என் மலர்
நீங்கள் தேடியது "Election promises"
- உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
- இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க.தலைவர் ஏற்கனவே புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணியினர் சேர்க்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 25 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2-ம் கட்டமாக இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டி ருக்கிறது. ஏற்கனவே செய்த பணிகள் தான் வீடு தோறும் கொண்டு சேர்க்கிறோம் என வருடம் முழுவதும் இந்த பணியை செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். முழுமையாக நிறைவேற்றுவோம்.
கடந்த 2019, 21-ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும். அதற்கு இளைஞர் அணி முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடந்த காலத்தில் இளைஞர் அணி செயலாளராக இருந்த தலைவர் தான் தற்போது முதல்-அமைச்சராக உள்ளார். பணியை முழுமையாக செய்து மாவட்ட கழகத்திற்கு முழு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் உறுப்பினராக சேர்த்த படிவத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் நேரில் வழங்கினர். தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் நினைவு பரிசு ஆகியவற்றை வழங்கினார்கள்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாநகர மகளிர் அணி செயலாளர் ஜெயக்குனி விஜயகுமார், இளைஞர் அணி முத்துராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர், துணை சேர்மன், ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சர வணகுமார், கூட்டுடன்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன்,ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி தனுஷ் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழக்கரையில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கீழக்கரை
கீழக்கரையில் நகராட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கீழக்கரை நகர் மன்ற தலைவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் கீழக்கரை மக்களுக்கு 8 வாக்குறுதிகள் அளித்தனர். அதில் கீழக்கரை நகருக்கு பல்நோக்கு மருத்துவமனை கொண்டு வருதல், அரசு கட்டிடத்தில் பெண்களுக்கு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருதல், பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை விரிவடைந்த பகுதிகளில் மின்விளக்கு அமைத்து தருதல், இளைஞர்களுக்கு அதி நவீன விளையாட்டு மைதானம், நூலகம், பல்நோக்கு மருத்துவமனை, மின் கட்டண செலுத்தும் முறையை ஊருக்கு கொண்டு வருதல், கீழக்கரை நகராட்சி சார்பாக அரசு பள்ளி போன்றவை வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 வருடம் நெருங்கி வரும் நிலையில் ஒரு வாக்குறுதியும் நிறைவேறவில்லை.
போர்க்கால அடிப்படையில் அரசு சார்ந்த நிலங்களில் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்ற வேண்டும். கீழக்கரையில் வெறிபிடித்த நிலையிலும், நோய் வாய்பட்ட நிலையி லும் நாய்கள் சுற்றித் திரிகிறது. இதனால் குழந்தைகளை பொது மக்கள் பள்ளிக்கு விட கூட அச்சப்படுகிறார்கள். இதற்கு முன்பு நாய்க்கு கடித்து இறப்பும் நடந்துள்ளது. நாய்கள் விஷயத்தில் நகராட்சி கவனம் செலுத்தி முழுமையாக இதனை சரி செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், மேலும் வடக்கு தெருவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை விழுவதற்கு முன்பு இடித்துவிட்டு புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். பொதுமக்களிடையே மனுக்கள் வாங்கி சரி செய்வது வரவேற்கத்தக்கது மனுகளோடு நின்றுவிடாமல் அதற்குண்டான என்னென்ன தீர்வு செய்தோம் என்று அடுத்த கூட்டத்தில் சேர்மன் துணை சேர்மன் கீழக்கரை பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
- பா.ஜ.க. கூட்டணி எம்.பி. மதுரையில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை பேசினார்
மதுரை
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கி னார். ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மதுரை மாவட்டத்தில் அவர் பய ணத்தை மேற்கொண்டார்.
இன்று காலை ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில் பகுதியில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கி னார். ஒத்தக்கடை தேவர் சிலை அருகே நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஊழல் மிகுதியாக இருக்கிறது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல தமிழகத்தில் நடைபெறும் மொத்த ஊழலுக்கு கிழக்கு தொகுதி சாட்சியாக இருக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்பட்டிருந்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மற்ற மாநிலங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என்று கூறிய தி.மு.க. குரூப் 4 தேர்வு நடைபெற்று 13 மாதங்கள் ஆகியும் 2 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்தி ருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் 1300 நர்சுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அதேபோல் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது.
