search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rinku singh"

    • ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
    • ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் மே 26-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்குகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.

    தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சொதப்பியதால், கடைசி 10-15 பந்துகளுக்காக ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் பிசிசிஐயிடம் இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற பினிஷர்களே அணிக்கு போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது. டி20 உலகக் கோப்பை அணித் தேர்வை கருத்தில்கொண்டு, சிஎஸ்கே, கேகேஆர் இடையிலான போட்டிக்கு ஸ்லோ விக்கெட்டை தயார் செய்திருந்தனர்.

    ஆனால், அந்த ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் 14 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காமல் 9 ரன்களை மட்டும் எடுத்து, தேஷ்பண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரிங்கு சிங் சொதப்பியதால், அவரை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.
    • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.

    கடந்த ஆண்டு இந்தியா அணிக்காக அறிமுகமான ரின்கு சிங், சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 11 இன்னிங்ஸ்களில், 356 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 89.00 மற்றும் 176 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு அரை சதங்களுடன் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அவரது தந்தை கான்சந்த் சிங் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ வைரலானது. கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற போதிலும், தனது தந்தை வேலையை விட்டு விட மறுத்தாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் என் தந்தையிடம் நம்மிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் சிலிண்டர்களை எடுத்துச் செல்லாமல் ஓய்வெடுக்கச் சொன்னேன். ஆனால் அவர் அதைச் ஏற்க மறுத்து விட்டார். மேலும் அவரது வேலையை அவர் விரும்புகிறார்.

    ஒருவர் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருந்தால் அவரிடம் வேலையை விட்டுவிடுங்கள் என்று சொல்வது மிகவும் கடினம். அவரே நினைத்தால் மட்டும்தான் அதை விட முடியும்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    • தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ஓவர்களில் துவக்க வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், டோனி அபாரமாக ஆடினர். ஹென்ரிக்ஸ் - டோனி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது.

    அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், திலக் வர்மா என ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் கிடைக்காததால் கேஎல் ராகுல் ரிங்கு சிங்குக்கு பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார். உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.

    ரிங்கு சிங் பந்து வீச்சில் டுசென் 36 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் ரிங்கு சிங் திறமையின் உச்சம் என பாராட்டி வருகின்றனர். ஒரு ஓவர் மட்டும் வீசிய ரிங்கு சிங் 2 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

    • கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள்.
    • அவர் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்து இந்தியா 180 ரன்கள் குவிக்க உதவினார்.

    இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது என்று கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட வரும்போது உங்களின் ஒவ்வொரு இன்னிங்சுக்கும் தனி மதிப்பு இருக்கும்.

    அப்படி கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள். அந்த வகையில் விளையாடும் ரிங்கு சிங் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எந்த வாய்ப்பையும் எளிதாக பெறவில்லை.

    என்று கம்பீர் கூறினார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்களை சேர்த்தது.

    கெபேஹா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 2வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிங்கு சிங் யாதவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.


     

    சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்த நிலையில் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜிதேஷ் ஷர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. ரிங்கு சிங் 68 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார். 

    தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. 

    • நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன்.
    • ஐ.பி.எல். போட்டியில் 6 ஆண்டுகளாக ஆடி வருகிறேன்.

    பெங்களூரு:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 4-வது ஆட்டத்தில் 20 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்த போட்டியிலும் இந்தியாவின் வெற்றி நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். ஐ.பி.எல். போட்டியில் 6 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். ஐ.பி.எல். எனக்கு நம்பிக்கை அளித்தது. நெருக்கடியான நிலையில் அமைதியாக இருக்க இந்த போட்டி கற்றுக் கொடுத்தது.

    உடற்பயிற்சி கூடத்துக்கு தினசரி சென்று பளுதூக்குதல் உள்ளிட்ட உடற் பயிற்சிகளை மேற்கொள்வேன். இந்த உடற்பயிற்சியால் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிப்பதற்கான ஆற்றலை அளிக்கிறது.

    இவ்வாறு ரிங்குசிங் கூறி உள்ளார்.

    • 2-வது போட்டியில் இந்தியா 235 ரன்கள் குவித்தது.
    • ரிங்கு சிங் 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் நான்கு சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தபோது, அனைவருடைய கண்ணிலும் பட்டவர்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங்.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி வேறு, சர்வதேச போட்டி வேறு. இவரால் அதேபோல் சிறப்பாக விளையாட முடியுமா? இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் ரன் குவித்து கொடுப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.

    ஆனால், முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலையில் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இருந்தபோதிலும், அது நோ-பால் என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    ரன்கள் அடிக்க வேண்டுமே, விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருக்கிறதே என்ற கவலை அவரது முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. ஆஹா... நமக்கு ஒரு பினிஷர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர். விமர்சகர்களும் முணுமுணுக்க தொடங்கினர்.

    நேற்றைய 2-வது போட்டியிலும் 14 பந்துகள் இருக்கும்போது களம் இறங்கினார். 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். 26 வயதேயாகும் ரிங்கு சிங்கை இனிமேல் ஒயிட்பால் கிரிக்கெட் இந்திய அணியில் தொடர்ந்து பார்க்கலாம். இவர்தான் இனிமேல் பினிஷர். தல தோனியை செய்த வேலையை இவர்தான் செய்வார் என ரசிகர்கள் வெளிப்படையாக நம்பிக்கை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    ரசிகர்களின் கருத்தை தனது புன்னகையால் மறைமுகமாக தெரிவித்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

    போட்டி முடிவடைந்தபின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின்போது சூர்யகுமார் யாதவ் பேசுகையில் "இளம் வீரர்கள் என் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்களிடம் முன்னதாகவே, முதல் பேட்டிங்கிற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மைதானத்தில் பனி அதிகமாக இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது குறித்து பேசினோம்.

    ரிங்கு சிங் முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது, அவர் வெளிப்படுத்திய நிதானம் அற்புதமானது. எனக்கு அவர் ஒருவரை நினைவூட்டினார் (புன்னகை). ஒவ்வொருவருக்கும் அதன் விடை தெரியும் (மீண்டும் புன்னகை)." என்றார்.

    இந்த அணியின் தலைசிறந்த பினிஷராக எம்.எஸ். டோனி திகழ்ந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது நிதானத்தை இழக்கமாட்டார். இறுதி கட்ட ஓவரை சிறப்பான வகையில் டார்கெட் செய்வார். தற்போது அதேவழியில் ரிங்கு சிங் செல்கிறார் என்பதை புன்னகை மூலம் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்திருக்கலாம்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
    • விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திருவனந்தபுரம்:

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இந்தப் போட்டி குறித்து இந்திய வீரர் திலக்வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ரிங்கு சிங் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருவதால் அவரிடம் இருந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்று கற்று வருகிறேன். இனி வரும் போட்டிகளில் நானும் அதை செய்ய விரும்புகிறேன். அதை செய்வேன் என்று நம்புகிறேன்.

    எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆட்டத்தை நிறைவு செய்ய நினைக்கிறேன். 5-வது வரிசையில் ஆடும் நான் எனது பங்களிப்பை முடிந்தவரை செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.

    இடதுகை பேட்ஸ்மேன் ஆன திலக் வர்மா, 11 டி20 போட்டியில் விளையாடி 243 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதம் அடங்கும்.

    • கடைசி கட்ட நெருக்கடியை சிறப்பாக எதிர்கொண்டு ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார்.
    • இவர் கொல்கத்தா அணியில் விளையாடும்போது தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசியவர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 23-ந்தேதி (நேற்று முன்தினம்) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 207 ரன்கள் குவித்தது.

    பின்னர் இந்தியா 19.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சூர்யகுமார் அவுட்டானதும் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ரிங்கு சிங் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை ரிங்கு சிங் ஆஃப்சைடு பவுண்டரிக்கு விரட்டினர். அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது. அதன்பின் அடுத்த மூன்று பந்துகளில் இந்தியா விக்கெடடுகளை இழந்தது. இதில் இரண்டு ரன்அவுட் ஆகும்.

    கடைசி பந்தை ரிங்கு சிங் சந்தித்தார். இக்கட்டான நேரத்தில் அவர் நெருக்கடிக்கு உள்ளாகவில்லை. நிதானமாக பந்தை எதிர்கொண்டு லாங்-ஆன் திசையில் சிக்ஸ் விரட்டினார். இந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது. இருந்தபோதிலும், இக்கட்டான நிலையில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. ரிங்கு சிங்கிடம் திறமையும் நிதானமும் இருக்கிறது என விமர்சகர்கள் பாராட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தல தோனியிடம் இருந்துதான், இக்கட்டான நிலையை எப்படி எதிர்ககொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-

    என்னுடைய நிதானம் ரகசியம், எம்.எஸ். தோனியிடம் கலந்துரையாடல் செய்ததன் மூலம் கிடைத்ததுதான். அவரிடம் நான் உரையாடியபோது, முடிந்த அளவிற்கு நிதானமாக இருக்க முயற்சிக்க வேண்டும். அதேபோல், கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர்களுக்கு நேராக மிட்ஆன்- மிட்ஆஃப் திசையில் ஷாட் செலக்சன் இருக்க வேண்டும் என்றார். அந்த வகையில்தான் இந்த போட்டியில் நிதானத்தை கடைபிடிக்க முயற்சி செய்தேன்.

