என் மலர்

    நீங்கள் தேடியது "Tendulkar"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கை.
    • ஜெய்ஷா அறிவிப்புக்கு முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா வரவேற்பு.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் புத்திசாலித்தனமான முன்னற்ற நடவடிக்கையாக இது கருதப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


    இதேபோல் பிசிசிஐயின் அறிவிப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல,உலகெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்புக்கு விராட்கோலியும் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்துள்ளது என்று தெண்டுல்கர் மற்றும் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND

    மும்பை:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. 72 ஆண்டு கால வரலாற்றில் புதிய சரித்திரத்தை வீராட்கோலி படைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

    அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது.

    இந்தியா தொடரை வெல்ல புஜாராவும் (521 ரன் குவிப்பு), பும்ராவும் (21 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர்.

    ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணியை முன்னாள் கேப்டன்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர். அதன் விவரம்:-

    தெண்டுல்கர்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான நாள் ஆகும். இதை பொக்கி‌ஷமாக கருதுகிறேன். இந்திய வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

    பேட்டிங்கில் புஜாரா மாறுபட்ட நிலையில் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களும், ஜூனியர் வீரர்களும் இணைந்து இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். ரிசப்பன்ட், குல்தீப் யாதவ் அணிக்கு மேலும் பலம் சேர்க்க கூடியவர்கள்.

    கவாஸ்கர்: இந்திய கிரிக்கெட்டை வீரர்கள் பெருமை அடைய செய்து விட்டனர். வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபோது நானும் அணியில் இருந்தேன். அந்த தருணங்கள் மிகவும் சிறப்பானது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சாதித்தபோது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுபட்டது. உடல் தகுதியிலும் சிறப்பாக உள்ளது. இதை கேப்டன் நிரூபித்து விட்டார். ஆஸ்திரேலிய அணியில் சுமித், வார்னர் இல்லாதது இந்தியாவின் தவறு அல்ல. ஆஸ்திரேலிய அணி தான் அவர்கள் இல்லாமல் களம் இறங்கியது. இருவரது தடை காலத்தை குறைத்து இருக்கலாம்.

    கங்குலி: இது ஒரு வெறித்தனமான வெற்றியாகும். இந்திய வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள். 400 முதல் 600 ரன்கள் வரை குவித்தது மிகவும் முக்கியமானது. புஜாரா, பும்ரா அபாரமாக செயல்பட்டு தொடரை வெல்ல காரணமாக இருந்தார்கள்.

    ரிசப்பன்ட் நன்றாக விளையாடினார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. 2003-04-ல் இருந்த எனது அணியுடன், தற்போதுள்ள வீராட்கோலி அணியை ஓப்பீட்டு கேட்கப்படுகிறது. நான் எப்போதுமே ஒப்ரீஜீடமாட்டேன். அதனால் தான் இது மாதிரியான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது.

    வி.வி.எஸ்.லட்சுமண்: ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி பாராட்டு மழையில் நனைகிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வரலாறு படைக்க முடிந்தது. ஒவ்வொரு வீரரின் செயல்பாடும் சிறப்பாக இருந்தது.

    பி‌ஷன்சிங் பெடி: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மண்ணில் தோல்வியை சந்தித்த பிறகு ஆஸ்திரேலியாவில் பெற்ற இந்த வெற்றி வியக்கத்தக்கது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் வீழ்த்தியது சிறப்பானது. புஜாராவும், பும்ராவும் நிலையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்கள்.

    ஷேவாக்: இந்திய வீரர்களை நினைத்து ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். #AUSvIND

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி சமன் செய்தார். #AUSvIND #ViratKohli #Tendulkar
    பெர்த் டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்து சதம் கண்டதோடு, நிறைய சாதனைகளையும் படைத்தார். அதன் விவரம் வருமாறு:-

    * டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 25-வது சதம் (127 இன்னிங்ஸ்) இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 25 சதங்களை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 68 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக நீடிக்கிறது. சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் தங்களது 25-வது சதங்களை முறையே 130 மற்றும் 138 இன்னிங்ஸ்களில் எடுத்தனர்.



    * ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலியின் 6-வது செஞ்சுரியாக இது பதிவானது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய இந்தியரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் (9 ), வாலி ஹேமன்ட் (7) ஆகியோருக்கு அடுத்து தெண்டுல்கர், இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சுட்கிளிப் (தலா 6 சதம்) ஆகியோருடன் 3-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார்.

    * 30 வயதான விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 10 டெஸ்டில் பங்கேற்று அதில் 19 இன்னிங்சில் பேட் செய்து 1,152 ரன்கள் (சராசரி 60.63) சேர்த்துள்ளார். அங்கு குறைந்தது 15 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் அதிக சராசரியை பெற்றுள்ள ஆசிய நாட்டவர் கோலி தான். #AUSvIND #ViratKohli #Tendulkar

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்திய அணியில் எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். #Tendulkar
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு நிறைவுடன் காணப்படுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணிகளில் ஒன்றாக இதனை நான் கணிக்கிறேன். எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் உள்ளனர். ஸ்விங் செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார், உயரமான பவுலரான இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசக்கூடிய பும்ரா, மிகவும் வேகமாக பந்து வீசக்கூடிய உமேஷ்யாதவ் என்று நல்ல கலவையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அமைந்துள்ளனர்.

    இதில் புவனேஷ்வர்குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய லெவன் அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர் இடம் பெற வேண்டும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனை எதிரணியை பொறுத்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். 
    ×