search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nattar canal"

    • நாட்டார் கால்வாய் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    மானாமதுரை

    மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கிருங்காகோட்டையை ஒட்டியுள்ள வைகை ஆற்றுப்பகுதியில் நாட்டார் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 16 பெரியகண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள், ஊரணிகளில் விவசாயத்தேவைக்கும், மீன்வளர்ப்புக்கும் தண்ணீர் நிரம்பி வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கால்வாய் முறையாக தூர்வா ரப்படாமல் போனதால் மேடாகி கருவேலமரங்கள் நிறைந்து தண்ணீர் செல்வது தடைபட்டது. இந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாட்டார் கால்வாயை தூர்வாரி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று நாட்டார் கால்வாயை சீரமைக்க ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த கால்வாயை தூர்வார ரூ.3 கோடி ஒதுக்கி பணிகளை செய்தது. முறையாக வேலை செய்யாமல் பெருமளவு நிதியை செலவழிக் காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். நாட்டார் கால்வாயை சீரமைக்கும் பணியால் 3 மாவட்டங்களும் பயனடையும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமமும் பயன்பெறும். இந்த அறிவிப்பால் இந்த பகுதியில் மானாவாரியாக உள்ள நிலங்கள் விளைநிலங்களாக மாறும். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் தனது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    ×