என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganguly"

    • தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ. பி.எல்.லை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தத் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சீசனில் கிரஹாம் போர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லாததால் தற்போது அவர், நீக்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் துணை பயிற்சியாளராக உள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

    மும்பை:

    லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பான 5-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.

    கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு 10-க்கு10 மதிப்பெண் கொடுப்பேன். இந்திய அணியின் சூப்பர்மேன்கள் கலக்கி விட்டனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி.

    கங்குலி:-

    இந்திய அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

    சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் சிராஜ் இந்திய அணியை அவ்வளவு எளிதாக தோற்கவிடமாட்டார். ஓவல் டெஸ்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டனர்.

    வீராட் கோலி:-

    இந்திய அணியின் சிறந்த வெற்றி. சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதியும், தொடர் முயற்சியும் இந்த அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளது. அணிக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சிராஜுக்கு சிறப்பு பாராட்டு. அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனில் கும்ப்ளே:-

    இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. என்ன ஒரு அருமையான டெஸ்ட் தொடர். அற்புதமாக ஆடிய 2 அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டனர் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.

    புஜாரா:-

    வரலாற்று வெற்றி. இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரசியமாக சென்ற இந்த தொடரில் சிறப்பான முடிவு கிடைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப்போன்று சிறந்தது வேறு ஒன்றுமில்லை.

    ஹர்பஜன் சிங்:-

    முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசினார்கள். இந்திய அணிக்கு என்ன ஒரு சிறப்பான வெற்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ரகானே:-

    டெஸ்ட் கிரிக்கெட் இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. மிகவும் பரபரப்பான போட்டி. அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.

    • 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும்.
    • 4ஆவது போட்டியை போன்று பேட்டிங் செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் எனத் தெரியவில்லை. வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர். இதனால் குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீருக்கு கங்கலி அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் இணைத்து, சரியான அட்டாக் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீரை அறிவுறுத்துகிறேன். இது போன்று பேட்டிங் (4ஆவது போட்டி) செய்தால் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற முடியும்.

    இது இளம் வீரர்களை கொண்ட அணி. அணி கட்டமைப்புக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மான்செஸ்டர் 4ஆவது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்ததை பார்க்கும்போது, லார்ட்ஸ் போட்டியில் தோல்வியடைந்ததற்காக கவலைப்படும்.

    மான்செஸ்டர் டெஸ்டிடில் 5ஆவது நாள் உண்மையிலேயே சிறப்பாக பேட்டிங் செய்தது, லார்ட்ஸ் மைதானத்தில் 190 இலக்கை எட்டியிருக்க வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் பல டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு நல்லது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள்.
    • எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.

    இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடினார். நான்கு இன்னிங்சில் ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் அடித்தார். எட்ஜ்பாஸ்டனில் (269+161) ரன்கள் அடித்து அபார சாதனைப் படைத்தார்.

    இந்த நிலையில் சுப்மன் கில் குறித்து கங்குலி கூறியதாவது:-

    சுப்மன் கில்லிடம் நான் பார்த்ததில் இதுதான் சிறந்த ஆட்டம். இதனால் நான் ஆச்சர்யம் படவில்லை. இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள். எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட்டில் திறமையான ஏராளமான வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் வீரர்களை கண்டு பிடிக்கலாம். சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை புதிய திசைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை நான் நம்புகிறேன். தற்போதுதான் அவர் கேப்டனாகியுள்ளார். இது அவருடைய ஹனிமூன் காலம். ஆனால், காலப்போக்கில் அவருக்கு அதிக நெருக்கடி ஏற்படும். அடுத்த மூன்று போட்டிகளில் அதிக நெருக்கடி ஏற்படும்.

    லார்ட்ஸ் போட்டிக்கான ஆடுகளத்தின் மேற்பகுதி பிரவுன் நிறத்தில் இருந்தால், குல்தீப் யாதவ் 100 சதவீதம் விளையாடனும். அவரது தேர்வு ஆடுகளத்தின் மேற்பகுதியை சார்ந்தது. ஆடுகளத்தின் மேற்பகுதி க்ரீனாக இருந்தால், 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடியும். குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டால் நிதிஷ் ரெட்டில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஒருவர் வெளியில் இருக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • எட்ஜ்பாஸ்டனில் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.
    • நான் பார்த்ததில் இங்கிலாந்தில் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்- கங்குலி.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். மேலும், இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    முதல் டெஸ்டில் சதம் அடித்த சுப்மன் கில் 2ஆவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியது தொடர்பாக சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    சுப்மன் கில்லின் இரட்டை சதம் குறைபாடு அற்ற, முற்றிலும் மாஸ்டர்கிளாஸ். எந்தவொரு காலக்கட்டத்திலும் இங்கிலாந்து மண்ணில் நான் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸ். கடந்த சில மாதங்களாக அவரிடம் மிக அதிகமான முன்னேற்றம். டெஸ்டிலவ் தொடக்க வீரர என்பதை அவரது இடம் இல்லை. இந்தியா வெற்றி பெறுவதற்கான டெஸ்ட் இது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.
    • இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 359/3 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101), ஷுப்மான் கில் (127) சதம் அடித்தனர். ரிஷப் பந்த் 65 ரன்கள் எடுத்தார்.

    இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.

    2002ல் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக தாங்கள் விளையாடிய சிறப்பான ஆட்டத்தை இருவரும் எக்ஸ் சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தனர்.

     

    சச்சின் 193 ரன்களும், கங்குலி 128 ரன்களும் எடுத்த அந்தப் போட்டியில், ராகுல் டிராவிட் 148 ரன்கள் எடுத்திருந்தார்.

    கங்குலி, "இந்த முறை இந்திய அணியில் 4 சதம் அடிக்க வாய்ப்புள்ளது, பந்த் மற்றும் கருண் ஆகியோர் சிறப்பாக விளையாடலாம், 2002 இல் முதல் நாள் களம் இதை விட சுட்டறு வித்தியாசமாக இருந்தது" என்றும் கருத்து தெரிவித்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    • கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப் போட்டி நடைபெறும் என தொடக்கத்தில் அறிவிப்பு.
    • தற்போது போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதால் பிளேஆஃப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

    ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. லீக் ஆட்டங்கள் முடிவடைய இருந்த நிலையில் பிளேஆஃப் சுற்றின் குவாலிஃபையர்-1, எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் ஐதராபாத்திலும், குவாலிஃபையர்-2, இறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

    ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் ஏற்பட கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிக்கு தடை ஏற்பட்டது. தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் 2025 சீசன் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று முதல் (17ஆம் தேதி) எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என போட்டி அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் பிளேஆஃப் சுற்று போட்டிகள் எங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொல்கத்தாவில்தான் இறுதிப் போட்டி நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பிசிசிஐ-யிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இறுதிப் போட்டியை மாற்றுவது அவ்வளவு எளிதானதா?. இது ஈடன் கார்டனின் பிளேஆஃப் போட்டிகள். எல்லாம் சரி செய்யப்படும். எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் உதவி செய்யாது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்துடன் பிசிசிஐ மிகச் சிறந்த நட்புறவு கொண்டுள்ளது" என்றார்.

    கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை கொல்கத்தா ஈடன் கார்டன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
    • சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 54-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் விளையாடிய' ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 16.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது

    இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சை சூர்யகுமார் யாதவ் நாலாபுறமும் பறக்க விட்டார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 (35) ரன்கள் எடுத்தார்.

    இந்த நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ் தான். அவர் கம்ப்யூட்டரில் பேட் செய்வது போல் தெரிகிறது.

    என தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிப்பு.
    • கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும்.

    திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா கங்குலியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து சாஹா தனது பேஸ்புக் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தங்களின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு திரிபுரா சுற்றுலா துறையின் விளம்பர தூதராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
    • ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் நியமிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

    தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில் ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோரும், ஹிந்தி வர்ணனைக்கு ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ் மொழி வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை.
    • விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    மும்பை:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து மீண்டும் கேப்டன்சி குறித்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 68 போட்டியில் தலைமையேற்று 40 வெற்றி, 11 டிராவுடன் 4-வது சிறந்த கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் திடீரென கேப்டன்சியை விலகியது ஏன் என்றும், பிசிசிஐ தலைவர் கங்குலி உடனான மோதலால் மட்டுமே விராட் கோலி பதவி விலகினார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றி சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணத்தை விராட் கோலியால் மட்டுமே சொல்ல முடியும். அதேபோல் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.

    அந்த நேரத்தில் இந்திய அணிக்கு உடனடியாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டிய பொறுப்பு தேர்வுக்குழுவுக்கு இருந்தது. அதனால் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 15.3 ஓவரில் 165 ரன்கள் குவித்தனர்
    • இந்தியா 17 ஓவரில் 179 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று புளோரிடாவில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில்- ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    15.3 ஓவரில் இந்த ஜோடி 165 ரன்கள் குவித்தது. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். சுப்மான் கில் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 51 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 179 இலக்கை 17 ஓவரிலேயே எட்டியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய சுப்மான் கில் அதிரடி வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

    இந்த நிலையில் அப்போதைய சச்சின் டெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியை போன்று இந்த ஜோடியால் ஆக முடியும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் சமமான திறனைப் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய வகையில், ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்ய முடியும். அதற்கான வழியை அவர்கள் தேடுவது அவசியம். அவ்வாறு செய்தால், இந்திய அணியின் அபாயகரமான தொடக்க வீரர்களாக பல ஆண்டுகள் நீடிப்பார்கள். அவர்கள் சச்சின் டெண்டுல்கர்- கங்குலி போன்று சிறந்த ஜோடியாக திகழ்வார்கள்.

    அவர்கள் ஆட்டத்தின் சில பிரச்சனைகளை அவர்கள் கண்டுபிடித்து, அதை சரியான முறையில் செய்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலனாக அமையும்'' என்றார்.

    ×