என் மலர்
நீங்கள் தேடியது "Jacques Kallis"
- இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
- அவரிடம் சச்சின், ஜாக் காலிஸ் ஆகியோரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பட்லர், நான் காலிஸ் என சொல்லப் போகிறேன். காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் என ரிக்கி பாண்டிங் நேரடியாக சொல்லியிருக்கிறார். அவரது சாதனைகளை ஒன்றாகச் சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம். நீங்கள் ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம் என தெரிவித்தார்.
- தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும்.
செஞ்சூரியன்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.
முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் வருகிற 10-ந் தேதி டர்பனில் நடக்கிறது.
ஒருநாள் போட்டி 17-ந் தேதியும், டெஸ்ட் தொடர் 26-ந் தேதியும் தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸ் கூறியதாவது:-
இந்திய அணி ஒரு நல்ல அணி. ஆனால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமானது. முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும். இது ஒரு நல்ல தொடராக இருக்கும்.

ஒரு அணி மற்றொன்றை விட சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியின் வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கும். திறமையான வீரர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆலோசகர்களை பெற்று தங்களை வளர்த்துக் கொண்டால் சிறப்பாக விளையாட முடியும்.
மூத்த வீரர்கள், ஆட்ட நுணுக்கங்களை பெற்று இருப்பார்கள். அதை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இளம் வீரர்கள் விளையாடாவிட்டாலும், அவர்கள் மூத்த வீரர்களுடன் கற்றுக் கொள்ளக்கூடிய சூழலில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களின் பணியாகும்.
அறிமுகமில்லாத இடங்களுக்கு விளையாட செல்லும்போது இளம் வீரர்கள், மூத்த வீரர்களிடையே இருந்து அவர்களின் அனுபவங்களை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






