search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Manjrekar"

    • ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது.
    • ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் 10 அணிகளில் பல்வேறு இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளுக்காக விளையாட தயாராகி வருகின்றனர்.

    இருப்பினும் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

    முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இதே போல் ஒரு வாரம் முன்பாக இங்கிலாந்து பயணித்து வலை பயிற்சிகளை மட்டும் செய்து நேரடியாக களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களை 2023 ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட சில போட்டிகளில் ஓய்வு பெறுமாறு ரோகித் சர்மா அறிவுறுத்தியிருந்தார். சொல்லப்போனால் மும்பை அணியில் சில போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வெடுப்பார் என்றும் அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழி நடத்துவார் என்றும் நேற்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் பல கோடி ரூபாய்களை கொடுக்கும் ஐபிஎல் நிர்வாகங்கள் ஏன் அது போன்ற ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்த வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

    ஐபிஎல் தொடரின் வெற்றி பெரும்பாலும் வீரர்களின் ஃபிட்னஸை அடிப்படையாக கொண்டுள்ளது. அதில் அனைவரும் தங்களுடைய முழு திறமைக்கேற்றார் போல் விளையாடுகிறார்கள்.

    அதனாலயே ரசிகர்கள் விரும்பும் இந்த தொடர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதை விரும்பும் ஒருவராக நான் இருப்பதில்லை. ஏனெனில் சர்வதேச அளவில் விளையாடும் போதும் காயத்தை சந்தித்து நிறைய முக்கிய வீரர்கள் வெளியேறுகிறார்கள் என்பதால் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    எனவே ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. ஏனெனில் நிறைய பணத்தை செலவழிக்கும் அணி உரிமையாளர்களுக்கு தாங்கள் வாங்கும் வீரர்களை முழுமையாக தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்தும் சுதந்திரத்தை பெற வேண்டும். அதில் ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.

    என்று கூறியுள்ளார். 

    • சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
    • நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    மும்பை:

    இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிசிசிஐ அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் தூக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணியில் விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ், முகமது சிராஜ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாவது:-

    ஷிகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். அதை எல்லாம் தாண்டி ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.

    ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் தவான் நன்றாக விளையாடி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் சில போட்டிகளில் ரன் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு மாற்றாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.

    இதனால் ஷிகர் தவானுக்கு சிக்கல் அதிகரித்து விட்டது. இதேபோன்று இஷான் கிஷனும் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்காக தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் தொடரில் சாதித்ததற்காக கிடைத்த வெகுமானம். கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

    ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அவர் அணியை வழி நடத்திய விதம் பாராட்டத்தக்கது. விராட் கோலியை பொறுத்தவரை டி20 போட்டியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிகம் விளையாடுவார்.

    இந்திய ஒரு நாள் அணியில் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வதால் அவர் நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் டி20 அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதால், விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்படும்.

    எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார். இதனால் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று சொல்ல முடியாது.

    • தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை.
    • தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும்.

    மும்பை:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இப்போட்டி தொடருக்கான இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா அயர்லாந்து தொடரில் ஒரு கவன ஈர்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை. இது மிகவும் கடினமான பணி. அதை ஐ.பி.எல்.லின் தீபக் ஹூடா அற்புதமாக செய்தார். அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    வறண்ட ஆடு களத்தில் முக்கியமான சூழ்நிலைகளில் தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும். அவரை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்றார்.

    ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தி உள்ளார். #SanjayManjrekar #TestCricket
    புதுடெல்லி:

    பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு அடிலெய்டுவில் நடந்த இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதின.

    இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ, இதற்கு ஆதரவாக இல்லை. இதுவரை இந்தியாவில் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டி கூட நடைபெறவில்லை.



    இந்த நிலையில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறும்போது, பகல்-இரவு டெஸ்டில் நாம் ஏன்? இன்னும் விளையாடாமல் இருக்கிறோம். அதிகமான ரசிகர்களை கவர பகல்-இரவு டெஸ்ட் அவசியமானது” என்றார். #SanjayManjrekar #TestCricket
    ×