என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்மீக நிகழ்ச்சி"
- பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர்.
கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் - பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை செய்து கொண்டது கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சகுலாவில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தங்கள் காரில் விஷம் குடித்தார் தற்கொலை செய்து கொண்டனர்.
பஞ்சகுலாவின் செக்டார் 27 இல் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் உடல்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.
இறந்தவர்கள் டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல் (42), அவரது பெற்றோர், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என அடையாளம் காணப்பட்டனர்.
பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் அனைவரும் டேராடூனில் கலந்து கொண்டனர் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து டேராடூனுக்குத் திரும்பும் வழியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர். இந்த தற்கொலைக்கு முதன்மையான காரணம் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
- கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 33- வது பிரபஞ்ச மகாதவ வேள்வி நிறைவு விழா இன்று நடை பெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்து மதம் இரண்டு முக்கிய போதனைகளை அளித்து உள்ளது. ஒன்று அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் ,மற்றொன்று எல்லா மக்களையும் ஏற்றுக்கொள்ளுதல். உலகத்தில் ஓரிடத்தில் நடைபெறும் தவறால் மற்றொரு இடத்தில் உயிரினம் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். ரஷ்யா -உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உரத்தின் விலை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியா அமைதியை விரும்புகிறது. நமது நாட்டைச் சுற்றிலும் சீனா துறைமுகங்கள் அமைத்து தளவாடங்களை இறக்கிக் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளுக்கு மத்தியில் அமைதியை நிலை நாட்டுவதற்காக கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
அன்றில் இருந்து 7 வருடங்களாக ஜூன் 21ந் தேதி உலக யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது உலக மாற்றம் ஏற்படவென்றால் முதலில் ஒரு மனிதன் மாற வேண்டும். மனிதன் மாறும் போது வீடு மாறும் ,கிராமம் மாறும், சமுதாயம் மாறும், நாடும் மாறும். நாடு மாறும் போது உலகமே மாறுபடுமென்று தெரிவித்தார். உலகில் அமைதி இல்லை என்றால் தனி மனிதனுக்கு அமைதி கிடைக்காது. எனவே அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






