search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கீடு
    X

    கோவை குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கீடு

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்தார்
    • தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி,

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளு டன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சாடிவயல் யானைகள் முகாமை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.8 கோடி அறிவித்துள்ளார். கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கும் ரூ.5 கோடி தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து கண்டு களிக்கும்படியும் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    மேலும் முதுமலை யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும், வீடு கட்டுவதற்கு ரூ.10 லட்சம் தரப்பட்டுள்ளது, மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ேலும் தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றிற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

    கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மக்களின் கோரிக்கை களுக்கு ஏற்ப வனப்பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமா அவற்றை சரி செய்வோம், மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×