search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் வாக்குறுதி"

    • காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது.
    • இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்.

    கோவை:

    கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இரவு 10 மணிக்கு மேல் மைக் பயன்படுத்தாமல் மக்களை சந்திக்கலாம்.

    * 10 மணிக்கு மேல் மக்களை வேட்பாளர்கள் சந்திக்கக்கூடாது என எங்கும் சொல்லவில்லை.

    * மக்களின் அன்பினால் தாமதம் ஆவது, தேர்தல் பிரசாரத்தில் சகஜம் தான்.

    * பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது.

    * காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது.

    * பாரதிய ஜனதா பிரசாரத்திற்கு ஆர்வமாக வந்து மக்கள் காத்திருக்கிறார்கள்.

    * அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மோடி 3வது முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    * இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்.

    * தேர்தல் விதிகளை நான் நன்கு அறிவேன். தேர்தல் விதிகளை மீறவில்லை என்று அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    • 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.

    கோவை:

    கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

    * கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    * கோவைக்கு 100 வாக்குறுதிகள்... 500 நாட்களில் நிறைவேற்றப்படும்.

    * சரவணம்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சரவணம்பட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கோவையில் IIM கொண்டுவர வலியுறுத்துவோம்.

    * கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.

    * 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
    • 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மகளிர் திட்டத்தில் சிறு தானிய உணவு பொருட்கள் விற்பனையகத்தை வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம். 1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்து விட்டோம்.

    ஏற்கனவே போடப்பட்டு உடைந்த பைப்புகள் சரி செய்யப்பட்டது. 6 மோட்டார் இயங்குவதற்கான போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    2016-ம் ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29-ந் தேதி இறுதி நாள். மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வாடகை கட்டிடங்களில் 10 ஆயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததை இடித்து தற்போது வீடுகள் கட்ட உள்ளோம். அந்த இடங்களில் தேவையான வீடுகள் குறித்து கணக்கெடுத்து கட்ட உள்ளோம்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். மேலும் உடுமலைப்பேட்டையில் 110 தனித்தனி வீடுகள் கட்டி விற்காமல் இடிந்துள்ளது. திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 6 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 363 மனுக்கள் ஏற்று அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் கொடுத்தால் அதன் மீது பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து மாதம் கணக்கில் அறிவுறுத்தப்பட்டு அதிகமாக கால அவகாசம் வழங்கிய பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 555 தி.மு.க. வாக்குறுதியில் நாங்கள் எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக இருக்கிறோம்.



    ஆனால் எடப்பாடி பழனிசாமி 14 மட்டும் தான் நடக்கவில்லை என்று பட்டியலிட்டு உள்ளார். அப்படி என்றால் மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி விட்டதை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார் என்று தானே அர்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
    • மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திர மாநில விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

    மின்சார மசோதா 2020 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாய மோட்டார்களுக்கு முன்பணம் செலுத்திய ஸ்மார்ட் மின் மீட்டர்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஆட்சிக்கு வந்தவுடன், பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை வசதியாக புறக்கணித்தது. மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

    • மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
    • 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.

    மதுரை

    மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கூட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசிய தாவது-

    காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் பயிர்கள் கருகி வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தண்ணீரை விட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதை மதிக்காமல் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால் பயிர்கள் கருகி வேதனையில் விவசாயி இறந்த கொடுமை நடந்து வருகிறது.

    உலகம் பற்றி பேசும் உதயநிதி தற்போது மாநில அரசு உரிமையை மீட்க குரல் கூட எழுப்பவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. தமிழ்நாட்டி னுடைய இளைய தலை முறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

    2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026-ம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 185-இல் கூறப்பட்டுள்ளது.அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187, 188, 189 கூறப்பட்டுள்ளது

    தற்போது முதல்-அமைச்சர் கடந்த 2ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த 2 ஆண்டுகளிலே 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 5 ஆண்டு களில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறு தியை ஒப்பிட்டு பார்க்கும் போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம் 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.

    இளைஞர் அணி மாநாடு நடத்த போகிறோம் என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்.

    இந்த மாநாட்டில் இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு என உத்தரவாதம் தரப் ்போகிறார்கள்? இளைஞர்களுக்கு கேள்விக் குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
    • “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியிருப்பதாவது-

    தி.மு.க. பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற அந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கியமான கோரிக்கை களை 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப வேண்டும் என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறப்பினர்களுக்கும் முதல மைச்சர் கடிதம் அனுப்பி னார்.

    இதனை தொடர்ந்து எனது திருமங்கலம் தொகுதி யில் நிறைவேற்றும் பணிக ளான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவ பணியை விரைந்து முடிக்க வேண்டும், கல்லுப்பட்டி பகுதியில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய டோராபாறை அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர பணியை விரைந்து முடிக்க வேண்டும், திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் கட்டப்பட வேண்டும், கள்ளிக்குடி ஒன்றிய பகுதி யில் உள்ள விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு மாவட்ட கலெக்ட ருக்கு கடிதம் கொடுத்தேன்.

    இதை கொடுத்த பிறகு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை, இதிலே ஆயிரம் கோடி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் அறி வித்தார்கள். அப்படி பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது. இந்த அரசு வெறும் அறிவிப்பு வெளியி டுகிற அரசாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறது.அதற்காக செயல் வடிவம் கொடுப்பதிலே இந்த அரசு தோல்வியடைந்துள்ளது.

