search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டக்கலை துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க அழைப்பு
    X
    கோப்புபடம்

    தோட்டக்கலை துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க அழைப்பு

    • காய்கறி பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்
    • வளர்ச்சி மற்றும் மகசூல் அதிக அளவில் கிடைக்கிறது.

    திருப்பூர் :

    பொங்கலூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஷர்மிளா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கலூர் வட்டாரத்தில் விவசாயிகள் காய்கறி பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.இந்த பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் நீர் நேரடியாக வேர் பகுதியை சென்றடைவதால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிக அளவில் கிடைக்கிறது.

    இது போன்று சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 855-ம், இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் வழங்கப்பட உள்ளது.

    எனவே நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு நகல், வங்கி பாஸ்புத்தக்கத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் பொங்கலூரில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் மற்றும் தோட்டுக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா- 7708328657, தோட்டக்கலை அலுவலர் தமிழி-9361509373, உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வசுமதி-6383457415, சம்பத்-9159273839 மற்றும் கோகுல்ராஜ்-9524847465 ஆகியோரை ெதாடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×