மயங்க் அகர்வாலுக்கு என்னுடைய ஆதரவு உண்டு: தவான்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார்.
தவான், மயங்க் அகர்வால்
தவான், மயங்க் அகர்வால்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் லக்னோ அணிக்கு சென்றதுடனும், அணியின் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்துள்ளது. அனுபவ வீரரான ஷிகர் தவான் டெல்லி அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு மாறியுள்ளார். மயங்க் அகர்வாலுக்கு கீழ் விளையாட இருக்கும் தவான், தன்னுடைய ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘பஞ்சாப் அணிக்காக விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இது எனக்கு 2-வது வீடு போன்றது. நான் ஒரு சரியான பஞ்சாபி நபர், அது என் ரத்தத்தில் உள்ளது. நான் மிகவும் இந்த தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் சிறந்த அணியை பெற்றுள்ளோம். நாங்கள் வெற்றியை பதிவு செய்து இந்தத் தொடரை முடிப்போம் என்பதை என்றால் உறுதியாக கூற இயலும்.

மயங்க் அகர்வால் சிறந்த வீரர். அவர் சிறந்த கேப்டனாக செயல்படுவார். அவருக்கு என்னுடைய ஆதரவை வழங்குவேன். அவர் முதிர்ச்சியடைந்த வீரர். சீனியர் வீரர். அவருடைய கம்பெனியுடன் மகிழ்ச்சியாக விளையாடுவேன். நாங்கள் நன்றாக பழகுவோம்’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com