search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Micro Irrigation"

    • நுண்ணீர் பாசன பாரமரிப்பு பயிற்சி மீரான்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
    • பயிற்சியின் போது நுண்ணீர் பாசன கருவிகள் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    ஆழ்வார்திருநகரி வட்டார, வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் நுண்ணீர் பாசன பாரமரிப்பு பயிற்சி சாத்தான்குளம் அருகே மீரான்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் தலைமை தாங்கி பயிற்சியின் நோக்கம், நுண்ணீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் தங்கமாரியப்பன் வேளாண்மைதுறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், இரிகேசன் களப்பணியாளர் அபிசேக் நுண்ணீர் பாசன கருவிகள் பயன்பாடுகள் மற்றும் பாரமரிப்பு தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி அட்மா, தொழில் நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவிதொழில் நுட்பமேலாளர்கள் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சீதாலெட்சுமி நன்றி கூறினார்.

    • தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தாங்களே கணினிமூலம் விண்ணப்பிக்க https://tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம்.

    தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 855 வரையும், மற்ற விவசாயிகளுக்கு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் மானியம் பெறலாம்.

    இந்த திட்டத்துக்கான நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நில ஆவணங்களை சிட்டா, இ அடங்கல், புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு உள்ளதற்கான சான்று, ரேஷன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து நேரில் பதிவு செய்யலாம்.

    தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பை அதிகரித்து அதிக வருவாய் பெறலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • குறைந்த அளவு நீராதாரத்தைக் கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள சிறந்த தொழில் நுட்பமே நுண்ணீர் பாசன திட்டம்.
    • நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைத்து சாகுபடி அதிகரிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளே! குறைந்த அளவு நீராதாரத்தைக் கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள சிறந்த தொழில் நுட்பமே நுண்ணீர் பாசன திட்டம். நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை விவசாயிகளே கணிப்பொறி மூலம் தோட்டக்கலைத் துறையின் https://tnhorticulture.tn.gov.in:8080/Home/Index என்ற இணைய தளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம். தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனைதிரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை விவசாய நிலமுள்ளவர்கள்)100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,35,855 வரையும், இதர விவசாயிகளுக்கு (2 எக்டருக்கு மேல் விவசாய நிலமுள்ளவர்கள்) 75 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,05,530 வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் பயிரின் இடைவெளியை பொறுத்து மானியம் பெறலாம்.

    இத்திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 2625 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைத்திட ரூ.20.71 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நிலஆவணங்களான சிட்டா இ அடங்கல் , 3 புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது போர்வெல் உள்ளதற்கான சான்று, குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு முதலியவற்றை எடுத்து வந்து நேரிலும் முன்பதிவு செய்யலாம். தங்களது விருப்பத்தின் அடிப்படையில் அரசினால அங்கீகரிக்கப்பட்டுள்ள நுண்ணீர்ப்பாசன நிறுவனங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம்.

    தேவைப்படின் விவசாயிகள் தாமாகவே பதிவு செய்யலாம் அல்லது நுண்ணீர்ப்பாசன நிறுவனம் மூலமாகவோ, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமாக பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும் நுண்ணீர் பாசனம் தொடர்பான அனைத்து விபரங்களுக்கும் 1800 425 4444 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பினை அதிகரித்து அதிக வருவாயினை பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • காய்கறி பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்
    • வளர்ச்சி மற்றும் மகசூல் அதிக அளவில் கிடைக்கிறது.

    திருப்பூர் : 

    பொங்கலூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஷர்மிளா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கலூர் வட்டாரத்தில் விவசாயிகள் காய்கறி பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.இந்த பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் நீர் நேரடியாக வேர் பகுதியை சென்றடைவதால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிக அளவில் கிடைக்கிறது.

    இது போன்று சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 855-ம், இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் வழங்கப்பட உள்ளது.

    எனவே நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு நகல், வங்கி பாஸ்புத்தக்கத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் பொங்கலூரில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் மற்றும் தோட்டுக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா- 7708328657, தோட்டக்கலை அலுவலர் தமிழி-9361509373, உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வசுமதி-6383457415, சம்பத்-9159273839 மற்றும் கோகுல்ராஜ்-9524847465 ஆகியோரை ெதாடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு,குறு விவசாயி சான்றி தல் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

    • நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
    • களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது,

    நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தெரிவித்து உள்ளார்.

    • விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
    • நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது.

    நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பயிர் சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டா ரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இது குறித்து மடத்து க்குளம் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:- தற்போதைய சூழலில் பயிர்சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காணபிரச்சனைக்கு நுண்ணீர் பாசன திட்டம் சிறந்ததாகும்.சாதாரண முறையைக்காட்டிலும் 50 முதல் 65 சதவீதம் வரை நீர் சேமிக்கப்படுவதோடு பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பலன்கள் கிடை க்கிறது. மனித உழைப்பு 50 முதல் 75 சதவீதம் வரை மிச்சமாகிறது.

    மேலும் திரவ உரங்கள், நீரில் கரையக்கூடிய உரங்க ளை, பாசன நீரில் கலந்து நேரடியாக பயிர்களுக்கு வழங்க முடியும். நீரும், உரமும் வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் வளர்ச்சி நடவு முதல் அறுவடை வரை நன்கு அமைத்து விளைச்சல் அதிகரிக்கிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஒருஹெக்டருக்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 855 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர் இடைவெளிக்கேற்ப மானியத்தொகை வழங்க ப்படுகிறது.

    நுண்ணீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா,அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம் - 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர்,கணியூர், மெட்ராத்தி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அக்ரஹாரகண்ணா டிபுத்தூர், பாப்பான்குளம், சர்கார்கண்ணாடிபுத்தூர் விவசாயிகள்உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்து, சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார். 

    • நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.

    ஈரோடு:

    பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன் பெறும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் 58,000 ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளது.

    கரும்பு, பருத்தி, மக்காசோளம் பயிர்கள் சொட்டு நீர் பாசனம் மூலமும், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் தெளிப்பான், மழை துாவுவான் கருவிகள் மூலம் பயன் பெறுகின்றன. இவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

    நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை சென்னை வேளாண் இயக்குனரக உதவி இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) கோப்பெருந்தேவி நேரில் ஆய்வு செய்தார்.

    பவானி அருகே மைலம் பாடியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வயலில் கரும்பு பயிருக்கு அரசு மானியத்தில் அமைக்கப் பட்ட நுண்ணீர் பாசன பணிகள் குறித்தும், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடு திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட தரைநிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 23 நுண்ணீர் பாசன நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    வரும் காலங்களில் நுண்ணீர் பாசனம் நிறுவும் போது கடைபிடிக்கும் வழிமுறைகளை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    இணை இயக்குனர் சின்னசாமி பேசியதாவது:-

    சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 100 சதவீத மானியமாக அதிகப்பட்சம், ஏக்கருக்கு, 48,253 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கர் வரை, 75 சதவீத மானியத்தில் அதிகப்பட்சம் ஏக்கருக்கு, 37,842 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு கடந்த, 5 ஆண்டில், 38,762 ஏக்கர் பரப்பில், 143.54 கோடி ரூபாய் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 15,113 விவசாயிகள் பயன் பெற்றனர்.

    குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×