என் மலர்
நீங்கள் தேடியது "SachinTendulkar"
- துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கிடையே, புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது அதன்படி சச்சினும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது .
- தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார்.
- ஜோரூட் 2012-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோரூட். அவர் நேற்று முன்தினம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். ரிக்கி பாண்டிங்கை முந்தினார். தெண்டுல்கர் 15,921 ரன் களுடன் (200 டெஸ்ட்) முதல் இடத்திலும், ஜோரூட் 13,409 ரன்னுடன் (157 போட்டி) 2-வது இடத்திலும் உள்ளார்.
இந்த நிலையில் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க முடியுமா? என்பதற்கு ஜோரூட் அளித்த பதில் வருமாறு:-
கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின் தெண்டுல்கர். அவர் சாதித்த அனைத்து விஷயங்களும் நம்ப முடியாதவை. நான் பிறப்பதற்கு முன்பே அவர் டெஸ்டில் அறிமுகமானார்.
சிறு வயதில் இருந்தே அவரது ஆட்டத்தை பார்த்து பின்பற்றி வருகிறேன். அவருக்கு எதிராக ஒரு டெஸ்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றது சிறந்ததாகும். அவர் பேட்டிங் செய்ய வரும்போது முழு ரசிகர்கள் கூட்டமும் ஆராவரம் செய்தது. அதை பார்ப்பது வினோதமாக இருந்தது. தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பதில் நான் கவனம் செலுத்த போகும் ஒன்றல்ல.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க ஜோ ரூட் இன்னும் 2,512 ரன் தேவை. தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். ஜோரூட் 2012-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார்.
- இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
- அவரிடம் சச்சின், ஜாக் காலிஸ் ஆகியோரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பட்லர், நான் காலிஸ் என சொல்லப் போகிறேன். காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் என ரிக்கி பாண்டிங் நேரடியாக சொல்லியிருக்கிறார். அவரது சாதனைகளை ஒன்றாகச் சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம். நீங்கள் ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம் என தெரிவித்தார்.
- ஆர்.சி.பி. அணி வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.
- பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது மிகவும் துயரமானது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்திய முன்னாள் வீரரான சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், "பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது மிகவும் துயரமானது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் என் இதயம் இரங்குகிறது. அனைவருக்கும் அமைதியும் பலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது.
இதற்கிடையே, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் வசமானது.
இந்த ஆட்டத்தில் 48 ரன் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 504-ஆக உயர்ந்தது. அவர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (475 ரன்) ஆரஞ்சு தொப்பியை தட்டிப் பறித்துள்ளார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று 54 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்சுக்குப் பிறகு இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரராக சாய் சுதர்சன் திகழ்கிறார்.
இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 59 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்ததே அதிவேகமாக இருந்தது. அதனை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
- கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
- காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.
கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.
பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
To Amir, the real hero. Keep inspiring!
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2024
It was a pleasure meeting you. pic.twitter.com/oouk55lDkw
- வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.
- ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்.
மும்பை:
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நெருக்கடியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தில் 6 இன்னிங்சில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல விராட் கோலியின் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.
இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்தனர். மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை ரோகித் சர்மாவே முடிவு செய்வார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ததாக நம்புகிறேன். அது போன்று ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். ஓய்வு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், அணிக்காக எந்த அளவுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது எல்லாம் சம்பந்தப்பட்ட வீரரின் தனிப்பட்ட முடிவை பொறுத்து அமையும். தேர்வுக் குழு உறுப்பினர்களின் கைகளில் இறுதி முடிவு உள்ளது என்பதே உண்மை. வீரர் ஒருவர் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளிலும் உள்ளது.
இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி:
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் வீட்டு பால்கனியில் பருந்து ஒன்று அடிப்பட்ட நிலையில் வந்தது. காயமடைந்து இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து சச்சின் அந்த பருந்துக்கு உணவு அளித்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்.
பின்னர் பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பறவையை மீட்டு கொண்டு சென்றனர். அந்த வீடியோவுடன் காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுடன் சச்சின் கலந்தாலோசிக்கிறார். மேலும், இது போன்று விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சச்சின் பதிவு செய்த இந்த வீடியோவை 54 ஆயிரம் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சச்சின் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாக பலர் கூறினர். #SachinTendulkar
இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணியின் தலைமை செயலாளர் பிரதீப் ராஜ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிக்கு 4 லட்சம் ரூபாய் பேட்டியளித்தாக தெரிவித்தார்.
சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுவதாக சச்சினுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுகல்கரின் அலுவலக அதிகாரிகள் சில கேள்விகள் கேட்டனர். அடுத்த மூன்று நாட்களில் 4.39 லட்சம் ரூபாயை சச்சின் நன்கொடையாக வழங்கினார்.
சச்சின் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த பிரதீப், ஆசிய கோப்பை போட்டியில் சக்கரநாற்காலி அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார். #SachinTendulkar #wheelchaircricketteam