மதுரையில் நெசவா ளர்கள் அதிகமாக உள்ள னர். ஆனால் தி.மு.க. அரசு அவர்களுக்காக திட்டங்கள் எதுவும் கொண்டு வர வில்லை. ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்து விருது நகரில் ஜவுளி பூங்கா திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இதனால் 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
மதுரை எம்.பி. மோடியை பற்றி மட்டும் குறை கூறுகிறார். காவிரி நீர் குறித்து பேசவில்லை. கேரளாவில் இருந்து மருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து பேசவில்லை. எனவே மதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி. வெற்றி பெற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகம், பாண்டிச் சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன், கிழக்கு மண்டல் தலைவர் பூமிநாதன், ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொதுச்செய லாளர்கள் மூவேந்திரன், கண்ணன், நிர்வாகிகள் கட்கம் ரவி, கல்வாரி தியாகராஜன், வெள்ளைச்சாமி, குறிஞ்சி அரவிந்த், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர பாண்டியன், செல்வமாணிக்கம், வழக்கறிஞர் பிரிவு பிரபாகரன், நெசவாளர் பிரிவு கிருஷ்ணகுமார், சோலை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து நத்தம் ரோடு ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாநகர் பகுதியில் அண்ணாமலை பயணத்தை தொடங்கினார்.
- மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
- 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.
மதுரை
மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கூட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசிய தாவது-
காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் பயிர்கள் கருகி வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தண்ணீரை விட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதை மதிக்காமல் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால் பயிர்கள் கருகி வேதனையில் விவசாயி இறந்த கொடுமை நடந்து வருகிறது.
உலகம் பற்றி பேசும் உதயநிதி தற்போது மாநில அரசு உரிமையை மீட்க குரல் கூட எழுப்பவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. தமிழ்நாட்டி னுடைய இளைய தலை முறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026-ம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 185-இல் கூறப்பட்டுள்ளது.அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187, 188, 189 கூறப்பட்டுள்ளது
தற்போது முதல்-அமைச்சர் கடந்த 2ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த 2 ஆண்டுகளிலே 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 5 ஆண்டு களில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறு தியை ஒப்பிட்டு பார்க்கும் போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம் 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
இளைஞர் அணி மாநாடு நடத்த போகிறோம் என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்.
இந்த மாநாட்டில் இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு என உத்தரவாதம் தரப் ்போகிறார்கள்? இளைஞர்களுக்கு கேள்விக் குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா?.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
- தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
சேலம்:
சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கிளை மாநாடு சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தாசில்தார், ஆர்.டி.ஓ. கலெக்டர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின், இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் முருகபூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
- ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.
- ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.
காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் ஒரு வாக்கு இந்தியாவில் நிகழும் அநீதிகளையும், அடக்குமுறைகளையும் அகற்றும்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.
ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் முதல் வேலை வழங்கப்படும்.
அரசியலமைப்பு காக்கப்பட்டு, உரிமைகள் மீட்கப்படும்.
உங்களின் சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான, இடஒதுக்கீடு நியாயமான முறையில் கிடைக்கப்பெறும்.
நீர், நிலம், வனம் மீதான பழங்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
நீங்கள் இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.
- கொள்ளை போனது கோபாலபுரத்தின் சொத்துக்கள் அல்ல, தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய தமிழகத்தின் கனிம வளங்கள்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில், மணல் கொள்ளையின் மூலம் சுமார் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் தெரிய வந்தது. சட்டவிரோதமாக மணல் கொள்ளையடித்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகவும், தமிழக அரசு, மணல் கொள்ளை தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. தற்போது, அமலாக்கத்துறை, தமிழக காவல்துறை இயக்குனருக்கு எழுதிய ஜூன் 14 தேதியிட்ட கடித விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கடிதத்தில், சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், பொதுப்பணித்துறை அனுமதி அளித்த இடத்தில், மணல் ஒப்பந்ததாரர்கள் ராட்சத இயந்திரங்களை வைத்து சட்ட விரோதமாக மணல் அள்ளி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நான்கு மணல் குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளியிருக்கின்றனர். 4.9 ஹெக்டேர் அளவில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில், 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக ஐந்து மாவட்டங்களில், 190 ஹெக்டேர் அளவில், 28 பகுதிகளில் மணல் அள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் அமலாக்கத்துறை தொழில்நுட்ப ரீதியாக, தெளிவான சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து மணல் அள்ளப்பட்டதற்கு முன்பாகவும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட பின்பும் எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், 273 மணல் இயந்திரங்களை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 நபர்கள், இந்த ராட்சத மணல் அள்ளும் இயந்திரத்தை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அமலாக்கத்துறை தனது கடிதத்தில், நான்கு நிறுவனங்களைக் குறிப்பிட்டு அதில் யார் யாருக்கு மணல் அள்ளவும், மணல் எடுத்துச் செல்லவும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அரசுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, மணல் ஒப்பந்ததாரர்கள், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில், மணல் ஒப்பந்ததாரர்களின் 130 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில், சுமார் 128 கோடி ரூபாய் மதிப்பிலான 209 மணல் அள்ளும் இயந்திரங்களையும் முடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மணல் ஒப்பந்ததாரர்களின் 35 வங்கி கணக்குகளிலிருந்த, 2.25 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முழுக்க முழுக்க அதிகாரிகளின் துணையோடு நடந்துள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியிருந்தார்கள். ஆனால், தமிழக அரசுக்குப் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, திமுக அரசு இதுவரை, எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போதே, ஆட்சிக்கு வந்த அடுத்த பத்து நிமிடத்தில், திமுகவினர் மணல் கொள்ளை அடிக்கலாம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக தனது கட்சிக்காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, இன்று தமிழகத்தின் கனிம வளங்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, திமுக அரசு தவறி விட்டதாக அமலாக்கத்துறையே நேரடியாகக் கடிதம் எழுதியும், இன்னும் மூடி மறைக்கப் பார்க்கிறது திமுக
கொள்ளை போனது கோபாலபுரத்தின் சொத்துக்கள் அல்ல, தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய தமிழகத்தின் கனிம வளங்கள் என்பதை, திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். உடனடியாக, மணல் கொள்ளையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- டிடிவி தினகரன் பிறந்தநாள் மாரத்தான் போட்டி.
- உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை சேர்ந்தவர் தான்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என கூறியுள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை சேர்ந்தவர் தான் தேர்தலுக்கு பிறகுதான் அவர் நடிப்பதில்லை. சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்ப்பதுதான்.
தமிழ்நாடு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்தான் முதலமைச்சராக உள்ளார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
சீமான், போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் விவகாரத்தில் தமிழக காவல்துறை டிஜிபியிடம் சீமான் முறையிட்டுள்ளார். என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
இரட்டை இலையைக் காட்டி பழனிச்சாமி இனி மக்களை ஏமாற்ற முடியாது. அ.தி.மு.க. பலவீனமாகி உள்ளது . தி.மு.க.விற்கு பி டீம் ஆகவும் வெற்றி பெற துணையாக உள்ளவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என மக்கள் முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது .
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். வலுவான கூட்டணி, தீய சக்தி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் கூட்டணி, மக்களாட்சி கொண்டுவர குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை பாதுகாப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி.
கூட்டணியில் பல கட்சிகள் உள்ளது. மேலும் பல கட்சிகள் வர உள்ளார்கள் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் கை கோர்ப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடுத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை.
- மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
சிவகங்கை:
சிவகங்கையில் இன்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்துக்கு வரும்போது எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுகிறது. வீரம் பிறந்த இந்த மண்ணில் முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி போன்ற வீரமிக்க தியாகிகள் வாழ்ந்த மண் சிவகங்கை மண்.
வீரமும், ஆற்றலும் மிக்க அமைச்சராக இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பெரியகருப்பன் செயல்படுகிறார். மாவட்டத்தை எல்லாவகையிலும் மேம்படுத்துவதில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நம்பி பொறுப்புகளை கொடுக்கலாம் என்ற பட்டியலில் பெரியகருப்பன் இடம் பெற்றுள்ளார். செயல்களில் வேகமும், நேர்த்தியும் கொண்டவர் அவர். இந்த விழாவை மாநாடு போல் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ள அவருக்கும் மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. அரசு மிகப்பெரிய பங்கு உண்டு. தி.மு.க. அரசு அமையும் போதெல்லாம் சிவகங்கை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும். தி.மு.க. திராவிட மாடல் ஆட்சியில் மாவட்டத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரூ. 616 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மருத்துவமனை ரூ.14 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இளையான்குடியில் சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், கருவூலம், அரசு மருத்துவமனை விரிவாக்கம், இளையான்குடி புறவழிச்சாலை, சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பள்ளி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை, சிவகங்கை நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூரி இப்படி எண்ணற்ற திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்து 3½ ஆண்டு காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.
