search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி கொடுப்பார்- டிவில்லியர்ஸ் எச்சரிக்கை
    X

    தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி கொடுப்பார்- டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

    • தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
    • கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் ஆட்டம், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

    இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கடும் சவாலாக ஜஸ்பிரீத் பும்ரா இருப்பார். அவர்களுக்கு கடும் நெருக்கடியை அவர் கொடுப்பார். பும்ரா பந்து வீசத் தொடங்கினால், எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன.

    கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். அவர் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்துகளை வீசுவதில் அவர் வல்லவர்.

    இந்த முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தலைக் கொடுக்கும்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×