    பல்வேறு துறைகளுக்கு 37 குழுக்கள் அமைக்கப் பட்டது. அந்த குழுக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அந்த 37 குழுக்க ளுடைய அறிவுரைகள் என்ன, செயல்பாடு என்ன?.எந்த தீர்வு கொடுத்திருக்கி றார்கள், என்பதை அரசு ஆலோசித்தது உண்டா?

    மேலும் 520 தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம் என்று முதல மைச்சர் கூறி வருகிறார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இதன் அர சாணை விவரம் என்ன என்பதை கேட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எந்த விவரமு ம் வெளியிப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றுவதில் 100 சதவீதம் தி.மு.க. அரசு தோல்வி அடைந்திருக்கிறது.

    எடுத்த காரியங்கள் எல்லாம் அறிவிப்போடு நின்று விடுகிறது அதுதான் தி.மு.க. அரசின் அடையா ளம். ஆகவே ரூ.1000 கோடி யில் அறிவிக்கப்பட்ட "உங்கள் தொகுதியில் முதல மைச்சர்" என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • பா.ஜ.க. கூட்டணி எம்.பி. மதுரையில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை பேசினார்

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கி னார். ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மதுரை மாவட்டத்தில் அவர் பய ணத்தை மேற்கொண்டார்.

    இன்று காலை ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில் பகுதியில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கி னார். ஒத்தக்கடை தேவர் சிலை அருகே நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊழல் மிகுதியாக இருக்கிறது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல தமிழகத்தில் நடைபெறும் மொத்த ஊழலுக்கு கிழக்கு தொகுதி சாட்சியாக இருக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்பட்டிருந்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என்று கூறிய தி.மு.க. குரூப் 4 தேர்வு நடைபெற்று 13 மாதங்கள் ஆகியும் 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்தி ருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் 1300 நர்சுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது.

    மதுரையில் நெசவா ளர்கள் அதிகமாக உள்ள னர். ஆனால் தி.மு.க. அரசு அவர்களுக்காக திட்டங்கள் எதுவும் கொண்டு வர வில்லை. ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்து விருது நகரில் ஜவுளி பூங்கா திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இதனால் 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

    மதுரை எம்.பி. மோடியை பற்றி மட்டும் குறை கூறுகிறார். காவிரி நீர் குறித்து பேசவில்லை. கேரளாவில் இருந்து மருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து பேசவில்லை. எனவே மதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி. வெற்றி பெற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகம், பாண்டிச் சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன், கிழக்கு மண்டல் தலைவர் பூமிநாதன், ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொதுச்செய லாளர்கள் மூவேந்திரன், கண்ணன், நிர்வாகிகள் கட்கம் ரவி, கல்வாரி தியாகராஜன், வெள்ளைச்சாமி, குறிஞ்சி அரவிந்த், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர பாண்டியன், செல்வமாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு பிரபாகரன், நெசவாளர் பிரிவு கிருஷ்ணகுமார், சோலை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து நத்தம் ரோடு ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாநகர் பகுதியில் அண்ணாமலை பயணத்தை தொடங்கினார்.

    • காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார்.
    • முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும் என்றார் ராகுல் காந்தி.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் உங்களுக்கு (மக்களுக்கு) ஏற்கனவே நான்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

    மோடி அவர்களே, நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்று சொன்னீர்கள். நான் அதில் மேலும் ஒன்றை சேர்க்கிறேன். முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக தமிழக முதல்வர் நிறைவேற்றுகிறார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்
    • இதன் மூலம் 1991 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 23,307 மகளிர் பயன்பெற்றுள்ளனர்

    பெரம்பலூர்:

    கூட்டுறவுத்துறையின் சார்பில் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 23,307 மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.47.64 கோடி மதிப்பிலான சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிப்பொறுப்பே ற்றத்திலிருந்து படிப்படியாக செய்து வருகிறார். அதில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி என்கிற அறிவிப்பினை உறுதி செய்யும் விதமாக இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தி ல் ரூ.47.64 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1991 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 23,307 மகளிர் பயன்பெற்றுள்ளனர். மகளிர் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற முத்தாய்ப்பான திட்டங்கள் பல உள்ளன. இப்படி பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, பெண்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பொற்கால ஆட்சியில்தான் செயல்படுத்தப்படுகின்றது.

    இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில், 23,307 மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.47.64கோடி மதிப்பிலான சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக 373 மகளிருக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கம்) பாண்டியன், வேப்பூர் ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை பேரூராட்சித் தலைவர் சங்கீதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தத்துவம் போன்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி வரு கிறார். அண்ணமாலை அரசியலுக்கு வந்து ஒராண்டு தான் ஆகிறது. நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என சுய புராணம் பாடி வருகிறார்.

    நான் அரசியலுக்கு வந்து 26 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்றும் ஒரே கொள்கை பிடிப்போடு இருக்கிறேன்.எதிலும் தி.மு.க.வினர் துணிந்து நிற்போம். அண்ணா மலையின் பேச்சைக்கேட்டு யாரும் ஏமாற மாட்டார்கள். இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள். சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை திராவிட இயக்கம் தான் மாற்றியது. பெண்களுக்கு கல்வி கிடையாது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கிடையாது. கோவி லுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையை மாற்றி அமைத்தது நீதிகட்சியும், தி.மு.க.வும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

    சாதி, மத பிரச்சினையை உருவாக்கி தமிழகத்தில் பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். நிச்சயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளையும் படிப்ப டியாக நிறைவேற்றி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ×