search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 ஆண்டுகளுக்கு பிறகு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
    X

    புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை.

    10 ஆண்டுகளுக்கு பிறகு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

    • மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.
    • ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், கோபாலசமுத்திரம் ஊராட்சியில் எவரெஸ்ட் நகர் உள்ளது.

    இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி சாலை மிகவும் மோசமாகி உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்கள் வெளியே சென்று மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமமடைந்து வந்தனர்.

    சாலையை மேம்படுத்திதர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த பத்தாண்டு காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து எவரெஸ்ட் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டது.

    சிமெண்ட் சாலை அமைக்கப்ப ட்டதற்கு பன்னீர்செ ல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன்ஆகியோருக்கு எவரெஸ்ட் நகரை சேர்ந்த மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×