search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yemen"

    • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்'

    இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நேற்று முன் தினம் அதிகாலை 3.15 மணியளவில் வான்வழியாக நடந்த டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

    காசா போர் தீவிரமாகி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் அதிபர் நேதனயாகு இந்த வாரம் சந்திக்க உள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் நாட்டின் ஹோதைதா [Hodeida] நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹவுதிக்களின் முக்கிய தளவாடங்களுள் ஒன்றான ஏமானி துறைமுகம் மீது இஸ்ரேலிய போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 89 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த பதிலடி தாக்குதல் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதனயாகு, 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எங்களின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த துணிந்தால் ஹவுதிக்கள் மீது இதுபோன்ற பல தாக்குதலைகளை இஸ்ரேல் நடத்தும். தற்போது ஹோதைதாவில் எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

    • வடகிழக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • அமெரிக்க - பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தகவல்.

    அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் இணைந்து ஏமனின் ஹொடைடா மாகாணத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஹௌதி சார்பில் நடத்தப்படும் அல்-மசிரா டிவி தெரிவித்துள்ளது. செங்கடலை ஒட்டிய அலுஹையா மாவாட்டத்தின் வடகிழக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும், இது தொடர்பான இதர விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஹௌதி சார்பில் அனுப்பப்பட்ட நான்கு டிரோன் கப்பல்கள் மற்றும் இரண்டு டிரோன் விமானங்களை அமெரிக்க - பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் செங்கடல் பகுதியில் செல்வதாக கூறி அவற்றை அழிக்க ஏமனின் வடக்கில் அதிக பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹௌதி அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    • அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

    ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.

     

     இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

     

    • கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
    • சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஏமன்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.

    மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ஒரு கப்பலை சிறைப்பிடித்த நிலையில், ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமன் நாட்டியில் செயல்பட்டு வரும் ஹவுதி குழு செயல்பட்டு வருகிறது.

    இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹவுதி குழுவினருக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி தனது தாக்குலை தொடர்கிறது.

    அப்படித்தான் கீரிஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றது. ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை.

    இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது. கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஹவுதி குழுவுக்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆதரவு அளித்த நாட்டிற்கு தானியங்கள் கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. மற்றொரு கப்பலை மூழ்கடித்தது.

    நேற்று ஏமன் மீது பறந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க விமானப்படை டிரோன் ஏதும் மாயமாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    • ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த அகமது அவாத் பின் முபாரக் புதிய பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சவுதி அரேபியாவுடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏமனின் ஆட்சிக்குழு பிரதமரை மாற்றியுள்ளது. ஆனால், நீக்கத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

    ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அகமது அவாத் பின் முபாரக்

    ஏமன் கடந்த 2014-ல் இருந்து உள்நாட்டு சண்டையில் சிக்கி தவித்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் உள்ளிட்ட இடங்களை பிடித்து. பின்னர் 2015-ல் சவுதி அரேபியா தலைமையிலான குழு ஏமன் நாட்டின் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதி தாக்குதலை முறியடிக்க ஒன்றிணைந்துள்ளன.

    ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்த போதிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

    இதனால கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றாக இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில் நேற்று இரவு 2-வது முறையாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    அமெரிக்க போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள், டிரோன்கள், லாஞ்சர்கள் போன்வற்றை சேமித்து வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு உளவு மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவற்றில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, நெதர்லாந்து நாடுகள் பங்களிப்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் செங்கடலில் பதற்றம் தணிய வேண்டும். நிலைத்தன்மை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் உலகின் முக்கிய கடல் போக்குவரத்து வழியான செங்கடலில் எளிதான வணிக போக்குவரத்து நடைபெறுவதற்கும், உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஹவுதிக்கு பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் எனவும் எச்கரிக்கை விடுத்துள்ளது.

    • இஸ்ரேல் போரினால் காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்
    • சமநிலை இல்லாத போர்க்களத்தில் ஏமனை தாக்குகிறார்கள் என்றார் எர்டோகன்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    எதிர்பாராத இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுத்து, அன்றிலிருந்தே அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் ஒரு போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    சுமார் 23 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி 100-வது நாளை நெருங்கும் இப்போரில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு தருகின்றன.

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

    கடந்த 2023 அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.

    அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.

    இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இது குறித்து கூறியதாவது:

    ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல் நடத்துகின்றன. செங்கடல் பகுதியை "ரத்த கடல்" (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்.

    இவ்வாறு எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    ஏமனில் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். #Yemen #MissileAttack
    சனா:

    ஏமனில் அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் சாடா மாகாணத்தில் சவுதி அரேபியாவின் எல்லையையொட்டி உள்ள அல்-புக்கா நகரில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    இதில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சவுதி அரேபியாவின் தெற்கு எல்லை மாகாணமான நஜ்ரானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் செய்தி சேனலில், அல்-புக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

    ஏமனில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத தளபதி பலியானார். #USAirstrike #Yemen
    வாஷிங்டன்:

    அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘யுஎஸ்எஸ் கோல்’ என்கிற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

    ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு சென்றது. அதன்படி அங்கு கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

    அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகை ஓட்டிவந்து ‘யுஎஸ்எஸ் கோல்’ கப்பலின் மீது மோதினர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

    இதில் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் குண்டுவெடிப்பில் சிக்கி கப்பலில் இருந்த கடற் படைவீரர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 39 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதியான ஜமால் அல்-படாவி என்பவர் மூளையாக செயல்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்கா போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. இது குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது அந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.

    இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஏமனின் மரிப் மாகாணத்தில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாதிகளின் நிலைகள் மீது கடந்த 1-ந்தேதி அமெரிக்க போர் விமானங்கள் துல்லிய வான்தாக்குதல் நடத்தியது. இதில் ‘யுஎஸ்எஸ் கோல்’ போர்க்கப்பல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதி ஜமால் அல்- படாவி கொல்லப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டரில் கூறுகையில், “யுஎஸ்எஸ் கோல்’ போர்க்கப்பல் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த நமது கதாநாயகர்களுக்கு நம்முடைய சிறப்பான ராணுவம் நீதியை வழங்கிவிட்டது. நமது வீரர்களை கொன்ற பயங்கரவாதி ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டுவிட்டார். அல்-கொய்தாவுக்கு எதிரான நம்முடைய போர் தொடரும்” என தெரிவித்தார். #USAirstrike #Yemen 
    ஏமன் நாட்டில் அமெரிக்க படையினர் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி கொல்லப்பட்டார். #YemenDroneStrike #AlQaidaLeader
    சனா:

    ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது.  இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக இருந்து வருபவர் படாவி.

    இவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர்.  இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில், பயங்கரவாத இயக்க ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டு இருந்துள்ளார்.  அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் படாவி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. #YemenDroneStrike #AlQaidaLeader

    ×