search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RB Udayakuma"

    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
    • “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியிருப்பதாவது-

    தி.மு.க. பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற அந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கியமான கோரிக்கை களை 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப வேண்டும் என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறப்பினர்களுக்கும் முதல மைச்சர் கடிதம் அனுப்பி னார்.

    இதனை தொடர்ந்து எனது திருமங்கலம் தொகுதி யில் நிறைவேற்றும் பணிக ளான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவ பணியை விரைந்து முடிக்க வேண்டும், கல்லுப்பட்டி பகுதியில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய டோராபாறை அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர பணியை விரைந்து முடிக்க வேண்டும், திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் கட்டப்பட வேண்டும், கள்ளிக்குடி ஒன்றிய பகுதி யில் உள்ள விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு மாவட்ட கலெக்ட ருக்கு கடிதம் கொடுத்தேன்.

    இதை கொடுத்த பிறகு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை, இதிலே ஆயிரம் கோடி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் அறி வித்தார்கள். அப்படி பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது. இந்த அரசு வெறும் அறிவிப்பு வெளியி டுகிற அரசாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறது.அதற்காக செயல் வடிவம் கொடுப்பதிலே இந்த அரசு தோல்வியடைந்துள்ளது.

    பல்வேறு துறைகளுக்கு 37 குழுக்கள் அமைக்கப் பட்டது. அந்த குழுக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அந்த 37 குழுக்க ளுடைய அறிவுரைகள் என்ன, செயல்பாடு என்ன?.எந்த தீர்வு கொடுத்திருக்கி றார்கள், என்பதை அரசு ஆலோசித்தது உண்டா?

    மேலும் 520 தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம் என்று முதல மைச்சர் கூறி வருகிறார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இதன் அர சாணை விவரம் என்ன என்பதை கேட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எந்த விவரமு ம் வெளியிப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றுவதில் 100 சதவீதம் தி.மு.க. அரசு தோல்வி அடைந்திருக்கிறது.

    எடுத்த காரியங்கள் எல்லாம் அறிவிப்போடு நின்று விடுகிறது அதுதான் தி.மு.க. அரசின் அடையா ளம். ஆகவே ரூ.1000 கோடி யில் அறிவிக்கப்பட்ட "உங்கள் தொகுதியில் முதல மைச்சர்" என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×