என் மலர்
நீங்கள் தேடியது "சச்சின் டெண்டுலகர்"
- தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார்.
- ஜோரூட் 2012-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோரூட். அவர் நேற்று முன்தினம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். ரிக்கி பாண்டிங்கை முந்தினார். தெண்டுல்கர் 15,921 ரன் களுடன் (200 டெஸ்ட்) முதல் இடத்திலும், ஜோரூட் 13,409 ரன்னுடன் (157 போட்டி) 2-வது இடத்திலும் உள்ளார்.
இந்த நிலையில் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க முடியுமா? என்பதற்கு ஜோரூட் அளித்த பதில் வருமாறு:-
கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின் தெண்டுல்கர். அவர் சாதித்த அனைத்து விஷயங்களும் நம்ப முடியாதவை. நான் பிறப்பதற்கு முன்பே அவர் டெஸ்டில் அறிமுகமானார்.
சிறு வயதில் இருந்தே அவரது ஆட்டத்தை பார்த்து பின்பற்றி வருகிறேன். அவருக்கு எதிராக ஒரு டெஸ்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றது சிறந்ததாகும். அவர் பேட்டிங் செய்ய வரும்போது முழு ரசிகர்கள் கூட்டமும் ஆராவரம் செய்தது. அதை பார்ப்பது வினோதமாக இருந்தது. தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பதில் நான் கவனம் செலுத்த போகும் ஒன்றல்ல.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தெண்டுல்கர் சாதனையை முறியடிக்க ஜோ ரூட் இன்னும் 2,512 ரன் தேவை. தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். ஜோரூட் 2012-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார்.
- விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரில் யார் சிறந்தவர் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
- கம்பீர் முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர். இவர் தொடர்பாக அடிக்கடி செய்திகள் வருவது உண்டு. சில நாட்களுக்கு முன்னர் கூட ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பேட்டியில் யாரும் எதிர்ப்பார்க்க முடியாத வகையில் பதில் அளிப்பார்.
அதுபோன்று தற்போது ஒரு பேட்டியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு பதிலை அளித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
தி படா பாரத் ஷோவில் விவேக் பிந்த்ராவுடன் ஒரு நேர்காணலுக்காக கம்பீர் அமர்ந்திருந்தார். அவரிடம் இந்திய அணி இதுவரை தயாரித்த சிறந்த பேட்ஸ்மேன்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கருத்து கேட்கப்பட்டது. மேலும், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களும் வழங்கப்பட்டன.
இருப்பினும், கம்பீர் முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தார். அவர் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கை தனது பதிலாகக் குறிப்பிட்டார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார். மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
இதே போல 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதான சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து (104) ரன்கள் குவித்து கடினமான இலக்கு வைப்பதற்கு உதவினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1996-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர்.

இந்நிலையில் சச்சின் -கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
என்று சேவாக் கூறினார்.






