search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Promises"

    • மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
    • தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கிளை மாநாடு சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தாசில்தார், ஆர்.டி.ஓ. கலெக்டர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின், இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் முருகபூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.  

    • மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
    • 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.

    மதுரை

    மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கூட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசிய தாவது-

    காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் பயிர்கள் கருகி வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தண்ணீரை விட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதை மதிக்காமல் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால் பயிர்கள் கருகி வேதனையில் விவசாயி இறந்த கொடுமை நடந்து வருகிறது.

    உலகம் பற்றி பேசும் உதயநிதி தற்போது மாநில அரசு உரிமையை மீட்க குரல் கூட எழுப்பவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. தமிழ்நாட்டி னுடைய இளைய தலை முறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

    2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026-ம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 185-இல் கூறப்பட்டுள்ளது.அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187, 188, 189 கூறப்பட்டுள்ளது

    தற்போது முதல்-அமைச்சர் கடந்த 2ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த 2 ஆண்டுகளிலே 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 5 ஆண்டு களில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறு தியை ஒப்பிட்டு பார்க்கும் போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம் 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.

    இளைஞர் அணி மாநாடு நடத்த போகிறோம் என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்.

    இந்த மாநாட்டில் இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு என உத்தரவாதம் தரப் ்போகிறார்கள்? இளைஞர்களுக்கு கேள்விக் குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
    • பா.ஜ.க. கூட்டணி எம்.பி. மதுரையில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை பேசினார்

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கி னார். ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மதுரை மாவட்டத்தில் அவர் பய ணத்தை மேற்கொண்டார்.

    இன்று காலை ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில் பகுதியில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கி னார். ஒத்தக்கடை தேவர் சிலை அருகே நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊழல் மிகுதியாக இருக்கிறது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல தமிழகத்தில் நடைபெறும் மொத்த ஊழலுக்கு கிழக்கு தொகுதி சாட்சியாக இருக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்பட்டிருந்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என்று கூறிய தி.மு.க. குரூப் 4 தேர்வு நடைபெற்று 13 மாதங்கள் ஆகியும் 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்தி ருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் 1300 நர்சுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது.

    மதுரையில் நெசவா ளர்கள் அதிகமாக உள்ள னர். ஆனால் தி.மு.க. அரசு அவர்களுக்காக திட்டங்கள் எதுவும் கொண்டு வர வில்லை. ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்து விருது நகரில் ஜவுளி பூங்கா திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இதனால் 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

    மதுரை எம்.பி. மோடியை பற்றி மட்டும் குறை கூறுகிறார். காவிரி நீர் குறித்து பேசவில்லை. கேரளாவில் இருந்து மருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து பேசவில்லை. எனவே மதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி. வெற்றி பெற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகம், பாண்டிச் சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன், கிழக்கு மண்டல் தலைவர் பூமிநாதன், ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொதுச்செய லாளர்கள் மூவேந்திரன், கண்ணன், நிர்வாகிகள் கட்கம் ரவி, கல்வாரி தியாகராஜன், வெள்ளைச்சாமி, குறிஞ்சி அரவிந்த், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர பாண்டியன், செல்வமாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு பிரபாகரன், நெசவாளர் பிரிவு கிருஷ்ணகுமார், சோலை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து நத்தம் ரோடு ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாநகர் பகுதியில் அண்ணாமலை பயணத்தை தொடங்கினார்.

    • கீழக்கரையில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நகராட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கீழக்கரை நகர் மன்ற தலைவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் கீழக்கரை மக்களுக்கு 8 வாக்குறுதிகள் அளித்தனர். அதில் கீழக்கரை நகருக்கு பல்நோக்கு மருத்துவமனை கொண்டு வருதல், அரசு கட்டிடத்தில் பெண்களுக்கு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருதல், பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை விரிவடைந்த பகுதிகளில் மின்விளக்கு அமைத்து தருதல், இளைஞர்களுக்கு அதி நவீன விளையாட்டு மைதானம், நூலகம், பல்நோக்கு மருத்துவமனை, மின் கட்டண செலுத்தும் முறையை ஊருக்கு கொண்டு வருதல், கீழக்கரை நகராட்சி சார்பாக அரசு பள்ளி போன்றவை வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 வருடம் நெருங்கி வரும் நிலையில் ஒரு வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

