என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக போராட்டம்"

    • புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சபாநாயகர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    மயிலாப்பூரில் கடந்த 8-ந்தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடவுள் ராமரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

    வைரமுத்து பேசியதாவது:- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் குற்றம், குற்றம் கிடையாது என்று IPC கூறுகிறது. IPC-யில் கூறப்பட்டதை அன்றே கூறினார் கம்பர். ராமர் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி அல்ல என்று கம்பர் கூறுகிறார் என்றார்.

    வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

    • ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர்
    • பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் பாஜக நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்டவர் டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் பாஜக எம்எல்ஏக்கள் தேவிந்தர் மான்யால், ராஜீவ் ஜஸ்ரோதியா, பாரத் பூஷன் ஆகியோர் தலைமையில் நேற்று கதுவாவில் போராட்டம் நடைபெற்றது.

    அப்போது டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ராகேஷ் சர்மா உள்ளிட்டோர், எல்லை தாண்டி ஊடுருவலைத் தடுக்க புலானாய்வுத் துறை, மத்திய அரசு தோல்வி அடைந்ததன் பிரதிபலிப்பாக பயங்கரவாதத் தாக்குதல் உள்ளதா? என்று பாஜக எம்எல்ஏக்களிடம் கேட்டனர். இதனால் அவர்கள் கோபமடைந்தனர்.

    இதற்கிடையில், ராகேஷ் சர்மாவை பாஜக தொண்டர்கள் தலைவர்கள் முன்னிலையில் தாக்கினர். போலீசார் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை அடி தொடர்ந்தது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கதுவாவில் உள்ள ஷாஹிதி சவுக் மற்றும் ஜம்மு பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கதுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.
    • தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார்.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது.

    எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.

    பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சிலர் இந்த அரசு குறித்து ஏதையாவது தெரிவித்து, இவர்கள் கீழே விழமாட்டார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.

    தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை வெல்ல தமிழக முதலமைச்சர் மாநில முதல்-மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதிலும் வெற்றி பெறுவோம்.

    மதுவிலக்கு பொறுத்தவரை ஒரு தலைவர் 2023-ம் ஆண்டில் கூறிய கருத்தையும், இப்போது அவர் கூறிய கருத்தையும் நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடாது.

    இன்று நடைபெறும் போராட்டம் குறித்து கேட்கிறீர்கள். கோமாளிகள் செயல்களுக்கு நான் பதில் கூற முடியாது. அரசு நிகழ்ச்சி இதில் அரசியல் பேச வேண்டாம்.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.108 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.67 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 39 ஆயிரத்து 494 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் பவன் குமார், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
    • பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை (இன்று) தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும். தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (இன்று) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

    அதன்படி, இன்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழகத்தில் கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம் என்ற பதாகையை கையில் ஏந்தி அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை தமிழக பா.ஜ.க.வின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை. ஆனால் இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

    இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால் கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. தமிழக விவசாயிகளை விட, அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது. அவருக்கு மேகதாது அணை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை. அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் D.K சிவக்குமார் அவர்களுக்குத் தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக.

    முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை.

    தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சாதித்தது என்ன?

    அரிசி பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான். கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள தெரு நாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள். இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தொடர்ந்து தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களை வைத்து தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

    தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    • டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    நாகர்கோவில்:

    சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.

    அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளருக்கு, மேயர் கடிதம் எழுதியதாக புகார்.
    • மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பணி நியமனம் வழங்க மேயர் ஆர்யா ராஜேந்திரன் சிபாரிசு கோரியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியின் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 74 மருத்துவர்கள், 66 பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் 64 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உள்பட 295 தற்காலிக பணியிடங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை சிபாரிசு செய்யும்படி அதில் மேயர் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கடிதம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சி முன்பு பாஜக மற்றும் இளைஞர்கள் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. 


    மேயரின் கடிதம் தொடர்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், தான் அந்த கடிதத்தை அனுப்பவில்லை, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் திருவனந்தபுரத்தில் நான் இல்லை, இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும் என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

    • கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15-ந்தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன் படி நாளை (15-ந்தேதி) அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த முறை போராட்டத்தில் அடிமட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

    சென்னையில் 66 இடங்களில் நடைபெறுகிறது. அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    • சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவை அண்ணாமலை விரும்பி சாப்பிட்டார்.
    • மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அண்ணாமலை அங்கிருந்து மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பர்கூர் தாமரைகரை பகுதிக்கு சென்றார்.

    அப்போது மலைவாழ் மக்களில் உள்ள சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி என்ற சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்து மலையாளி என்ற சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்தார்.

    பதிலுக்கு அவரது காலில் திரும்ப விழுந்த அண்ணாமலை கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தவரை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறி, வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் போது உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவு விரும்பி சாப்பிட்டார். பின்பு அங்கு உள்ள மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், தொண்டர்கள் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • பா.ஜனதா தொண்டர்கள் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில தலைவர் அண்ணாமைலை குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பா.ஜனதா தொண்டர்கள் இன்று தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தனசேகரன் நகரில் இருந்து போல் பேட்டையில் உள்ள அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத்தலைவர்கள் வக்கீல் வாரியார், சுவைதர், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாநில நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், வக்கீல் நாகராஜன் உள்பட திரளானோர் சென்றனர்.

    புதிய பஸ்நிலையம் அருகே சென்றபோது அவர்களை டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் போலீசார், அனுமதி இல்லாமல் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து அவர்கள், அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக சென்றனர். இதைய டுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

    அப்போது முற்றுகையிட சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார். எனினும் அதனை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது.
    • மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜனதா ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    துணைத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா. சி.பி.ராதா கிருஷ்ணன், கனல் கண்ணன், வேலூர் இப்ராகிம், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், வி.பி.துரைசாமி, கருநாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்து ஆலயங்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம். நிர்வாகம் செய்யக்கூடாது. குத்தகை என்ற பெயரில் கோவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும்.

    4 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் அரசு தலையிட கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும்.

    மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது. மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உரிய பணியிடங்களை உரிய விதிமுறைப்படி நிரப்ப வேண்டும்.

    கோவில்கள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மீட்கப்படும் சில சொத்துக்களும் மீண்டும் தாரை வார்க்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.

    உண்ணாவிரதத்தில் மாநில செயலாளர் வினோத் ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர், ஹேமமாலினி, ரங்கராஜ், முருகேசன், குருஜி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் நாச்சிகுப்பம் சரவணன், சென்னை மேற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொன்.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    • 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் லட்சுமி காந்த், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வா, மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் அஸ்வின் ராஜசிம்மா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ×