search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt problem"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடன் வாங்கும் முன் யோசித்தாலே கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.
    • ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது.

    சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும்பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் கடன்களை தீர்க்கும் பரிகாரங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

    மேஷம்

    தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் பசுவுக்கு கொடுத்துவர கடன் நீங்கி வளம் பெறலாம்.

    ரிஷபம்

    ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயார் செய்து அதை வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு கொடுத்து வந்தால் கடன்களை அடைத்து சுகம் பெறலாம்.

    மிதுனம்

    தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வர வேண்டும். மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன் இதனை செய்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கடன் பிரச்சினை தீரும்.

    கடகம்

    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிது வெல்லக்கட்டியை எடுத்து ஓடும் நீரில் விட வேண்டும். அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று வெல்லக்கட்டியை எடுத்து குரங்குகளுக்கு கொடுத்துவர கடன் பிரச்சினைகள் தீரும்.

    சிம்மம்

    ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு நிற திரி போட்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் தீர வழி பிறக்கும்.

    கன்னி

    சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்ய வேண்டும். (நீங்கள் அதை உண்ணக்கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர்வார்த்து ஒரு மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வர கடன் பிரச்சினைகள் தீரும்.

    துலாம்

    பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்ற வேண்டும். இதனை 24 வாரங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிச்சயமாக கடன்கள் தீரும். வெள்ளிக்கிழமை அன்று அரச மரத்தடியில் உள்ள விநாயகருக்கு 11 அகலில் தீபமேற்றி அதனை 11 முறை சுற்றி வந்து வழிபட்டால் கடன்கள் தீரும்.

    விருச்சிகம்

    ஓம் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை சொல்ல வேண்டும். லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் பிரசாதமாக வைக்கலாம். 48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி ஏற்படும்.

    தனுசு

    வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்ட அல்லது கோவில் கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து வளம் பெருகும்.

    மகரம்

    சனிக்கிழமைகளில் எள்ளு உருண்டை செய்து தானமாக கொடுத்துவர கடன்தொல்லைகள் தீரும்.

    கும்பம்

    வியாழக்கிழமை மாலை 5 அல்லது 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு தானமாய் பிரசாதமாக கொடுத்துவர கடன்கள் அடைபடும்.

    மீனம்

    தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 அல்லது 2 மணி அல்லது இரவு 8 மணி அல்லது 9 மணிக்குள் கொடுத்துவர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.

    • கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் கடந்த 2020-ம் ஆண்டு குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.
    • ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி என்பவர், கீதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் அவர் மகளுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

    அம்பத்தூர்:

    சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன். 52 வயதான இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.

    கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். ரம்மி விளையாட்டில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லை அதிகமாகி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இருந்து மீளாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் கடந்த 2020-ம் ஆண்டு குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.

    அப்போது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள கீதாகிருஷ்ணன் திட்டமிட்டார். இதற்காக தனது மூத்த மகள் குணாலினியை கழுத்தை நெரித்து அப்போது கொன்றுள்ளார்.

    மனைவி கல்பனா தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். இதன் பின்னர் திடீரென கீதா கிருஷ்ணனின் மனம் மாறியது. அவர் தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு விட்டு இளையமகள் மானசாவுடன் திருப்பதிக்கு சென்று தலை மறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்த கீதா கிருஷ்ணன் இளைய மகள் மானசாவுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் கீதா கிருஷ்ணனின் கழுத்தை கடன் தொல்லை நெறுக்கியது.

    இதையடுத்து இளைய மகள் மானசாவை நேற்று இரவு கழுத்தை நெரித்து கொன்ற கீதாகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி என்பவர், கீதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் அவர் மகளுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அயனாவரம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ் பத்திரியில் அனுமதித்தனர்.

    கல்பனா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், கீதாகிருஷ்ணன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாளராக இருந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் 2 பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் குடும்பத்தில் சந்தோஷம் களைகட்டியே இருந்து உள்ளது.

    ஆனால் கீதாகிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான பின்னர் புயல் வீசத் தொடங்கி உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு... கடன் தொல்லை ஆகியவற்றால் குடும்பமே பரிதாபமாக பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கீதாகிருஷ்ணன் தான் வசித்து வந்த வீட்டை லீசுக்கு விடுவதாக லட்சுமிபதியிடம் ரூ.2.5 லட்சம் பணம் வாங்கி உள்ளார். ஆனால் லீசுக்கு விடாமல் இழுத்தடித்ததால் லட்சுமி பதி பணத்தை திரும்ப கேட்பதற்காக சென்ற போதுதான் தற்கொலை சம்பவம் வெளியில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • சீர்காழி போலீசார் விசாரணையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
    • விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

    இது குறித்த சீர்காழி போலீசார் விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை, சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த முருகன்(50) என்பதும், கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து சீர்காழி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    முருகன் சீர்காழி எவ்வாறு வந்தார். அவரை கொலை செய்தது யார் என்று சீர்காழி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் முருகனுடன் ஒரு நபர் சேர்ந்து வருவது போன்ற காட்சி பதிவாகியிருந்ததையடுத்து அந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருக்ககூடும் என அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் ஒரு நபர் இருசக்கரவாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக காவல்நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து போலீசார் மர்மநபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் நாங்கூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 26) என்பது தெரியவந்தது.

