என் மலர்
நீங்கள் தேடியது "journalist killing"
- மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
- அதிபர் ட்ரம்ப், "இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை" என்று தெரிவித்தார்.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திர்கையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது.
மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சம்பவத்தை படம்பிடித்து கொண்டிருந்த பத்திர்கையாளர்கள் பலியாகினர்.
அசோசியேட்டட் பிரஸ், ராய்ட்டர்ஸ், அல் ஜஸீரா உள்ளிட்ட பத்திரிகைகளை சேர்நத 5 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் சூழலில் இது தவுறுத்தலாக நடந்த ஒரு "துயரமான விபத்து" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து உள் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையில் ஊடகத்தினரிடம் பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை. அதேநேரம் இந்த மொத்த கேட்ட கனவையும் நிறுத்த வேண்டும்" என்று பதில் சொன்னார்.
- பாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (25) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த புதன்கிழமை வடக்கு காசாவில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார்.
"நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்" என ஃபாத்திமா ஒருமுறை இணையத்தில் பதிவிட்டதை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விசுவரூபம் எடுக்கிறது. அவர் சவுதி அரேபியாவால் கொல்லப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அங்கு நடக்க உள்ள சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர்.
அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.
அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.
அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது.
இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ஜமால் கசோக்கி கொல்லப்பட்டிருந்து, அதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்றால், அந்த நாட்டினை கடுமையாக தண்டிப்பேன்” என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக, இந்த மாநாடு நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அப்படிப்பட்ட இந்த மாநாட்டை சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தினால், ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) பலரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன் ஊடகங்கள் பலவும் புறக்கணிக்க உள்ளன.
இப்போது இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்க கருவூல மந்திரி ஸ்டீவ் மனுசின், இங்கிலாந்து சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் பாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பி.பி.சி.க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. #Boycott #SaudiConference #Journalist






