search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peace"

    • தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
    • இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.

    தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.

    ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:

    யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.

    யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.

    அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)

    மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.

    இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.

    இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

    இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.

    ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).

    இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.

    அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.

    • மன இறுக்கத்துடன் இருப்பவர்களிடம் மகிழ்ச்சி நிலைத்திருக்காது.
    • குழந்தைகள் கூட பேசுவதற்கு தயங்குவார்கள்.

    இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனை சாதுரியமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவார்கள். மகிழ்ச்சியான மன நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் முயற்சிப்பார்கள். அவர்களிடத்தில் மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மன நலன் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் எட்டிப்பார்க்காது.

    எப்பொழுதும் மன இறுக்கத்துடன் இருப்பவர்களிடம் ஒருபோதும் மகிழ்ச்சி நிலைத்திருக்காது. அவர்களிடம் நெருங்கி பழகுவதற்கு பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அவர்களுடன் நட்புடன் பழகுபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அலுவலகம், பொது இடம், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் அவர்களுடன் நெருங்கி பேசுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். வீட்டில் கூட குடும்பத்தினர் அதிகம் பேசாத அளவுக்கு தனிமை சூழலுக்கு தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டு விடும்.

    எப்போதும் கலகலப்பாக இருக்கும் குழந்தைகள் கூட பேசுவதற்கு தயங்குவார்கள். பொதுவாகவே பெண்களிடத்தில் நகைச்சுவை உணர்வு குடிகொண்டிருக்கும். அதிலும் நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கும் பெண்களின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவர்களிடத்தில் வீட்டில் உள்ளவர்கள் சகஜமாகவும், உரிமையோடும் பழகுவார்கள்.

    வீட்டிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட சந்தோஷமான மனநிலையும், எதையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுமே வாழ்க்கையை வளப்படுத்தும். இத்தகைய எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எதிர்பார்ப்புகளுடன் வாழும் மனநிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். நடக்கப்போவதை சுயமாகவே யூகித்து தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகி அல்லல்படக்கூடாது.

    ஒவ்வொரு நாளும் கிடைக்கும் சாதாரண அனுபவங்களில் இருந்து மகிழ்ச்சியை பெறக்கூடிய கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

    மனக்கவலை, மனக்குழப்பம் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். அத்தகைய இயல்பான மனநிலையில் இல்லாதவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது.

    மகிழ்ச்சிதான் வாழ்வின் அடிப்படை தேவை. கவலை, துயரம், அதிருப்தி போன்றவை உடல் நலனையும், மன நலனையும் பாதிக்கக்கூடியவை. வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சி எனும் கடலில் மூழ்கி நிம்மதி எனும் முத்தெடுக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

    • தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
    • 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தினாலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (2-ந் தேதி) முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் வரும் நிலையில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டு வருகின்றது.

    இதையொட்டி முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர். இதில் 25 பேரை கொண்ட ஒரு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 55 பேரை கொண்ட 2 குழுவினர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் தங்கியுள்ளனர். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டி மீட்பு படையை சேர்ந்த அனைவரும், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், கலெக்டர் எந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறாரோ அந்த இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். 

    • பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடரந்து இப்பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது,

    பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தகாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமூக நிலைக்கு கொண்டு வர இரு பிரிவினருக்கான அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் உமா தலை மையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    பின்னர் ஜேடர் பாளையம் அருகே எம்.குன்னத்தூர் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான விளைநிலங்களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் சந்தே கப்படும்படியான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் அறியப்பட்டால் உடனடியாக 94981 81340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

    மேலும், இதுபோன்று 2 சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்ச னையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்ப டுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சி) அசோக்குமார், ஆகியோர் உட்பட காவல் துறையினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    • கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வி நிறைவு விழா இன்று நடை பெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதம் இரண்டு முக்கிய போதனைகளை அளித்து உள்ளது. ஒன்று அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் ,மற்றொன்று எல்லா மக்களையும் ஏற்றுக்கொள்ளுதல். உலகத்தில் ஓரிடத்தில் நடைபெறும் தவறால் மற்றொரு இடத்தில் உயிரினம் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உரத்தின் விலை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோன்று சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா அமைதியை விரும்புகிறது. நமது நாட்டைச் சுற்றிலும் சீனா துறைமுகங்கள் அமைத்து தளவாடங்களை இறக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளுக்கு மத்தியில் அமைதியை நிலை நாட்டுவதற்காக கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

    அன்றில் இருந்து 7 வருடங்களாக ஜூன் 21ந் தேதி உலக யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது உலக மாற்றம் ஏற்படவென்றால் முதலில் ஒரு மனிதன் மாற வேண்டும். மனிதன் மாறும் போது வீடு மாறும் ,கிராமம் மாறும், சமுதாயம் மாறும், நாடும் மாறும். நாடு மாறும் போது உலகமே மாறுபடுமென்று தெரிவித்தார். உலகில் அமைதி இல்லை என்றால் தனி மனிதனுக்கு அமைதி கிடைக்காது. எனவே அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • கடலூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்- போலீஸ்காரர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • காலில் அடிபட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரும் மிகவும் சோர்வுடன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை கடலூர் ரெட்டிச்சாவடி வழியாக சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரிய கங்கணாங்குப்பம் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அன்புமணி ராமதாஸ் வாகனம் சென்ற பிறகு, போலீசார் அங்கு போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது காலில் அடிபட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரும் மிகவும் சோர்வுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட போலீஸ்காரரை எச்சரிக்கை செய்து ஒழுங்காக பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது திடீரென்று நடுரோட்டில் இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீஸ்காரர் திடீரென்று சாலையில் விழுந்தார். அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து இருவரையும் சமாதானப் படுத்தினர். மேலும் அந்த போலீசார் திடீரென்று கீழே விழுந்ததற்கான காரணம் இன்ஸ்பெக்டர் தள்ளி விட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் நடுரோட்டில் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மூளை அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் உயிரிழந்த ஒரு பெண், ‘நான் இறந்தபோது எப்படி உணர்ந்தேன்’ என்பதை இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.
    லண்டன்:

    ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும், அதனை தாம் நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மிச்சைலி, கட்டிலில் படுத்தபடியே, சில அடிகள் உயரத்துக்கு மிதந்ததாகவும், அந்த கணம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், மரணம் மிகவும் அமைதியானது, அதனை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் மிச்சைலி அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருவதாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அமைச்சர் உதயகுமார் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து வந்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்:- தமிழகத்தில் அமைதி நிலவவும், வளர்ச்சி பெறவும் தமிழக மக்கள் நலமுடனும் இருக்க வேண்டுமென நடை பயணமாக ஏழுமலையானை தரிசிக்க வந்தேன்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்பி வருகிறது. பஸ்கள் இயக்கப்படுகின்றன. வியாபாரிகளும் பொது மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்றார்.

    இரவு பத்மாவதி விடுதியில் தங்கிய அமைச்சர் உதயகுமார் இன்று அதிகாலை 5 மணிக்கு தனது குடும்பத்திருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். #TNMinister #Udhayakumar #Tirupati
    அணு ஆயுத சோதனைகளை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதன் மூலம் வடகொரியா அமைதியை விரும்புவதாக தெரிவித்தார்.



    அதற்கு இதர நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #koreanpeninsula #opportunityforpeace #wangyi
    ×