    போர்க்கால அடிப்படையில் அரசு சார்ந்த நிலங்களில் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்ற வேண்டும். கீழக்கரையில் வெறிபிடித்த நிலையிலும், நோய் வாய்பட்ட நிலையி லும் நாய்கள் சுற்றித் திரிகிறது. இதனால் குழந்தைகளை பொது மக்கள் பள்ளிக்கு விட கூட அச்சப்படுகிறார்கள். இதற்கு முன்பு நாய்க்கு கடித்து இறப்பும் நடந்துள்ளது. நாய்கள் விஷயத்தில் நகராட்சி கவனம் செலுத்தி முழுமையாக இதனை சரி செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், மேலும் வடக்கு தெருவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை விழுவதற்கு முன்பு இடித்துவிட்டு புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். பொதுமக்களிடையே மனுக்கள் வாங்கி சரி செய்வது வரவேற்கத்தக்கது மனுகளோடு நின்றுவிடாமல் அதற்குண்டான என்னென்ன தீர்வு செய்தோம் என்று அடுத்த கூட்டத்தில் சேர்மன் துணை சேர்மன் கீழக்கரை பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

    மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.தலைவர் ஏற்கனவே புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணியினர் சேர்க்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 25 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    2-ம் கட்டமாக இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டி ருக்கிறது. ஏற்கனவே செய்த பணிகள் தான் வீடு தோறும் கொண்டு சேர்க்கிறோம் என வருடம் முழுவதும் இந்த பணியை செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். முழுமையாக நிறைவேற்றுவோம்.

    கடந்த 2019, 21-ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும். அதற்கு இளைஞர் அணி முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடந்த காலத்தில் இளைஞர் அணி செயலாளராக இருந்த தலைவர் தான் தற்போது முதல்-அமைச்சராக உள்ளார். பணியை முழுமையாக செய்து மாவட்ட கழகத்திற்கு முழு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பின்னர் உறுப்பினராக சேர்த்த படிவத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் நேரில் வழங்கினர். தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் நினைவு பரிசு ஆகியவற்றை வழங்கினார்கள்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாநகர மகளிர் அணி செயலாளர் ஜெயக்குனி விஜயகுமார், இளைஞர் அணி முத்துராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர், துணை சேர்மன், ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சர வணகுமார், கூட்டுடன்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன்,ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி தனுஷ் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    • தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

    புதுமைபெண் திட்டம்

    மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடர்வதற்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. தற்போது ஒன்று முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தெற்கு வளர்ச்சியில்லை என்ற நிலை மாறி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது.

    மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி தமிழர்களின் நலனை பாதுகாத்து கொள்வோம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். டோல்கேட் கட்டணம் உயர்வு சிலிண்டர் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் மோடி அரசு தான். எதுவுமே செய்யாமல் விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்ய எற்படுத்தியுள்ளது.

    ரூ.1000 உதவித்தொகை

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக 530 கொடுக்கப்பட்டு 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான 1000 உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, திண்டுக்கல் லியோனி , மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ் புதியவன், ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், முருகஇசக்கி, டேனியல், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், பவானிமார்ஷல், ஜான்சிராணி, வைதேகி, சுயும்பு, கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, ஜான் அலெக்ஸாண்டர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வ மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும்.
    • மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    தேர்தல் நேரத்தில் கொடுத்தபடி தி.மு.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும், மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும், குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மன்னார்குடி தேரடியில் மாவட்டத் தலைவர் ச. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ரகுராமன் வரவேற்றார்.

    மாவட்ட பொது செயலாளர்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், வெளிநாடு, வெளி மாநில தமிழர் நலப் பிரிவு தலைவர் போல்ட் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை பி. சிவா கலந்து கொண்டு பேசினார்.

    போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கோ. உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ. காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி. சந்துரு, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். துரையரசு, ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் எல்.எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ரஜினி கலைமணி, சி. ரெங்கதாஸ், கே.டி. ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நடந்த தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.

