என் மலர்
நீங்கள் தேடியது "பத்திரிகையாளர்"
- பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த்.
- தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பங்கேற்றார்.
சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு எம்.பி. விஜய் வசந்த் சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கினார்.
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நேற்று சென்னையில் ஊடகங்களின் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும், பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் கல்வித் திருவிழாவை சென்னை சேத்துப்பட்டு தனியார் பூங்கா வளாகத்தில் நடந்தியது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, தனது சொந்த நிதியிலிருந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த், அவர்களை ஊக்குவித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைககள், ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோர் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
விழாவில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நிகழ்த்தப்பட்டது. மேஜிக் ஷோவில் பள்ளி குழந்தைகளும், பெற்றோர்கள் சிலரும் பங்கேற்றனர்.
ஏர்டெல் சூப்பர் ஜூனியர் புகழ் ஹர்ஷினி தனது இனிமையான குரலில் பல திரைப்பட பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு எம்பி விஜய் வசந்த் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
- திடீரென தண்ணீரின் ஓட்டம் அதிகரித்ததால் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
- மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ராவல்பிண்டியில் வெள்ளம் குறித்து நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
ராவல்பிண்டியில் உள்ள சாஹான் அணைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது. நிருபர் கையில் மைக் உடன் கழுத்தளவு தண்ணீரில் இருந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென தண்ணீரின் ஓட்டம் அதிகரித்ததால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரின் நிலை குறித்த தகவல்கள் இல்லை.
TRP-க்காக ஊடகங்கள் இரக்கமற்ற முறையில் நிருபர்களின் உயிரை பணயம் வைத்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜூன் 26 முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாகிஸ்தானில் பரவலான சேதம் மற்றும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன. குறைந்தது 116 பேர் இறந்துள்ளனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் 37 பேரும், சிந்துவில் 18 பேரும், பலுசிஸ்தானில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ராவல்பிண்டி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, அங்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
- ஈரானின் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி (IRIB) கட்டிடத்தை குறிவைத்தது.
- நேரலையின்போது வான்வழித் தாக்குதல் நிகழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஈரானில் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டிடம் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு, இந்திய ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு மிருகத்தனமான தாக்குதலில், சியோனிஸ்ட் குற்றவாளி ஆட்சி, ஈரானின் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி (IRIB) கட்டிடத்தை குறிவைத்து, ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளது.
அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் தெளிவாக மீறும் இந்த குற்றச் செயலை இந்தியாவில் உள்ள சுயாதீன ஊடகங்கள் கண்டிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே செய்தி நேரலையின்போது வான்வழித் தாக்குதல் நிகழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- சுமார் 2,000 போராட்டக்காரர்கள் நகர மையத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- முகமூடிகளைப் பயன்படுத்துவதை டிரம்ப் தடை செய்துள்ளார்.
வெளிநாட்டவரை கைது செய்து நாடுகடத்தும் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
போராட்டங்கள் நகரின் மையப்பகுதியை ஸ்தம்பிக்கச் செய்துள்ளன. நகர மையத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோதனை மேற்கொள்ளும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) துறைக்கு எதிராக, சுமார் 2,000 போராட்டக்காரர்கள் நகர மையத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தானியங்கி கார்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, முகமூடிகளைப் பயன்படுத்துவதையும் டிரம்ப் தடை செய்துள்ளார்.
இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர் ஒருவர் ரப்பர் தோட்டாவால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைன் நியூஸ் அமெரிக்க செய்தியாளர் லாரன் டோமாசி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது அவரது காலில் ரப்பர் தோட்டா தாக்கியது. இந்தச் சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, அங்கிருந்த போராட்டக்காரர்கள் டோமாசியிடம் சென்றனர். அவர் நலமாக இருப்பதாகப் பதிலளித்தார். சில போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை நோக்கி, "நீங்கள் செய்தியாளரை சுட்டுக் கொன்றீர்கள்" என்று கோஷமிட்டனர்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து நைன் நியூஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. லாரன் டோமாசி மற்றும் அவரது கேமராமேன் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்கள் செய்திகளை வெளியிடுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- தலையணையிலிருந்து தலையைத் தூக்கக்கூட முடியாத நிலையில் இருந்ததால் நான் உதவினால் மட்டுமே அவளால் எழுந்துகொள்ள முடியும்.
- தலை மொட்டையடிக்கப்பட்டது மற்றும் கழுத்து உடைக்கப்பட்டிருந்தது.
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் கடந்த 2022 முதல் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ரஷிய சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உக்ரைன் பெண் பத்திரிகையாளரின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் ஓராண்டுக்கு முன்னர், 27 வயதான உக்ரேனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா ரஷிய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் செய்தி சேகரித்துகொண்டுந்தபோது கடத்தப்பட்டார். பல மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு, அவரின் சிதைக்கப்பட்ட உடல் ஒரு பையில் சமீபத்தில் உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
விக்டோரியா ரோஷ்சினாவின் உடலில் கண்கள், மூளை மற்றும் குரல்வளை ஆகியவை அகற்றப்பட்ட நிலையில் இருந்தன. இது அவர் அனுபவித்த சித்திரவதைக்கான ஆதாரங்களை மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இப்போது உலகம் முழுவதும் மனித உரிமைகள் குறித்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மே 3, உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த சமயத்தில் விக்டோரியா உலகெங்கிலும் அரசு அதிகாரங்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களின் சின்னமாக மாறியுள்ளார்.