    மேலும் கொத்தனார் முருகன் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சியில் அவருடன் உள்ள நபர் ராஜகோபால் என்பதை அறிந்த போலீசார்

    தீவிரமாக விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    முருகனிடம் ரூ.5ஆயிரம் ராஜகோபால் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை கேட்டுவந்த நிலையில் சம்பவத்தன்று முருகனை ராஜகோபால் சீர்காழி வரவழைத்து இரவு நேரத்தில் சாலையோரம் படுத்துறங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    சீர்காழி போலீசார் கொலைவழக்காக மாற்றி ராஜகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர்.

    இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார்.

    கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

    போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.

    • வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர்.
    • தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதில், பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூன்று பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    மேலும், கடன் தொல்லை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே கடன் பிரச்சினையில் ெதாழிலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள புல்வாய்கரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர்் முருகன்(வயது55). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(21) என்பவருக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முருகன் நரிக்குடி-திருப்புவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நாகராஜ் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். படு காயமடைந்த முருகன் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே கணவன்-மனைவி தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 45) டேங்கர் லாரி டிரைவர் .இவரது மனைவி தீபா (39) இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், ராகவி என்ற மகளும் உள்ளனர்.

    ராகவிக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது. கவுதமன் சென்னையில் கேட்டரிங் படித்து வருகிறார். வீட்டில் திருப்பதியும், தீபாவும் மட்டும் வசித்து வந்தனர். திருப்பதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தற்கொலை

    இந்த நிலையில் நேற்று திருப்பதியும், தீபாவும் வசித்த வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டு அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இது பற்றி பொதுமக்கள் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் திருப்பதியும், தீபாவும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது.

    கடன் பிரச்சினை

    அவர்கள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்ய என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தங்களது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருப்பதி மற்றும் தீபாவின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 40), தையல் தொழிலாளி. இவருக்கு செந்தாமரை(35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். செந்தாமரை அந்த பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பகண்டை கூட்டுரோடு போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார்.
    • இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் பட்டி னச்சேரி சுனாமி குடியி ருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது30). எலெக்ட்டிரிக்கல் வேலை செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார். தொடர்ந்து, நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தில், புதிய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை தொடங்கினார். வீட்டுக்கா ரரிடம் பணம் வாங்கி வேலையை தொடங்கிய இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    எனவே கடந்த ஜூலை மாதம் வீட்டைவிட்டு சென்றவர், இதுநாள் வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. சமயத்தில் இது போன்ற வீட்டில் சொல்லாமல் செல்லும் சிவக்குமார் சில நாட்களில் வீடு திரும்புவது வழக்கமாம். அதுபோன்று சென்றி ருப்பார் என மனைவி விக்னேஸ்வரி இருந்து விட்டார். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பாத தால், கலக்கம் அடைந்த விக்னேஸ்வரி, சொந்த காரர்கள் வீடுகளில் பல நாட்கள் தேடியும், விசாரித்தும் சரியான பதில் இல்லாததால், திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சிவக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே விவசாயி கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32) இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க விஜயகுமார் கடன் வாங்கினார். மேலும் கடந்த தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்றார். சுயேட்சையாக நின்ற போதும் இவருக்கு கடன் ஏற்பட்டது. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் சுயேட்சை தேர்தலில் நின்றதற்கு செலவழிக்க பணத்திற்காக இவர் பல நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். . இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடனை கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திரும்ப கேட்டுள்ளனர்.

    கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் விஜயகுமாரை திட்டி உள்ளனர். இதனால் நேற்று விஜயகுமாரின் மனைவி இவருடன் சண்டை போட்டு விட்டு திருநாவலூர் காமராஜர் நகரில் உள்ள அ வரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை கூப்பிட மாமியார் வீட்டிற்கு சென்றார் அதற்கு அவரது மனைவி வர மறுத்து விட்டார். கடன் பிரச்சினை யால் தவித்து வந்த விஜயகுமார் மனை வியுடனும் தகராறு ஏற்பட்டதனால் மன உளைச்சலில் இருந்தார். மேலும் மனைவியும் வர மறுத்து விட்டதால் உடனே மாமியார் வீட்டின் பின்பக்கம் சென்று வீட்டு தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த மனைவி மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்கு திருநாவலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினையால் விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட சோகம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ×