

ஈரானில் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டிடம் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு, இந்திய ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு மிருகத்தனமான தாக்குதலில், சியோனிஸ்ட் குற்றவாளி ஆட்சி, ஈரானின் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி (IRIB) கட்டிடத்தை குறிவைத்து, ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளது.
அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் தெளிவாக மீறும் இந்த குற்றச் செயலை இந்தியாவில் உள்ள சுயாதீன ஊடகங்கள் கண்டிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே செய்தி நேரலையின்போது வான்வழித் தாக்குதல் நிகழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.
A few minutes ago, in a brutal attack, the criminal #Zionist regime targeted the building of Iran's state radio and television (IRIB), killing and injuring a large number of Iranian journalists. We expect independent media in #India to condemn this criminal act, which clearly… pic.twitter.com/0yAqtpoEBY