search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் போராட்டம்: பாரதிய ஜனதா கட்சியினர் 90 பேர் மீது வழக்கு
    X

    திருவள்ளூரில் போராட்டம்: பாரதிய ஜனதா கட்சியினர் 90 பேர் மீது வழக்கு

    • அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    • 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் லட்சுமி காந்த், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வா, மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் அஸ்வின் ராஜசிம்மா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×