search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    கோப்புபடம்.

    நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கீடு

    • நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பயிர் சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டா ரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 290 ஹெக்டருக்கு ரூ.2.62 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இது குறித்து மடத்து க்குளம் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:- தற்போதைய சூழலில் பயிர்சாகுபடியில் நீர்ப்பற்றா க்குறை மிகப்பெ ரியபிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு காணபிரச்சனைக்கு நுண்ணீர் பாசன திட்டம் சிறந்ததாகும்.சாதாரண முறையைக்காட்டிலும் 50 முதல் 65 சதவீதம் வரை நீர் சேமிக்கப்படுவதோடு பயிர் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பலன்கள் கிடை க்கிறது. மனித உழைப்பு 50 முதல் 75 சதவீதம் வரை மிச்சமாகிறது.

    மேலும் திரவ உரங்கள், நீரில் கரையக்கூடிய உரங்க ளை, பாசன நீரில் கலந்து நேரடியாக பயிர்களுக்கு வழங்க முடியும். நீரும், உரமும் வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் வளர்ச்சி நடவு முதல் அறுவடை வரை நன்கு அமைத்து விளைச்சல் அதிகரிக்கிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஒருஹெக்டருக்கு அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 855 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிர் இடைவெளிக்கேற்ப மானியத்தொகை வழங்க ப்படுகிறது.

    நுண்ணீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா,அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம் - 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர்,கணியூர், மெட்ராத்தி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அக்ரஹாரகண்ணா டிபுத்தூர், பாப்பான்குளம், சர்கார்கண்ணாடிபுத்தூர் விவசாயிகள்உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்து, சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    Next Story
    ×