ரூ.2452 கோடி மதிப்பில் ஊரக குடியிருப்புகள், ரூ.1753 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், மினி விளையாட்டு அரங்கம், ரூ.35 கோடி மதிப்பில் ஐ.டி. பார்க், ரூ.100 கோடி மதிப்பில் சட்டக்கல்லூரி, சிராவயல் கிராமத்தில் தியாகி ஜீவானந்தம் நினைவு மணிமண்டபம், செட்டிநாடு வேளாண் கல்லூரி, சிவகங்கை அரசின் மருத்துவக்கல்லூரியில் மகப்பேறு மற்றும் அதிதீவிர சிகிச்சைக்கான கட்டிடங்கள், சிவகங்கை பஸ் நிலையம் சீரமைப்புகள், மானாமதுரையில் ஐ.டி.ஐ. கல்லூரி, 248 குடியிருப்புகள், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், திருப்புவனம் வைகையாற்றில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுவரை சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த 3½ ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் மக்களின் உரிமைத்தொகை மூலம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 426 பேர் மாதந்தோறும் ரூ.1000 தொகையினை பெற்று வருகிறார்கள். அதனை வாங்கிய சகோதரிகள் தாய் வீட்டு சீதனமாக இந்த தொகையை அனுப்பி இருப்பதாக மகிழ்ச்சியடைகிறார்கள்.
இதேபோல் கல்லூரிக்கு செல்வதற்கும், சிறு சிறு செலவுகளை சமாளிப்பதற்கும் கஷ்டப்பட்டு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்தை ஒரு அப்பாவாக இருந்து தருகிறார் என கூறுகிறார்கள்.

மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 7,210 பேரும், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 4,076 பேரும் பயனடைகிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நான் மணிக்கணக்கில் துணை முதல்வராக இருந்தபோதும், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் கடன்னுதவி வழங்கியுள்ளேன். அந்த சுழல் நிதியை பெற்ற மகளிர் குழுவினர் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். அந்த வகையில் ரூ.855 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பசியால் அவதிப்படக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவர்கள் சுவையாகவும், வயிறாரவும் சாப்பிடுகிறார்கள்.
"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் 12 லட்சம் பேரும், "மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்" மூலம் 1 லட்சத்து 34 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.
22 ஆயிரம் முதியோர்களுக்கு ஓய்வூதியம், 27 ஆயிரத்து 938 பேருக்கு வீட்டுமனை பட்டா, 23 ஆயிரத்து 553 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி, 29 ஆயிரத்து 909 பேருக்கு பயிர்க்கடன்கள், 8 லட்சம் உழவர்களுக்கு பல்வேறு உதவிகள், 3,822 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 65 கோவில்களுக்கு குடமுழுக்கு, கழனிவாசல் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்படும் பணி என்பது உள்பட சிவகங்கை மாவட்டத்தில் 91 ஆயிரத்து 265 பணிகளுக்கு ரூ.38கோடியே 55லட்சத்து 55ஆயிரத்து 426 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. அரசு துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளி விவரத்தோடு சொல்லி வருகிறேன்.
இதையெல்லாம் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது? வாய்க்கு வந்தபடி எல்லாம் பொத்தாம்பொதுவாக கூறி வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை என்று எரிச்சலோடு புலம்பி கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெட்டிப்பேச்சு பேசுற மாதிரி வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சி தலைவர் பேசலாமா? மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது. இதற்கான புள்ளி விவரங்களை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கொடுத்த வாக்குறுதிகள் 505. அதில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் நிறைவேற்ற வேண்டியது 116 வாக்குறுதிகள் தான்.
அரசின் 34 துறைகளுக்கும் 2,3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது தெரிந்தும், தெரியாத மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். பாவம் அவர் இன்னொரு கட்சி தலைவரின் அறிக்கையை அப்படியே வாங்கி வெளியிட்டு இருக்கிறார்.
2011, 2016 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. அரசின் சார்பில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள், அதனை வெளியிட்ட நாள், அரசாணை எண், அதனால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களை எதிர்க்கட்சி தலைவர் புத்தகமாக வெளியிட தயாராக உள்ளாரா?
கடந்த 10 ஆண்டுகள் முழுவதுமாக ஆட்சி செய்த அ.தி.மு.க. தமிழகத்தை அதள பாதாளத்தில் தள்ளியுள்ளது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள்.
சென்னை-கன்னியாகுமரி கடலோர சாலை திட்டம் என்று கூறினார்கள். அந்த திட்டத்தை நிறைவேற்றினார்களா? மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறினார்கள். யாராவது வாங்கியுள்ளீர்களா? எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என்று கூறினார்கள். செய்தார்களா?
தென் தமிழகத்தில் ஏரோபார்க், 10 ஆடை அலங்கார பூங்காக்கள், 58 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியதா?
