என் மலர்
உலகம்

டிரம்பின் வர்த்தக சவால்களை எதிர்கொள்ள BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு
- பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
- பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என டிரம்ப் விமர்சித்தார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக சவால்களை எதிர்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்தாண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தக பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் எனவும் நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .






