search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கீதாஜீவன்"

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
    • ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலை மையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரிய சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது. செய்த சாதனைகள் ஏராளம். இதை அனைத்து தரப்பினர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்க ப்பட்டு உள்ளது. அந்த கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த நமது முதல்- அமைச்ச ரை, பா. ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் தேவையி ல்லாத கருத்துக்களை எல்லாம் கூறி வருகின்றனர். என வே பாராளுமன்ற தேர்த லில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.

    உதயநிதிக்கு வரவேற்பு

    வருகிற 4-ந்தேதி (திங்கட்கி ழமை) தூத்துக்குடி மாவட்ட த்திற்கு வருகை தரும் மாநில இளைஞர் அணி செயலா ளரும், விளையாட்டு மேம்பா ட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் அனைத்து அணியை சார்ந்த நிர்வாகி களும், ஒன்றிய,நகர,பேரூர் கிளை வட்டச்செயலாளர்கள் அதிக அளவில் கலந்து கொ ள்வது மட்டுமின்றி, இளைஞர் அணியி னர் ஒவ்வொரு பகுதி யில் இருந்து அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்தி ரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பி னர் ராதா கிருஷ்ணன், கோவி ல்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செய லாளர்கள், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதா கிருஷ்ணன், காசிவி ஸ்வநாதன், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், குபேர் இளம்பரிதி, வக்கீல் பால குருசாமி, துணை அமைப்பா ளர்கள் பிரதீப், நாகராஜன், ஜோசப் அமல்ராஜ், பிரபு, அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி கள் சேர்ம பாண்டி யன், செந்தில்குமார், நாரா யணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர் மற்றும் கருணா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று மாலை மூப்பன்பட்டியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.
    • வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்தில் குறைகள் கேட்கின்றனர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் இன்றும், வருகிற 23-ந்தேதியும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகின்றனர்.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில்பட்டி மத்திய ஒன்றியம் மூப்பன்பட்டியிலும், 6.30 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் தோனுகால், 7 மணிக்கு சத்திரப்பட்டி, 8 மணிக்கு ஊத்துப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.

    இதேபோல் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்திலும், 5 மணிக்கு தெற்கு வண்டானத்திலும், 6 மணிக்கு வடக்கு வண்டானத்திலும், 7 மணிக்கு கொப்பம்பட்டியிலும் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிகின்றனர்.

    • காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது.

    சென்னை:

    செ‌ன்னை‌யி‌ல் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார். மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும். முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும். தாமதம் இருக்காது.

    காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திட்டம் தொடங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும்.

    18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை.

    தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது.

    விலைப்பட்டியலை பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும். சத்துணவு பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

    முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை.

    தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர்.

    இவ்வாறு கீதாஜீவன் தெரிவித்தார்.

    ×