பொது இடங்களில் இலவச வை-பை என்று கூறினார்கள். அது எங்கேயாவது அமல்படுத்தப்பட்டு உள்ளதா? இப்படி வெற்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டை பாழாக்கினார்கள். தமிழக அரசையும் திவாலாக்கினார்கள்.
தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டமாக்கினார்கள். பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள். இப்படி பேசக்கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது. அப்போது எதையும் அவர்கள் வாங்கவில்லை. பதவி பெற மட்டும் டெல்லிக்கு சென்றார்கள்.
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றிய அரசு தமிழக அரசு என்று பார்க்காமல் கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கி வருகிறார்கள். ஒன்றிய அரசின் தடைகளை மீறி நாம் தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியே செலவிடப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு, தமிழக அரசை எப்படி வஞ்சிக்கிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2 நாட்களுக்கு முன்பு விரிவாக பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அதை படிக்கவும் இல்லை. காதில் வாங்கிக்கொள்ளவும் இல்லை. சாதாரணமாக தமிழ்நாடு திவாலாகி விட்டதாக கூறி வருகிறார். தமிழ்நாடு திவாலாக வேண்டும் என்பது தான் அவரது விருப்பமா?
தமிழக அரசு வெட்டிச்செலவு செய்கிறது என்று கூறுகிறார். அவர் எதை வெட்டிச்செலவு என்கிறார். மகளிர் உதவித்தொகை, காலை உணவுத்திட்டம் போன்றவற்றை கொச்சைப்படுத்தி பேசுகிறாரா? மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வாறு செலவு செய்வது என்பது எங்களுக்கு தெரியும்.
எதிர்க்கட்சிகள் போடும் கணக்கு அனைத்தும் தப்பு கணக்கு தான். இன்றைக்கு சிவகங்கை மாவட்டத்தில் மக்களின் வரவேற்பை பார்க்கும் போது உதயசூரியன் மீண்டும் உதிக்கும் என உறுதிபட கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை.
- 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.
2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்மன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 505 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையின்மூலம் தி.மு.க. அறிவித்திருந்தது. இதில் பெருப்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,
1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்.
2. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்.
3. சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
4. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
5. பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
6. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுந்தும் முறை அமல்படுத்தப்படும். 7. நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
8. நியாய விலைக் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு வழங்கப்படும். 9. அனைந்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
10. கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
11. முக்கியமான மலைக் கோவில்களில் கேபிள் கார் வசதி செய்து தரப்படும்.
12. முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
13 . நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.
14. தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
15. மாநகராட்சி பகுதிகளில் புகையில்லாப் பேருந்துகள் இயக்கப்படும்.
16. கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
17. குழந்தைகளுக்கு உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.
18. பத்திரிகையாளர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
19. சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மோட்டார் வாங்க 10000 ரூபாய் மானியம்
20. நீட் தேர்வுரத்து.
21. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3% இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
22. புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
23. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.
24, 70 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 10 விழுக்காடு உயர்த்தப்படும்.
25. கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி.
26. புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும்.
27. கல்வி நிறுவனங்களில் ஒய் பை வசதி செய்து தரப்படும்.
28. அரகத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் உள்ள அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
29. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
30. கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
31. நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திட சட்டம் கொண்டு வரப்படும்.
32. 2000 கோடி ரூபாய் மதிப்பில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
33. ஏழையெளிய வணிகர்களுக்கு 15000 ரூபாய் வரை வட்டியில்லாக் கடன்.
34. மீனவ சமுதாயந்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
35. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
36. மத்திய அரசு பள்ளிகள் உட்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் எட்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.
37. அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும். 38. வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.
39. பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
40, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பு 25 இலட்சமாக உயர்த்தப்படும்.
41. தனியார் துறையில் இட ஒதுக்கீடு.
42. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
43. பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
44. சென்னை சிறுசேரி பகுதியில் நவீனப் பேருந்து நிலையம்.
45. திருச்சி, மதுரை, சேலம், நெல்லை மற்றும் கோவை பகுதிகளில் பெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
46. வேலூர், கரூர், ஒசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
47. 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
48. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
49. உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்.
50. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் அலுவல் மொழிப் பிரிவு
51. ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்.
52. தமிழ்நாட்டின் கடன் கமை குறைக்கப்படும்.
53. பொதுத் துறை நிறுவனங்கள் சீரமைக்கப்படும்.
54. அனைத்து உணவுப் பொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விவை.
55. கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலைக்கழகம்.
56. ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்.
57. தூத்துக்குடி, வேலூர், சுரூர், தர்மபுரி மாவட்டங்களில் பேரிட்சை வளர்க்க
சிறப்பு நிதியுதவி. 58. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்.
59. தாமிரபரணி கருமேனி -நம்பியாறு இணைப்புத் திட்டம்.
60. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் 40000 ஏக்கர் பயனடைய கன்னிகா மதகுக் கால்வாய் சீரமைக்கப்படும்.
61. தரைப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்படும்.
62. சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்பிற்கு 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
63. கச்சத்தீவுமீட்டி,
64 மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக்
கல்லூரிகள் உருவாக்கப்படும்.
65. மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் நூறு சதவிகித கல்வியறிவு 66. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பினை
பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
67. தொழில் துறையை மீட்டெடுக்க 15,000 கோடி ரூபாய் நிதி உதவி.
68. இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் தொடங்கப்படும்.
69. திண்டுக்கல், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நோல் பொருள்கள் பூங்கா அமைக்கப்படும்.
70. அனைத்து நகரங்களிலும் நிலத்தடிப் புதைவட மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்.
71. விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள்.
72. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று எல்.இ.டி. பல்புகள்.
73. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையங்கள்.
74. அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும்.
75. தமிழக அரசின் பணி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநிலத் தீர்ப்பாயம் மீண்டும் அமைக்கப்படும்.
76. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்.
77. அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
78. கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியம்.
79. சாலை ஓரங்களில் உறங்கிடும் மக்களுக்கு இரவு நேரக் காப்பிடங்கள்
அமைக்கப்படும்.
80. கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு, மூன்று
ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
81. தாம்பரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள்.
82. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு ஊக்கத் தொகை
83. குறைந்தது 100 நாட்கள் சட்டப் பேரவை.
84. சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டுதல்,
85. போலீஸ் கமிஷன் அமைத்தல்,
86. சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள்.
87. கொடைக்கானல் பழனி மலைகளுக்கு இடையே கேபிள்கார் போக்குவரத்து
88. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்தல்.
89. சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம். 90. கட்டுமானப் பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்தல்.
போன்ற இன்னும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை. பொத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு 90 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய் நிறைவேற்றப்பட்ட பல வாக்குறுதிகளும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நகைக் கடன் ரத்து என்று சொல்லிவிட்டு, 35 இலட்சம் பேருக்கு அது மறுக்கப்பட்டு இருக்கிறது. சில வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குப் பதிலாக அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று சொல்லிவிட்டு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், இருசக்கர வாகன மானியத் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். முதலமைச்சர் அவர்களின் கூற்றில் உண்மை இருப்பின், தி.மு.க.வின் 505 வாக்குறுநிகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்டதற்கான ஆணைகள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையினை தி.மு.க. அரசு வெளியிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
- தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
புதுமைபெண் திட்டம்
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடர்வதற்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. தற்போது ஒன்று முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தெற்கு வளர்ச்சியில்லை என்ற நிலை மாறி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது.
மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி தமிழர்களின் நலனை பாதுகாத்து கொள்வோம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். டோல்கேட் கட்டணம் உயர்வு சிலிண்டர் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் மோடி அரசு தான். எதுவுமே செய்யாமல் விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்ய எற்படுத்தியுள்ளது.
ரூ.1000 உதவித்தொகை
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக 530 கொடுக்கப்பட்டு 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான 1000 உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, திண்டுக்கல் லியோனி , மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ் புதியவன், ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், முருகஇசக்கி, டேனியல், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், பவானிமார்ஷல், ஜான்சிராணி, வைதேகி, சுயும்பு, கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, ஜான் அலெக்ஸாண்டர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வ மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும்.
- மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.
மன்னார்குடி:
தேர்தல் நேரத்தில் கொடுத்தபடி தி.மு.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும், மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும், குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அதன்படி திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மன்னார்குடி தேரடியில் மாவட்டத் தலைவர் ச. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ரகுராமன் வரவேற்றார்.
மாவட்ட பொது செயலாளர்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், வெளிநாடு, வெளி மாநில தமிழர் நலப் பிரிவு தலைவர் போல்ட் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை பி. சிவா கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கோ. உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ. காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி. சந்துரு, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். துரையரசு, ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் எல்.எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ரஜினி கலைமணி, சி. ரெங்கதாஸ், கே.டி. ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






