search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhawan"

    • பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் எடுத்துள்ளார்.
    • ராஜஸ்தான் ஐந்தில் நான்கில் வெற்றி பெற்று 5-வது வெற்றியை பதிவு செய்யும் வகையில் களம் காண்கிறது.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் இன்று சண்டிகரில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் அணியில் இன்று அந்த அணியின் கேப்டன் தவான் களம் இறங்கவில்லை. அதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது.

    • இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
    • இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம் பெறாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு மனதை தேற்றிக் கொண்டேன். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பிடித்துள்ள இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

    இந்திய அணிக்கு நான் திரும்புவதற்கு தயாராக இருப்பேன். அதனால் தான் உடல்தகுதியை நல்ல நிலையில் வைத்திருக்க தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு நான் தயார். கிரிக்கெட்டை நான் இன்னும் அனுபவித்து விளையாடுகிறேன். இதே போல் பயிற்சியிலும் உற்சாகமாக ஈடுபடுகிறேன். இவை எல்லாம் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள். எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தேர்வாளர்களிடம் பேசவில்லை.

    அடுத்த கட்டமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும். அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். இதே போல் சயத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலும் விளையாடுவேன்.

    இவ்வாறு தவான் கூறினார்.

    'உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நம்மிடம் உள்ளது. அத்துடன் பரிச்சயமான மைதானம் மற்றும் சாதகமான உள்ளூர் சூழலில் நடப்பதால் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது' என்றும் தவான் குறிப்பிட்டார்.

    • சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
    • நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    மும்பை:

    இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிசிசிஐ அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் தூக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணியில் விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ், முகமது சிராஜ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாவது:-

    ஷிகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். அதை எல்லாம் தாண்டி ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.

    ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் தவான் நன்றாக விளையாடி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் சில போட்டிகளில் ரன் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு மாற்றாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.

    இதனால் ஷிகர் தவானுக்கு சிக்கல் அதிகரித்து விட்டது. இதேபோன்று இஷான் கிஷனும் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்காக தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் தொடரில் சாதித்ததற்காக கிடைத்த வெகுமானம். கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

    ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அவர் அணியை வழி நடத்திய விதம் பாராட்டத்தக்கது. விராட் கோலியை பொறுத்தவரை டி20 போட்டியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிகம் விளையாடுவார்.

    இந்திய ஒரு நாள் அணியில் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வதால் அவர் நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் டி20 அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதால், விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்படும்.

    எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார். இதனால் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று சொல்ல முடியாது.

    • வெஸ்ட் இண்டீசில் புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
    • கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே வெற்றிகளைப் பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதில் 7 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 58 (74) ரன்களில் அவுட்டான போது வந்த மழை ஒரு மணி நேரம் பெய்து குறுக்கிட்ட நிலையில் மீண்டும் போட்டி துவங்கிய போது மீண்டும் ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்து சென்றது. அதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி மீண்டும் தொடங்கிய போது 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் – ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினர். அதில் ஸ்ரேயஸ் ஐயர் 44 (34) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 8 (6) ரன்களில் அவுட்டானார். அதனால் 36 ஓவரில் இந்தியா 225/3 ரன்கள் எடுத்தபோது மீண்டும் வந்த மழை முதல் இன்னிங்ஸ் முடியும் நேரம் வரை வெளுத்து வாங்கியது.

    அதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98* (98) ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஹெய்டன் வால்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

    அதை தொடர்ந்து டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடியது. இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து சாதித்து காட்டியுள்ளது.


    அதிலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து இந்தியா புதிய சாதனையுடன் கோப்பையை வென்றுள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. கங்குலி (2002) : 2 -1 (5) 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    2. எம்எஸ் டோனி (2009) : 2-1 (4) 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    3. சுரேஷ் ரெய்னா (2011) : 3-2 (5)

    4. விராட் கோலி (2017) : 3-1 (5) 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    5. விராட் கோலி (2019) : 2-0 (3), 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது

    6. ஷிகர் தவான் (2022): 3-0 (3)*

    மேலும் கடந்த 2006-க்குப்பின் தொடர்ச்சியாக 12 தொடர்களில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களில் வென்ற அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது.

    2-வது இடம் : பாகிஸ்தான் – ஜிம்பாப்வேக்கு எதிராக (11)

    சிட்னியில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

    இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி  இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    உள்ளூர் தொடர்களில் எம்எஸ் டோனி, தவான் ஏன் விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #MSDhoni #Gavaskar
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போதைய நிலையில் டோனி ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் நிலையில் உள்ளார். இதனால் அதிக நேரம் ஓய்வு கிடைக்கிறது. தற்போது தவான் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இதனால் அவரும் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

    இந்தியாவின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடவில்லை. இந்நிலையில் எம்எஸ் டோனி மற்றும் தவான் ஏன் உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ நீங்கள் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை? என்று நாம் ஏன் கேட்கக்கூடாது. உண்மையிலேயே பிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.

    டோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடவில்லை. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. தற்போது தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடப்போவதில்லை.



    இதனால் அக்டோபரில் இருந்து அவர் விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும்.

    உங்களுக்கு வயது ஆகஆக, உங்களுடைய ஆட்டத்திற்கு இடையே இடைவெளி ஏற்பட்டால், ஆட்டத்திறன் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் உள்ளூர் தொடரில் எந்தவொரு பார்மில் விளையாடினாலும், நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இது சிறந்த பயிற்சியாக அமையும்’’ என்றார்.
    இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா, அஸ்வின் உடல் தகுதி பரிசோதனைக்கு பின்னர் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தேர்வு பெறுவார்கள். #INDvWI #IshantSharma #Ashwin #BCCI
    புதுடெல்லி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் அக்டோபர் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் நேற்று கூடியது. அவருடன் தேவங் கார்வி மட்டுமே வந்து இருந்தார்.

    மற்ற தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சரண்தீப்சிங் துபாயில் உள்ளார். ஜதின் பரஞ்செ, கதன்கோடா ஆகிய இருவரும் விஜய் ஹசாரே போட்டியை பார்ப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த 3 தேர்வு குழு உறுப்பினர்களும் வராததால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேகப்பந்து வீரர் இஷாந்த்சர்மா, அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர்கள் தேர்வாக உடல் தகுதி பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இருவருக்கும் வருகிற 29-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    அஸ்வின் ஏற்கனவே காயத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமில் புனர்வு பெற்று வருகிறார். அவருடன் இஷாந்த்சர்மா இணைவார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் இயக்க நிபுணர் அளிக்கும் உடல் தகுதி அறிக்கை அடிப்படையில் இருவரது தேர்வு இருக்கும்.

    உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடிய பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அதை மனதில் கொண்டு 15 வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்கிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தவானின் பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்ற நிலை இருக்கிறது. #INDvWI #IshantSharma #Ashwin #BCCI #TeamIndia
    ஷிகர் தவான்- ரோகித் சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன் குவித்ததன் மூலம் சேசிங்கில் அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. #Asiyacup2018 #RohitSharma #ShikharDhawan
    ஷிகர் தவான்- ரோகித் சர்மா ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன் குவித்தது. இதன் மூலம் சேசிங்கில் தொடக்க விக்கெட்டுகள் அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தது.

    இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரக ஹேமில்டன் மைதானத்தில் காம்பீர்- ஷேவாக் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 201 ரன் (அவுட் இல்லை) குவித்ததே சாதனையாக இருந்தது.

    பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த தொடக்க ஜோடி என்ற சாதனையை தவான்- ரோகித் சர்மா படைத்தனர். இதற்கு முன்பு கங்குலியும், தெண்டுல்கரும் தொடக்க ஜோடியாக 1998-ம் ஆண்டு டாக்காவில் 159 ரன் எடுத்ததை அவர்கள் கடந்தனர். ஒட்டு மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் எடுத்த 2-வது ஜோடியாகும்.



    1996-ம் ஆண்டு சார்ஜாவில் 2-வது விக்கெட்டுக்கு சித்துவும், தெண்டுல்கரும் 231 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது. #Asiyacup2018 #RohitSharma #ShikharDhawan
    இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாததுதான் தொடரை இழக்க காரணம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #Sehwag
    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் கடுமையாக போராடிய போதிலும் வெற்றியை பறிக்க முடியவில்லை.

    இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலி மட்டுமே தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தவான் 162 ரன்களும், கேஎல் ராகுல் 299 ரன்களும், ரகானே இரண்டு அரைசதத்துடன் 257 ரன்களும், புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.



    இவர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முதன்மையான காரணம் என்று முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து தொடரை 4-1 என கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இந்தியா சிறப்பாக விளையாடியது. ஆனால், நிலையான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. ரிஷப் பந்த், லோகுஷ் ராகுல் கடைசி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.



    இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, பந்து வீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்ரகள். வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்’’ என்று பதவிட்டுள்ளார்.
    245 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 46 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.



    புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 10 ரன்னுடனும், ரகானே 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 199 ரன்கள் தேவை.
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. புஜாரா, குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நேற்று தொடங்குவதாக இருந்தது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    2-வது நாள் இன்று உள்ளூர் நேரப்படி சரியான 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் போப் அறிமுகமாகியுள்ளார். பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.



    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×