search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் கடன் தொல்லையால் வாலிபர் மாயம்
    X

    காணாமல் போன நபரை படத்தில் காணலாம்.

    காரைக்காலில் கடன் தொல்லையால் வாலிபர் மாயம்

    • சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார்.
    • இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் பட்டி னச்சேரி சுனாமி குடியி ருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது30). எலெக்ட்டிரிக்கல் வேலை செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார். தொடர்ந்து, நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தில், புதிய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை தொடங்கினார். வீட்டுக்கா ரரிடம் பணம் வாங்கி வேலையை தொடங்கிய இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    எனவே கடந்த ஜூலை மாதம் வீட்டைவிட்டு சென்றவர், இதுநாள் வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. சமயத்தில் இது போன்ற வீட்டில் சொல்லாமல் செல்லும் சிவக்குமார் சில நாட்களில் வீடு திரும்புவது வழக்கமாம். அதுபோன்று சென்றி ருப்பார் என மனைவி விக்னேஸ்வரி இருந்து விட்டார். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பாத தால், கலக்கம் அடைந்த விக்னேஸ்வரி, சொந்த காரர்கள் வீடுகளில் பல நாட்கள் தேடியும், விசாரித்தும் சரியான பதில் இல்லாததால், திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சிவக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×