்தில் அவர் தேர்வாகி உள்ளார். ஹர்திக்பாண்ட்யா கடந்த சீசன்களில் குஜராத் அணிக்காக ஆடினார்.

    இந்த ஆண்டில் இருந்து மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். 

    • ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது.
    • ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்தியாவில் 17-வது ஐபிஎல் தொடர் வரும் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமானது துபாயில் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.இது குறித்து சீனியர் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் 10 ஆண்டுகால கேப்டன்சி என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. தொடக்க வீரராகோ அல்லது மிடில் ஆர்டரிலோ தன்னால் என்ன முடியுமோ அதனை அணிக்காக செய்து கொடுத்தவர் ரோகித் சர்மா. குறிப்பிடத்தக்க வகையில், 2013-ம் ஆண்டு, முதல் முறையாக ஐபிஎல் கேப்டனாக ரோகித் வெற்றி பெற்றார். பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மேலும் நான்கு டிராபிகளை வென்றார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டிராபிகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்ந்த நிலையில், எம்எஸ் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக டிராபியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமன் செய்தது. 10 ஆண்டுகளில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். மிகவும் வெற்றிகரமான கேப்டன். போட்டியை தன்மையை பொறுத்து அணியை நன்றாக வழிநடத்தினார். எப்போதும் தன்னை விட அணியை முன்னிலையில் வைத்திருந்தார்.

    இவ்வாறு சோப்ரா கூறியுள்ளார்.

    • ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளையாடவில்லை.
    • உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா நல்ல ரன்களை குவித்து இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்காவே ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்காவும் சிறந்த அணியாக விளையாட வில்லை. ஆனாலும் நிலைமைகள் இன்னும் அவர்களுக்கே சாதகமாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா நல்ல ரன்களை குவித்து இருக்கிறது.

    இந்த முழு தொடரிலும் இந்தியாவைவிட தென் ஆப்பிரிக்காவே சற்று ஆதிக்கம் செலுத்தும் என்று நான் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறாக கூட இருக்கலாம். இது தவறாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு பல போட்டிகள் சாதகமாகவே இருக்கும். மொத்தமுள்ள 8 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா 5-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள்.
    • உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பர் என்ற முடிவு இன்னும் தெரியவில்லை.

    இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரிடையே போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 அரை சதத்தை பதிவு செய்தார். சஞ்சு சாம்சன் 2 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்தை பதிவு செய்தார்.

    இந்த நிலையில் நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள். இஷான் கிஷன் மேலே வருவது முக்கியமல்ல சஞ்சு சான்சன் இதற்கு மேல் கீழே போக கூடாது.

    நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா அளித்துள்ள பேட்டியில்,சஞ்சு சாம்சன் எப்போது நீங்கள் ரன் அடிக்கப் போகிறீர்கள்? உங்களுக்காக நான் தொடர்ந்து பேசி வருகின்றேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள் என்று குறை கூறியுள்ளார்.

    • டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள்.
    • ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும்.

    மும்பை:

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்த அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியின் நடு வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்யலாம். நிச்சயம் திலக் வர்மாவை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வைக்கும் யோசனை அணிக்கு இருக்காது. அவர் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு பேட் செய்ய வருகிறார் என்றால் அதற்கு ரிங்கு சிங் தான் சிறந்த தேர்வாக நிச்சயம் இருப்பார்.

    டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள். அது தான் அவர்கள் பேட் செய்ய ஏற்ற இடமும் கூட. சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளையாடுவார்.

    ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும். அந்த இடத்திற்கு திலக் வர்மா, சரி வருவாரா என்பது தான் எனது கேள்வி. அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். இதை கடந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்திருந்தோம். அதே சீசனில் கேமரூன் கிரீன் டாப் ஆர்டரில் ஆடி இருந்தார். அதனால் திலக் பின்வரிசையில் ஆடினார். ஆனால், இந்திய அணியில் அவர் பின்வரிசையில் ஆடுவதற்காக தேர்வாகி இருந்தால் நிச்சயம் அதற்கு ரிங்கு தான் சரியான நபர்.

    என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது.

    ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்சும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28-ம் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

    இந்நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50 சதவீதம் வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா:-

    குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது. இந்த சீசன் முழுவதும் முதலிடத்தில் இருந்த அணி குஜராத். எனவே குஜராத் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த போட்டி மிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.

    இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்புள்ளது. ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம். முகமது ஷமியை மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • டோனிக்கு கீழ் வீரர்களின் அபார செயல்பாட்டை பார்க்கவே அழகாக உள்ளது.
    • அதுவும் ரகானே ஃபுள் ஷாட்டில் சிக்சர் விளாசியது அருமை.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் சென்னை பெங்களூரு அணி மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது. ஆனால், டோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பெங்களூருவுக்கு எதிராக ரகானே களத்தில் பேட் செய்தவரை அபாரமாக ஆடி இருந்தார். துபேவும் சிறப்பாக பேட் செய்தார். அவர் இதற்கு முன்னர் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். மற்ற அணிகளுக்கும், டோனிக்கும் இருக்கும் அணிக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றன. டோனியோ தனது தலைமையின் கீழ் அவர்களுக்கு வளர வாய்ப்பு கொடுக்கிறார். அதன் மூலம் வளர்த்துவிடுகிறார்.

