search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allocation"

    • வனவிலங்குகளின் தொல்லை அதிகரிப்பு எதிரொலி
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுதிட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் தொல்லை அதிகரித்து ள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது.

    தொழிலாளர்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து கிடப்பதாலேயே வனவிலங்குகள் இருப்பது தெரிவதில்லை.

    எனவே தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்ைக விடுத்தனர். இதையடுத்து, அமுல்கந்த சாமி எம்.எல்.ஏ., மேற்படி இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பெரியகல்லார், அய்யர் பாடி, மாணிக்க என்.சி, லோயர்பாரளை, அய்யர்பாடி அந்தோணியார் கோவில், கக்கன் காலனி, கருமலை எஸ்டேட், வில்லோனி அப்பர் டிவிசன், கல்யாண பந்தல் மாரியம்மன் கோவில், ரொட்டிக்கடை பாறைமேடு உள்ளிட்ட 11 இடங்களில் சோலார் எல்இடி விளக்குகள் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 74 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த தோட்டத் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ.வை அவரது அலு வலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, நகர அ.தி.மு.க செயலாளர் மயில் கணேசன், அவை தலைவர் சுடர் பாலு, செந்தில் பாலு, செல் கணேசன், சண்முகவேல், எஸ்.கே.ஸ்.பாலு, சீனிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேைவக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி 9-வது வார்டில் கபடி போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை விரைவில் தனியார் இடத்தில் அமைக்கப்படும். கன்னிராஜபுரத்தில் காம ராஜர் சிலையும், கமுதி அருகே ராமசாமி பட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலையும் அமைக்கப்படும். முதுகுளத்தூரில் முத்துராமலிங்கதேவர் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு ரூ.2800 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கி கொ டுத்துள்ளார். இதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பார்த்திபனூர், சாயல்குடி யில் புறவழிச்சா லைகள் அமைய உள்ளன. முதுகு ளத்தூர் தொகுதி முன்னேறி வரும் தொகுதியாக மாறி வருகிறது.

    தற்போது முதுகுளத்தூர் தொகுதியில் 19 மெகா வாட் மின்சாரம் செலவாகிறது. சாலைகளில் கார்கள் நிரம்பி உள்ளன.

    பரமக்குடியிலும் இமானுவேல் சேகரன் சிலை அமைக்க முருகேசன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்ய வேண்டும். நான் முதுகுளத்தூர் தொகுதிக்கு மட்டும் அமைச்சர் இல்லை. தமிழ்நாடு முழுவதற்கும் அமைச்சர்.

    மாவடட தேவைகளை முதலமைச்சரிடம் கூறி பெற்றுத் தருகிறேன். நமது மாவட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராய் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஷாஜஹான், கவுன்சிலர் பால்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கோவிந்தராஜ், பூபதி மணி, ஆறுமுகவேல், குலாம் முகைதீன், மணலூர் ராமர், வடமலை கிருஷ்ணாபுரம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் வாழ்க்கை தரத்தினை சீராக மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனம் பயிர் அபிவிருத்தி மற்றும் அதன் பயன்பாட்டு மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் 60 எண்ணிக்கை சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு ரூ. 9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவன விரயத்தை 30-40 சதவீதம் குறைக்கலாம். இத்திட்ட த்தின் கீழ் இரண்டு குதிரை திறன் கொண்ட மின்சா ரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

    இந்த திட்ட த்தில் பயன்பெற குறைந்த பட்சம் 2 கால்நடைகள் அல்லது 2 கால்நடை அலகுகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனம் வைத்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது. சிறு, குறு மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இதன் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன புற்களை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்க ஏக்கருக்கு ரூ. 3000 வீதம் மானியம் வழங்க ரூ. 60,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் சொந்தமாக கால்நடைகளும் குறைந்த பட்சம் 0.50 ஏக்கர் தீவனம் ஊடுபயிராக பயிர் செய்ய இடமும் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன்பெறும் விவசாயிகள் முறையாக நீர் சேகரிப்பு மேலாண்மை செயல்படுத்த வேண்டும். அதிகமாக மகசூல் செய்யப்படும் தீவனங்களை ஊறுகாய் புல்லாக மாற்றி சேகரிக்கலாம். அதை அருகில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்யலாம். இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பயிர் சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டா ரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இது குறித்து மடத்து க்குளம் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:- தற்போதைய சூழலில் பயிர்சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காணபிரச்சனைக்கு நுண்ணீர் பாசன திட்டம் சிறந்ததாகும்.சாதாரண முறையைக்காட்டிலும் 50 முதல் 65 சதவீதம் வரை நீர் சேமிக்கப்படுவதோடு பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பலன்கள் கிடை க்கிறது. மனித உழைப்பு 50 முதல் 75 சதவீதம் வரை மிச்சமாகிறது.

    மேலும் திரவ உரங்கள், நீரில் கரையக்கூடிய உரங்க ளை, பாசன நீரில் கலந்து நேரடியாக பயிர்களுக்கு வழங்க முடியும். நீரும், உரமும் வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் வளர்ச்சி நடவு முதல் அறுவடை வரை நன்கு அமைத்து விளைச்சல் அதிகரிக்கிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஒருஹெக்டருக்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 855 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர் இடைவெளிக்கேற்ப மானியத்தொகை வழங்க ப்படுகிறது.

    நுண்ணீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா,அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம் - 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர்,கணியூர், மெட்ராத்தி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அக்ரஹாரகண்ணா டிபுத்தூர், பாப்பான்குளம், சர்கார்கண்ணாடிபுத்தூர் விவசாயிகள்உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்து, சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார். 

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்தார்
    • தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி,

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளு டன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சாடிவயல் யானைகள் முகாமை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.8 கோடி அறிவித்துள்ளார். கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கும் ரூ.5 கோடி தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து கண்டு களிக்கும்படியும் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    மேலும் முதுமலை யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும், வீடு கட்டுவதற்கு ரூ.10 லட்சம் தரப்பட்டுள்ளது, மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ேலும் தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றிற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

    கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மக்களின் கோரிக்கை களுக்கு ஏற்ப வனப்பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமா அவற்றை சரி செய்வோம், மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

    • நாட்டார் கால்வாய் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    மானாமதுரை

    மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கிருங்காகோட்டையை ஒட்டியுள்ள வைகை ஆற்றுப்பகுதியில் நாட்டார் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 16 பெரியகண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள், ஊரணிகளில் விவசாயத்தேவைக்கும், மீன்வளர்ப்புக்கும் தண்ணீர் நிரம்பி வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கால்வாய் முறையாக தூர்வா ரப்படாமல் போனதால் மேடாகி கருவேலமரங்கள் நிறைந்து தண்ணீர் செல்வது தடைபட்டது. இந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாட்டார் கால்வாயை தூர்வாரி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று நாட்டார் கால்வாயை சீரமைக்க ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த கால்வாயை தூர்வார ரூ.3 கோடி ஒதுக்கி பணிகளை செய்தது. முறையாக வேலை செய்யாமல் பெருமளவு நிதியை செலவழிக் காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். நாட்டார் கால்வாயை சீரமைக்கும் பணியால் 3 மாவட்டங்களும் பயனடையும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமமும் பயன்பெறும். இந்த அறிவிப்பால் இந்த பகுதியில் மானாவாரியாக உள்ள நிலங்கள் விளைநிலங்களாக மாறும். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் தனது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    • புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.

    கோவை,

    கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    கோவை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும், மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ப்படும்.

    கோவை மாநகராட்சயில் 17 மேல் நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலைப்பள்ளிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு என ரூ.50 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படும்.

    மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு கருவி ரூ.1 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நவீன சுத்திகரிப்பு கருவிகளை ரூ.20 லட்சம் செலவில் வருகிற கல்வியாண்டில் பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    பொது அறிவை மேம்படுத்தவும், வசதியற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டில் ஒரு பிரத்யேக மக்களை தேடி நூலகம் இயக்கப்பட்டு இதுவரை 4800 மாணவர்கள் மற்றும் 440 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த நிதியாண்டில் கூடுதலாக ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.

    மாநகராட்சி பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதேபோல மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்படும்.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும், மேயரின் கள ஆய்வின் போதும் பொதுமக்களை கூறப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மாண்புமிகு மேயர் விருப்ப நிதி இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் இடம் பெற்றுள்ளது.

    • மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
    • 10 மீட்டர் அகலம், 63 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு.

    பேராவூரணி:

    பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன்கோவில் பூனைகுத்தி காட்டாற்று பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    குறுகிய பாலமாக இருப்பதால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் செல்லும் நிலையில் உள்ளது.

    மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

    இதனால் பேராவூரணி தனித் தீவாக மாறிவிடுகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஆண்டவன் கோவில், இந்திராநகர், கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேராவூரணி மருத்துவமனைக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    பலத்த மழையால் பாலம் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆய்வு குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து உயர் மட்ட பாலம் கட்ட பரிந்துரை செய்தனர்.

    இதன் பேரில் தமிழ்நாடு அரசு 10 மீட்டர் அகலம் 63 மீட்டர் நீளம் கொண்ட உயர் மட்ட பாலம் கட்ட ரூபாய் 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உயர்மட்ட பாலம் கட்டும் பணியை பேராவூரணி எம்.எல்.ஏ நா.அசோக்குமார் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபா வாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமா ணிக்கம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், திமுக ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி தெற்கு க.அன்பழகன், பேராவூரணி வடக்கு கோ.இள ங்கோவன், சேதுபாவாசத்திரம் தெற்கு வை.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி, அப்துல் மஜீது, தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் (திட்டங்கள்) சுதாகர், பேராவூரணி உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் அருண்கு மார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.
    • ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் எவரெஸ்ட் நகர் உள்ளது.

    இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி சாலை மிகவும் மோசமாகி உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.

    சாலையை மேம்படுத்திதர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த பத்தாண்டு காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து எவரெஸ்ட் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டது.

    சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டதற்கு பன்னீர்செ ல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன்ஆகியோருக்கு எவரெஸ்ட் நகரை சேர்ந்த மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 4 இடங்களில் மீன் குஞ்சுகள் வளா்ப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • கரந்தை அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 கோடி நுண்மீன் குஞ்சுகளில், இதுவரை 6.60 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கரந்தையில் உள்ள நீா்வாழ் உயிரின ஆய்வுக் கூடத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உள்நாட்டு மீன் வளா்ப்பில் மாநிலத்திலேயே முதன்மையான மாவட்டமாக தஞ்சாவூா் மாவட்டம் திகழ்கிறது.

    உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளா்ப்போருக்குக் குறைந்த விலையில் அரசு நிா்ணயிக்கும் விலையில் மீன் குஞ்சுகள் விநியோகம் செய்வதற்காகவும் கரந்தை, நெய்தலூா், அகரப்பேட்டை, திருமங்கலக்கோட்டை ஆகிய 4 இடங்களில் மீன் குஞ்சுகள் வளா்ப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும், கரந்தையில் அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது.

    குறைந்து வரும் நாட்டு இன மீன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக தமிழக அரசால் கல்பாசு (கருஞ்சேல் கெண்டை) ரூ.2.50 லட்சமும், இந்திய பெருங்கெண்டை ரூ.2.50 லட்சமும் என மொத்தம் ரூ.5 லட்சம் உற்பத்தி செய்து, இம்மாவட்டத்திலுள்ள ஆறுகளில் இருப்பு செய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    கரந்தை அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 கோடி நுண்மீன் குஞ்சுகளில், இதுவரை 6.60 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.

    இலக்கை முழுமையாக நிறைவு செய்வதற்கு மீன்வளத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மீன்வள உதவி இயக்குநா் சிவக்குமாா், மீன்வள ஆய்வாளா் ஆனந்தன், கண்காணிப்பாளா் மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் வந்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம் விசைத்தறிதொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழிலை நம்பி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். தற்போது அதிநவீன ஏர்ஜெட்,சூல்ஜர்,போன்ற தானியங்கி விசைத்தறிகள் அதிகரிப்பால் விசைத்தறி தொழிலில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

    எனவே விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற, கைத்தறி தொழிலுக்கு ரகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை போல் விசைத்தறிக்கு என்று தனி ரகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான சட்டம் இயற்றி விசைத்தறி தொழிலையும், விசைத்தறியாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த மத்திய அரசு முழு மானியம் வழங்க வேண்டும். அதேபோல பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரவுள்ள பருத்தி சாகுபடி சீசனில் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வருடம் முழுவதும் ஒரே சீரான விலையில் நூல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகராட்சி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
    • சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் நெல்லையப்பர் கோவில் வரை உள்ள சாலையை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகராட்சி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாலை பணிகளுக்கு ரூ.151 கோடி

    இதில் மாநகராட்சிக்குட் பட்ட பல்வேறு வார்டுகளுக்கு நிறைவேற்றப்பட உள்ள திட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தங்களது தொகுதிகளின் குறைகள் குறித்து கவுன்சிலர்கள் எடுத்து கூறினர்.

    கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:-

    2022-2023-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சாலை பணிகளுக்காக ரூ.151 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதி சாலைகளுக்காக மட்டும் ரூ.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    8 சாலைகள்

    மாநகராட்சியின் 8 சாலைகள் இதனால் உடனடியாக சீரமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் நெல்லையப்பர் கோவில் வரை உள்ள சாலையை சீரமைக்க ரூ.1.9 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது.

    தொடர்ந்து, தொண்டர் சன்னதி- பல்கலைக்கழகம் வரை ரூ.6.97 கோடி மதிப்பிலும், மதுரை- குமரி சாலை ரூ.3.10 கோடி மதிப்பிலும், பாளை- தூத்துக்குடி சாலை ரூ.50 லட்சம் மதிப்பிலும், தச்சநல்லூர்- புதிய பஸ் நிலையம் ரூ.5.7 கோடி மதிப்பிலும், ராமையன்பட்டி சாலை ரூ.3 கோடி மதிப்பிலும், டவுன் வடக்கு மவுண்டு சாலை ரூ.2.50 கோடி மதிப்பிலும் சீரமைக்க அரசுக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.

    ஈரடுக்கு மேம்பாலம்

    ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து மேம்பாலம் ரூ.2 கோடி மதிப்பில் அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நெல்லை கோட்ட பொறியாளர் கோபால் பேசியதாவது:-

    பிரத்யேக குடிநீர் அபிவிருத்தி திட்டம்

    அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை நெல்லை மாநகர பகுதிக்கான பிரத்யேக குடிநீர் அபிவிருத்தி திட்டம் என்றுதான் அழைக்க வேண்டும்.

    கடந்த 2011-ம் ஆண்டு இதற்கான கருத்துரு பெறப்பட்டு அப்போதைய மாநகர மக்கள் தொகை அடிப்படையில் 550 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை என கணக்கீடு செய்யப்பட்டது. பின்னர் 2016-ம் ஆண்டு ரூ.290 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டது.

    தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. அடுத்த மாதம் 30-ந் தேதி பணிகள் முழுமையாக முடிவடையும். அதன்பின்னர் ஏற்கனவே உள்ள 44 நீரேற்றும் நிலையம், புதிதாக கட்டப்பட்டுள்ள 14 நீரேற்று நிலையம் என மொத்தம் 58 இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

    இதன்மூலம் மாநகர பகுதியில் 32,594 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். 2022-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதன்மூலம் கணக்கிட்டால் 870 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

    இதன்படி பார்த்தால் 320 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைகிறது. அதனை ஈடுகட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×