என் மலர்
உலகம்

நெருங்கிய மரண தண்டனை.. ஏமனில் இந்திய செவிலியரை காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் கடைசி முயற்சி
- ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
- 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொலைக் குற்றத்திற்காக நாளை (ஜூலை 16) ஏமனில் மலையாள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (38) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் நிமிஷாவை காப்பாற்ற மதத் தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் ஏமன் மத குருக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து அபூபக்கர், ஏமன் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமருடன் கலந்துரையாடினார்.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று காந்தபுரம் அபூபக்கர் வலியறுத்தி உள்ளதாக தெரிகிறது. மரண தண்டனைக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