    இந்தியாவின் வலிமையே கிராமங்களில்தான். கிராமங்கள் வாழ்ந்தால் நாடு வாழும் என்று சொல்லி உள்ளனர். எனவே கிராமங்கள் நவீனமயமாக வேண்டும்.



    கிராமங்கள் வளர்ச்சி பெறும்போதுதான் முன்னேற்றம் உருவாகுகிறது. இதற்கு இந்திய தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியை உதாரணமாக சொல்லலாம். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரும் செல்போன் வாங்கிய பிறகுதான் தொலைத்தொடர்பு துறை உயர் வளர்ச்சியை அடைந்தது.

    கிராமங்களின் ஆற்றலை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் தான் கிராமங்களை மேம்படுத்த மக்கள் நீதி மய்யம் ஆர்வம் காட்டுகிறது.

    மக்கள் நீதி மய்யம் மூலம் ஸ்மார்ட் வில்லேஜ்ஸ் (கிராமங்கள்) உருவாக்கப்படும். ஸ்மார்ட் கிராமங்கள் உருவானால் மக்கள் கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் நிலை மாறும்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் விரைவில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும். அதில் கிராமங்கள் மேம்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

    கிராமங்கள் உண்மையிலேயே ஸ்மார்ட்டாக மாறினால் மக்கள் இடம் பெயர்வதில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். கிராமத்து மக்கள் நகர் பகுதிகளுக்கு எப்போது செல்ல வேண்டும்? எதற்காக செல்ல வேண்டும்? என்பதை எல்லாம் தாங்களே தீர்மானிப்பார்கள்.

    என்னை நான் அரசியலில் மேம்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுடன் கலந்து இருக்க ஆசைப்படுகிறேன். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பானவர்கள் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    நான் பல்வேறு விதமான பங்களிப்பை அளித்த பிறகு தான் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளேன். எனவே தயவு செய்து என்னையும் அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

    அரசியலில் நான் எடுத்து வைத்திருக்கும் அடி மிகவும் ஆபத்தானது என்பதை நான் நன்கு அறிவேன். அரசியலில் நேர்மைக்கு இடமே இல்லை. ஆனால் அரசியலிலும் நான் நேர்மையை ஏற்படுத்த முயல்வேன்.

    தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தயவு செய்து அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் எனது கட்சிக்குதான் வரவேண்டும் என்பதில்லை. அரசியலுக்கு வந்தால் போதும்.

    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். அரசியலில் உள்ள அழுக்குகளை விரட்ட வேண்டும். அதற்கு நாம் ஒன்று சேர்ந்தால் பெரிய ஆறாக மாறி அந்த அழுக்குகளை அகற்ற முடியும்.

    எனக்கு இப்போது 63 வயதாகிறது. என்னிடம் எந்த லட்சியமும் இல்லை. அதுபோன்று எந்த தியாகமும் இல்லை. ஆனால் கடமை இருக்கிறது.

    அந்த கடமையின் பலன்களை பார்ப்பதற்கு நான் இல்லாமல் கூட போகலாம். ஆனால் அடுத்த தலைமுறையினர் அந்த கடமையின் பலனை நிச்சயம் அனுபவிக்கும்.

    எனவே உங்களுக்கும் அந்த கடமை உள்ளது. அந்த கடமையை நிறைவேற்ற நீங்களும் முன் வந்தால். இந்த மாநிலத்தை சிறப்பான மாநிலமாக மாற்ற முடியும்.

    எனது நற்பணி மன்றத்தில் சுமார் 8 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக நற்பணிகளை செய்து வருகிறார்கள். அந்த நற்பணி இயக்கத்தின் மீது மக்கள் நீதி மய்யம் வலுவாக உருவாக் கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த பக்கமும் சாயாத நடுநிலையான கட்சியாகும். இடது பக்கமோ, வலது பக்கமோ நிச்சயம் சாயாது. ஆனால் சாமானிய மக்களின் குரலை பிரதிபலிக்கும் கட்சி யாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழும்.

    உலக அளவில் குறிப்பாக ஐரோப்பாவில் நடுநிலை கட்சிகள்தான் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டுமே நடுநிலை கட்சியாக உள்ளது.

    மாற்றங்கள் நிச்சயம் வரும். தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, சாதாரண மக்களிடமும் மாற்றங்கள் வரும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ×