search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grant"

    • 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.
    • மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆம் நிதியாண்டில் சுய தொழில் தொடங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூ.3 கோடியே 55 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில்தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ,அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி க்குறிப்பில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
    • விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டு களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டு காலத்திற்கும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 1.10.2023 முதல் 31.12.2023 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரார்கள் தகுதியானவர்கள் ஆவர்.

    தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். விண்ணப்ப படிவத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவ லரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்த வர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது.
    • இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்திட்டத்தின் கீழ் ஆமணக்கு செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஒய்ஆர்சிஎச் -1 வீரிய விதைகள் உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், வரிசை முறையில் விதைப்பு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஆமணக்கு சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை உதவி இயக்குநர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் வாழ்க்கை தரத்தினை சீராக மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனம் பயிர் அபிவிருத்தி மற்றும் அதன் பயன்பாட்டு மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் 60 எண்ணிக்கை சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு ரூ. 9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவன விரயத்தை 30-40 சதவீதம் குறைக்கலாம். இத்திட்ட த்தின் கீழ் இரண்டு குதிரை திறன் கொண்ட மின்சா ரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

    இந்த திட்ட த்தில் பயன்பெற குறைந்த பட்சம் 2 கால்நடைகள் அல்லது 2 கால்நடை அலகுகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனம் வைத்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது. சிறு, குறு மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இதன் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன புற்களை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்க ஏக்கருக்கு ரூ. 3000 வீதம் மானியம் வழங்க ரூ. 60,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் சொந்தமாக கால்நடைகளும் குறைந்த பட்சம் 0.50 ஏக்கர் தீவனம் ஊடுபயிராக பயிர் செய்ய இடமும் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன்பெறும் விவசாயிகள் முறையாக நீர் சேகரிப்பு மேலாண்மை செயல்படுத்த வேண்டும். அதிகமாக மகசூல் செய்யப்படும் தீவனங்களை ஊறுகாய் புல்லாக மாற்றி சேகரிக்கலாம். அதை அருகில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்யலாம். இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
    • பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவன வளர்ப்பு நிதி இலக்கீட்டில் ஒதுக்கப் பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது.

    கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படு கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

    ஆகவே தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.

    மேலும் இந்த திட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூன் 20-ந் தேதிக்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.
    • மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர்.

    சேலம்:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வருதராஜன், பொருளா:ளர் ராணி உள்ளிட்ட நுஇர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.80-இல் இருந்து ரூ.150 ஆகவும், மருத்துவ காப்பீடு ரூ.300-இல் இருந்து ரூ.497 ஆகவும் உயர்த்தியுள்ளதை மாற்றி அமைக்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நரிக்குடி யூனியனில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்தில் நடப்பாண்டு க்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அ.முக்குளம், வீரசோழன், அழகாபுரி, மினாக்குளம், நல்லுகுறிச்சி, வேளாநேரி, மேலப்பருத்தியூர், கீழக்கொன்றைக்குளம், நாலூர் ஆகிய 9 ஊராட்சிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரையிலான புன்செய் நிலங்களில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் அமைத்து அதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மானிய விலையில் பவர் டிரில்லர் கருவியும், 100 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டையும் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக ஆழ்துளைக்கி ணறு மற்றும் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த ஊராட்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேசுவரன் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2023-24ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்து, உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.515.534 கோடி நிதி ஒதுக்கீடு முன்மொழிவு பெறப்பட்டு, திட்ட இனங்களில் பயனாளி கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    மா பரப்பு விரிவாக்கம், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பரப்பு விரிவாக்கம், கொய்யா பரப்பு விரி வாக்கம், பப்பாளி பரப்பு விரிவாக்கம், பலா பரப்பு விரிவாக்கம், நெல்லி பரப்பு விரிவாக்கம், முந்திரி பரப்பு விரிவாக்கம், மல்லிகை மற்றும் கிழங்கு வகை பூக்கள் (சம்பங்கி) பரப்பு விரிவாக்கம், பழைய தோட்டங்கள் புதுப்பித்தல் (மா மற்றும் முந்திரி), பசுமை குடில் மற்றும் நிழல்வலை கூடம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன்பெற லாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கொரானாவால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்ப தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப் பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கடவுசீட்டு, விசா நகல், கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் ஈடு செய்யப்படும். திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் 6 மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விருதுநகர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னதானம் வழங்குவோர் சான்றிதழ் பெற வேண்டும்.
    • எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.

    மதுரை

    மதுரை நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் கனகேஸ்வரி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழாவின்போது 5 வகையான உணவுகளை அன்ன தானமாக பக்தர்க ளுக்கு வழங்கி வருகிறேன். அந்த உணவுகளை சுற்றுச் சூழலுக்கு எவ்விதமான விளைவையும் ஏற்படுத்தாத வகையில் வழங்கி வருகிறேன். எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.

    இந்த ஆண்டும் அன்ன தானம் 20,000 செலவு செய்துள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுரை சித்திரை திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவோர் உணவுப் பாதுகாப்பு துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.

    இதற்கு முன்பு நடைபெற்ற சித்திரை திருவிழாக்களில் இது போன்ற அறிவிப்பு வெளி யிடப்படவில்லை. அதோடு மாவட்ட கலெக்டரின் இந்த அறிவிப்பு நாளிதழ்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள் ளது. வேறு எந்த சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படவில்லை. இதனால் ஏராளமானவர்கள் இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை.

    எனவே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு செய்து அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில், பிற சமய விழாக்களின் போது இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? 5 லட்சம் மக்கள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த விதியை அமல்படுத்தி, சரிபார்ப்பது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும் போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி, மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை நடைமுறைப் படுத்துங்கள் என அறிவு றுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

    • லூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.


    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 78 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 54 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 33 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 16 மனுக்களும், இதர மனுக்கள் 101 ஆக மொத்தம் 305 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் வியாபாரிகளுக்கு மானியத்தில் ஐஸ் பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.
    • மீனவா்களுக்கான ஐஸ் பெட்டிகள் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வை க்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1500-க்கும் அதிகமான விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மூலம் பாரம்பரிய முறையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மீனவர்களுக்கு மத்திய-மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மானியத்தில் ஐஸ் பெட்டிகள் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கு வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக ராமநாத புரம் மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் சாா்ந்த மத்திய அரசின் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிரதமா் மீன்வள திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் 30 ஏழை மீன் வியாபாரிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மீன்களை பதப்படுத்தி விற்கும் வகையில் உதவும் ஐஸ் பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.

    மீனவா்களுக்கான ஐஸ் பெட்டிகள் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வை க்கப்பட்டுள்ளன. மொத்த விலையில் 40 சதவீதம் மானியத்தில் ஐஸ் பெட்டி கள் உள்ளிட்டவை மீன வா்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    தற்போது முதல் கட்ட மாக ஐஸ் பெட்டிகள் வந்துள்ளன. ஆகவே இரு சக்கர வாகனங்கள் வந்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×