விக்டோரியா அடைக்கப்பட்டிருந்த ரஷியாவின் 'பிசாசுகளின் அறை' என்று அழைக்கப்படும் டாகன்ரோக்கில் உள்ள SIZO-2 சிறைச்சாலை, இப்போது சித்திரவதை செய்யும் இடமாக மாறிவிட்டது.
ஒரு காலத்தில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறைச்சாலையாக இருந்த இந்த இடம், இப்போது ரஷியாவால் உக்ரேனிய கைதிகளை சித்திரவதை செய்யும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு கொண்டுவரப்படும் கைதிகள் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு அடிக்கப்படுகின்றனர். மின்சார நாற்காலி, தலைகீழாக தொங்கவிடுதல் போன்ற பயங்கரமான சித்திரவதைகள் இங்கு நடப்பதாக முன்னாள் கைதிகள் தெரிவித்தனர். விக்டோரியாவும் இந்த சிறைக்குக் கொண்டுவரப்பட்டார், அங்கு அவர் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு ஆளானார்.
விக்டோரியா முதலில் எனர்கோடரிலும் பின்னர் மெலிடோபோலிலும் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நான்கு மாதங்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய பிறகு, அவர் SIZO-2 சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் இங்கேயே கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
உக்ரேனிய புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அவரது உடலில் மின்சார அதிர்ச்சி, உடைந்த விலா எலும்புகள், கழுத்து எலும்புகளில் எலும்பு முறிவுகள் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இவை அனைத்தும் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
சிராய்ப்புகள், இரத்தக்கசிவுகள், உடைந்த விலா எலும்பு மற்றும் மின்சார அதிர்ச்சிக்கான சாத்தியமான சான்றுகள் உள்ளிட்ட சித்திரவதைக்கான வெளிப்படையான அறிகுறிகளை இது காட்டியதாக உக்ரைனிய வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகத்தின் போர்க்குற்றத் துறையின் தலைவர் யூரி பெலூசோவ் தெரிவித்தார்.

விக்டோரியாவுடன் இருந்த சிறைத் தோழர் ஒருவர் கூறுகையில், அவளின் எடை 30 கிலோவாகக் குறைந்தது. தலையணையிலிருந்து தலையைத் தூக்கக்கூட முடியாத நிலையில் இருந்ததால் நான் உதவினால் மட்டுமே அவளால் எழுந்துகொள்ள முடியும். நான் அவளைத் தூக்கி நிறுத்துவேன், அவள் மேல் படுக்கையைப் பிடித்து நிமிர்ந்து நிற்பாள்" என்று கூறினார்.
கடந்த பிப்ரவரியில் 757 உக்ரேனிய உடல்கள் பரிமாற்றத்தின் மூலம் அவரது உடல் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அந்த உடல் அடையாளம் தெரியாத ஆண் என்றும், மாரடைப்பால் இறந்ததாகவும் முத்திரை குத்தப்பட்டிருந்தது.
டிஎன்ஏ சோதனைகளில் அந்த உடல் விக்டோரியா ரோஷ்சினாவின் உடல் என்பது தெரியவந்தது. அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது, தலை மொட்டையடிக்கப்பட்டது மற்றும் கழுத்து உடைக்கப்பட்டிருந்தது.
அவரது முக்கிய உடல் பாகங்கள் அகற்றப்பட்டதால், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் 2022 ஆம் ஆண்டுக்கான 'பத்திரிகைத் துறையில் துணிச்சலுக்கான விருது'- ஐ பெற்றவர் விக்டோரியா ரோஷ்சினா .
அவர் மரியுபோல் மற்றும் உக்ரைனின் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரது மரணம் ரஷியாவின் போர்க்குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதினின் "பிசாசுகளின் அறை" பற்றிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த, சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து உக்ரைன் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருகிறது.
- ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர்
- பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் பாஜக நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்டவர் டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் பாஜக எம்எல்ஏக்கள் தேவிந்தர் மான்யால், ராஜீவ் ஜஸ்ரோதியா, பாரத் பூஷன் ஆகியோர் தலைமையில் நேற்று கதுவாவில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா உள்ளிட்டோர், எல்லை தாண்டி ஊடுருவலைத் தடுக்க புலானாய்வுத் துறை, மத்திய அரசு தோல்வி அடைந்ததன் பிரதிபலிப்பாக பயங்கரவாதத் தாக்குதல் உள்ளதா? என்று பாஜக எம்எல்ஏக்களிடம் கேட்டனர். இதனால் அவர்கள் கோபமடைந்தனர்.
இதற்கிடையில், ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர். போலீசார் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை அடி தொடர்ந்தது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கதுவாவில் உள்ள ஷாஹிதி சவுக் மற்றும் ஜம்மு பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கதுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- பாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (25) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த புதன்கிழமை வடக்கு காசாவில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.
"நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்" என ஃபாத்திமா ஒருமுறை இணையத்தில் பதிவிட்டதை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
- துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர்.
- பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏமன் மீதான அமெரிக்காவின் ரகசிய போர் திட்டகங்கள் பொதுவெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் தவறுதலாக அட்லாண்டிக் பத்திரிகை தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க்க்கு சென்று சேர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி இந்த உயர்மட்ட அதிகாரிகள், சிக்னல் செயலி குரூப் சாட்டிங் -இல் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வரவிருக்கும் ராணுவத் தாக்குதல்கள் குறித்து விவாதித்துள்ளனர். இந்த சாட்டிங் இல் அட்லாண்டிக் இதழ் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் தவறுதலாக இன்வைட் செய்யப்பட்டு இணைந்துள்ளார்.
ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூற்றுப்படி, இந்தக் குழுவில் மொத்தம் 18 உறுப்பினர்கள் இருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர். இந்தக் குழுவில் சேருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடமிருந்து தனக்கு இன்வைட் வந்ததாக ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூறுகிறார்.

ஏமனில் தாக்குதலுக்கான இலக்கு இடங்கள், தாக்குதல் வரிசைமுறை மற்றும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் போன்ற முக்கியமான விவரங்கள் இந்த குழுவில் பகிரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கோல்ட்பர்க் தகவலைப் பெற்ற இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. மிகவும் ரகசியமான செயல்பாடுகள் வெளியே கசிந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இது உண்மைதான் எனத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பத்திரிகையாளரை தவறுதலாக இன்வைட் செய்த பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தில் மவுனத்தை கடைபிடித்து வருகிறார். அமெரிக்காவின் வழிகாட்டுதலில் பாலஸ்தீனம், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அமெரிக்கா தீட்டி வரும் போர் திட்டங்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை கூட்டியுள்ளது.
- பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர்.
வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய டிரோன் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவை டிரோன் குறிவைத்ததாகப் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது அறிக்கையில் பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது.
இலக்கு வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் டிரோன்களை இயக்க உபகரணங்களை சேகரித்து வந்தாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.

- சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
- அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.
சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது.

- ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
- கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- அரசியல்வாதி தாக்கியது தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.
- பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.






