search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allegations"

    • வெற்றி பெறுபவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள்
    • மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்ததை கூற முன் வருவார்கள் என வழக்கறிஞர் தெரிவித்தார்

    அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது.

    தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இப்போட்டி மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள்.

    அவ்வகையில், மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டிகள் இம்மாதம் 3ம் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.

    ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

    தற்போது 3 பெண்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்ததை கூற முன் வருவார்கள் என அவர்களின் வழக்கறிஞர் மெல்லிஸா அங்க்ரேனி கூறினார்.

    அவர் இது சம்பந்தமாக கூறியதாவது:

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப்போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு, 'உடல் சோதனை' மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியிடும் பெண்களை மேலாடைகளை கழற்றுமாறு கூறியுள்ளனர். போட்டியில் பங்கு பெற்ற பெண்களின் உடலில் ஏதேனும் தழும்புகள், செல்லுலாய்ட் அல்லது பச்சை குத்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் இதற்கு காரணம் கூறியுள்ளனர்.

    இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

    செய்தியாளர் சந்திப்பில் ஒரு போட்டியாளர் கூறுகையில், "எனது உரிமைகள் மீறப்பட்டதாக நான் உணர்கிறேன். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. நான் தூக்கத்தை இழந்து விட்டேன்." என்றார்.

    "ஒரு மூடிய அறையில் உடல் சோதனைகள் செய்யப்பட்டது. அங்கு சில ஆண்களும் இருந்தனர். கதவு முழுவதுமாக மூடப்படவில்லை, இதனால் வெளியில் உள்ளவர்களுக்கும் உள்ளே நடைபெறுவதை பார்க்க முடிந்தது" என மற்றொரு போட்டியாளர் தெரிவித்தார்.

    தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அமைப்பு இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என்று அதன் உரிமையாளர் பாப்பி கபெல்லா தெரிவித்துள்ளார்.

    உலக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பும் இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருவதாகவும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை, 'மிகவும் தீவிரமாக' எடுத்துக் கொள்வதாகவும் கூறியது.

    போட்டியாளர்களின் வயது, உடல் எடை மற்றும் உயரத்தின் விகிதாசாரத்தை சரி பார்க்க உடல் பரிசோதனைகள் இயல்பானவை என்றாலும் போட்டியாளர்கள் நிர்வாணமாக இருக்குமாறு கேட்கப்படுவதில்லை என முன்னாள் மிஸ் இந்தோனேசியா மரியா ஹர்ஃபான்டி கூறியுள்ளார்.

    • கீழக்கரையில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நகராட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கீழக்கரை நகர் மன்ற தலைவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் கீழக்கரை மக்களுக்கு 8 வாக்குறுதிகள் அளித்தனர். அதில் கீழக்கரை நகருக்கு பல்நோக்கு மருத்துவமனை கொண்டு வருதல், அரசு கட்டிடத்தில் பெண்களுக்கு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருதல், பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை விரிவடைந்த பகுதிகளில் மின்விளக்கு அமைத்து தருதல், இளைஞர்களுக்கு அதி நவீன விளையாட்டு மைதானம், நூலகம், பல்நோக்கு மருத்துவமனை, மின் கட்டண செலுத்தும் முறையை ஊருக்கு கொண்டு வருதல், கீழக்கரை நகராட்சி சார்பாக அரசு பள்ளி போன்றவை வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 வருடம் நெருங்கி வரும் நிலையில் ஒரு வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

    போர்க்கால அடிப்படையில் அரசு சார்ந்த நிலங்களில் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்ற வேண்டும். கீழக்கரையில் வெறிபிடித்த நிலையிலும், நோய் வாய்பட்ட நிலையி லும் நாய்கள் சுற்றித் திரிகிறது. இதனால் குழந்தைகளை பொது மக்கள் பள்ளிக்கு விட கூட அச்சப்படுகிறார்கள். இதற்கு முன்பு நாய்க்கு கடித்து இறப்பும் நடந்துள்ளது. நாய்கள் விஷயத்தில் நகராட்சி கவனம் செலுத்தி முழுமையாக இதனை சரி செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், மேலும் வடக்கு தெருவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை விழுவதற்கு முன்பு இடித்துவிட்டு புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். பொதுமக்களிடையே மனுக்கள் வாங்கி சரி செய்வது வரவேற்கத்தக்கது மனுகளோடு நின்றுவிடாமல் அதற்குண்டான என்னென்ன தீர்வு செய்தோம் என்று அடுத்த கூட்டத்தில் சேர்மன் துணை சேர்மன் கீழக்கரை பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்தார். #Spectrum #ManojSinha
    புதுடெல்லி:

    கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் ஒரு தகவல் கூறப்பட்டு இருந்தது.

    அதில், ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு’ என்ற கொள்கை அடிப்படையில், கடந்த 2015-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு நுண்ணலை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது, தொலைத்தொடர்பு துறை நியமித்த குழுவின் சிபாரிசுகளுக்கு முரணானது’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இதனால், பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    தொலைத்தொடர்பு துறையின் தவறான ஒதுக்கீட்டால், மத்திய அரசுக்கு ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியது.

    இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு’ என்ற கொள்கைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களை கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அந்த தீர்ப்பு, ஸ்பெக்ட்ரம் சம்பந்தப்பட்டது.

    நுண்ணலை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அந்த தீர்ப்பு பொருந்தாது.

    இதுவரை, நுண்ணலை ஸ்பெக்ட்ரம் உரிமங்கள், ஏலமுறையில் விற்கப்பட்டதே இல்லை. நிர்வாக வசதிப்படிதான் விற்கப்பட்டுள்ளன. அந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டுமின்றி, தகுதியான எல்லா நிறுவனங்களுக்கும் அந்த தீர்ப்புக்கு முன்பும், பிறகும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (டிராய்) இந்த சிபாரிசுகளையே செய்துள்ளது.

    எனவே, எந்த ஊழலும் நடக்கவில்லை. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

    நுண்ணலை ஸ்பெக்ட்ரமை ஏலமுறையில் விற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, அதுபற்றி பரிசீலிக்கவும் இல்லை. ஸ்பெக்ட்ரமுக்கு பணம் செலுத்தும் கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக அதிகரித்ததால் நன்மையே ஏற்படும். இதனால், ரூ.74 ஆயிரத்து 446 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    இவ்வாறு மனோஜ் சின்கா கூறினார்.

    ×