    அவருக்கு கீழ் வீரர்களின் அபார செயல்பாட்டை பார்க்கவே அழகாக உள்ளது. மனதை கவர்கிறது. அதுவும் ரகானே ஷாட் பந்தை சிக்சர் விளாசியது அருமை. கான்வே சுதந்திரமாக விளையாடுகிறார்.

    என ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    • டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது.
    • உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

    கடந்த முறை சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இதனால் இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடததுதான் காரணம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது:-


    நாம் டி20 உலக கோப்பையை பார்த்திருக்கிறோம். அதில் பென் ஸ்டோக்ஸ் சில பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன் பிறகு தான் அதிரடியை தொடங்கினார். அவர் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இறங்கி இருக்கிறார்.

    பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் அவர் பேட்டிங் ஆர்டரின் முன் வரிசையில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. எனினும் இம்முறை சென்னை அணி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மெதுவாக இன்னிங்சை தொடங்கி அதன் பிறகு தான் வேகத்தை கூட்டுவார்.

    ஆனால் இம்முறை அப்படி விளையாட கூடாது. அதற்கான சூழலும் இல்லை. டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது. எனவே ருதுராஜ் வேகத்தை அதிகரிக்கக்கூடிய மின்சார வாகனம் போல் இருக்க வேண்டும்.

    என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ருத்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு சீசன்னில் 635 ரன்கள் அடித்திருந்து அசத்தினார். மேலும் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் 368 ரன்கள் அடித்தார்.

    • டெல்லி அணியில் எந்தெந்த வீரருக்கு என்னென்ன பணிகள் என்றே இதுவரை தெளிவு இல்லாமல் உள்ளனர்.
    • அவர்களின் கீப்பர் யார் என்பதே புரியாமல் தான் இருக்கிறது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    டெல்லி அணியில் எந்தெந்த வீரருக்கு என்னென்ன பணிகள் என்றே இதுவரை தெளிவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும். டேவிட் வார்னர் - பிரித்வி ஷா ஓப்பனிங் ஆடுவார்கள். மிட்செல் மார்ஷ் 3-வது இடத்தில் ஆடலாம். ஏனென்றால் வார்னர் - பிரித்வியை 3-வது இடத்தில் களமிறக்க முடியாது.

    4-வது இடத்தில் மணிஷ் பாண்டே. ரீலே ரூசோவ் அல்லது ரோவ்மன் போவெல் 5-வது இடத்தில் களமிறங்கலாம். 6-வது இடத்தில் சர்ஃப்ராஸ் கான். பெரும்பாலும் சர்ஃபராஸ் தான் கீப்பராக இருப்பார் என்று தெரிகிறது. வேறு பெரிய தேர்வுகள் அவர்களிடம் இல்லை. அவர்களின் கீப்பர் யார் என்பதே புரியாமல் தான் இருக்கிறது.

    பவுலிங்கில் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தான் ஸ்பின்னர்களுக்கு இருக்கின்றனர். இதனைவிட்டால் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பெரியளவில் இருக்கின்றனர். சேட்டன் சக்காரியா, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, ஆன்ரிக் நார்ட்ஜே ஆகிய 4 பேரில் 3 பேர் மட்டும் ப்ளேயிங் 11-ல் சேர்க்க வாய்ப்புள்ளது.

    பழைய அணிகளில் 3 அணிகள் மட்டும் இதுவரை கோப்பையை வெல்லாமல் இருக்கிறது. டெல்லி அணி கோப்பைக்கு அருகில் சென்றுவிட்டது. ஆனால் இந்த முறை அருகில் கூட வரமாட்டார்கள்.

    என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் இந்தாண்டு ஐபிஎல்-ல் விளையாட முடியாது. இதனையடுத்து புதிய கேப்டனாக டேவிட் வார்னர் களமிறங்குகிறார். இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்லாமல் உள்ள டெல்லி, இந்த முறை புதிய கேப்டனின் திட்டங்களால் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    • நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.
    • பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும்.

    ஜஸ்பிரித் பும்ரா நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாகத் தகுதி பெற வேண்டுமானால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கில் சில ஆட்டங்களைத் தவறவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய பேட்டர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

    முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா கடந்த செப்டம்பரில் இருந்து வெளியேறினார் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். பங்களாதேஷ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்து இந்தியாவுக்காக விளையாடவில்லை.

    இந்நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் முதலில் இந்திய வீரர். பிறகு உங்கள் பிரான்சைஸிற்கு (franchise) விளையாடுங்கள். எனவே, பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஏழு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது.

    அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்யத்துடன் வைத்திருக்கும்.

    என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    • விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான்.
    • இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை.

    காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பும்ரா தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பும்ரா இல்லாததால் இந்திய அணியின் வேகப்பந்து வரிசை தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இதனை ரசிகர்கள் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலேயே உணர்ந்தனர்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 206 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் மேலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர். இலங்கை அணி வீரர்கள் 9ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியில் தற்போது முகமது ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களைத் தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த திறமையை வெளிப்படுத்தவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியில் பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து விளையாடவில்லை. எனவே அவர் இல்லாமலும் விளையாடுவதற்கு இந்திய அணி பழகிக் கொள்ள வேண்டும்.

    விளையாட்டின் போது முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான். எனவே குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே நம்பி ஒரு அணி இருக்க கூடாது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் நீக்கப்பட்டார். இது நல்ல செய்தி இல்லைதான். ஆனால் அணி உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டியுள்ளது.

    ×