    இவ்வாறு எம்.எஸ். தோனி அறிவுரை வழங்கியது குறித்து ரிங்கி சிங் தெரிவித்துள்ளார். ஆனால், தோனி எப்போது அறிவுரை வழங்கினார் என்பதை ரிங்கு சிங் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடைசி பந்து சிக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறித்து கவலை இல்லை. அணியின் வெற்றிதான் முக்கியம் என்றார். 

    இதுகுறித்து ரிங்கி சிங் கூறுகையில் "நான் சிக்ஸ் அடித்த பந்து நோ-பால் என்று கருதவில்லை. வெளியில் இருந்து அக்சார் பட்டேல்தான் நோ-பால் என்றார். அதன்பின்தான் நோ-பால் என்று எனக்குத் தெரியும். வெற்றிக்கான சிக்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்பது பெரிய விசயம் அல்ல. நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றோம். இதுதான் விசயம்" என்று ரிங்கு சிங் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டியில் கொல்கததா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங், தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசினார். அப்போது தேர்வாளர்கள் கண்ணில் பட்டு இந்திய அணிக்கு தேர்வானார்.

    • சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய காசி வாரியர்ஸ் அணி 16 ரன்கள் எடுத்தது.
    • சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் ரன் எடுக்கவில்லை.

    லக்னோ:

    தமிழகத்தில் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதை போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 20 ஓவர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உ.பி.டி20 லீக் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் மீரட் மவ்ரிக்ஸ் மற்றும் காசி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மீரட் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் அடித்தது. இதையடுத்து 182 ரன் இலக்கை நோக்கி ஆடிய காசி வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களே எடுத்தது.

    இதன் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய காசி வாரியர்ஸ் அணி 16 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 17 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மீரட் அணி தரப்பில் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் களம் இறங்கினார்.

    சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத ரிங்கு சிங் அடுத்த மூன்று பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியை வெற்றி பெறச்செயதார். முதலில் பேட்டிங் செய்த போது வெறும் 15 (22) ரன்கள் மட்டுமே ஏமாற்றத்தை கொடுத்த ரிங்கு சிங் சூப்பர் ஓவரில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் செய்ததை போன்றே அடுத்தடுத்து சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.


    ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமான அவர் 2-வது போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சூப்பர் பினிஷிங் கொடுத்து தான் முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று அனைவரும் பாராட்டுகளை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம்.
    • 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

    டூப்ளின்:

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.

    ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இன்றைய ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரிங்குசிங் கூறியதாவது:-

    அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம். 3-வது போட்டியிலும் வென்று உயர்நிலையை அடைவதை இலக்காக கொண்டுள்ளோம்.

    முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். ஆனால் மழையால் என்னால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

    ஐ.பி.எல். போட்டியில் 5 சிக்சர்கள் அடித்தது எனது வாழ்க்கையை மாற்றியது. அந்த தருணத்தை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்து உள்ளார்கள். ரசிகர்கள் என் மீது அன்பை பொழிவதால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    25 வயதான ரிங்குசிங் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வானார். 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் ரிங்குசிங் 21 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது.
    • டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.

    இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மூலம் ரிங்கு சிங் மற்றும் பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.

    ஐபிஎல் தொடர் மூலம் ரிங்கு சிங் இந்திய அணிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக பினிஷிங் ரோல் செய்தார். ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 5 பந்துகளை சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாக காணப்பட்டார்.

    இந்நிலையில் டோனி மற்றும் யுவராஜ் இடத்தை ரிங்கு சிங் பூர்த்தி செய்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். அவர் 5 அல்லது 6-வது இடத்தில் சிறப்பாக செயல்படுவார். ஒரு சிறந்த ஃபினிஷராகவும் அவரால் இருக்க முடியும். டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.

    நாங்கள் அத்தகைய வீரர்களை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அது இதுவரை வேலை செய்யவில்லை. ரிங்கு ஒரு சிறந்த பீல்டரும் கூட. உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் நிறைய மேம்பட்டு இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்.

    ஹர்திக் பாண்டியா ஒரு பேட்டராக மாறி, 3 அல்லது 4-வது வரிசையில் விளையாடுவதால், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. உங்களிடம் அக்சர் படேல் போன்ற ஒருவர் இருக்கிறார், ஆனால் ரிங்கு சிங்தான் அந்த இடத்துக்கு பொறுத்தமானவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×