என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏமன்"

    • செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வந்தது.
    • 4 கப்பல்களை தாக்கி மூழ்கடித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் செங்கடல் வழியாக (Corridor) செல்லும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது ஹவுதி குழு தாக்குதல் நடத்தி வந்தது.

    சமீப காலமாக ஹவுதி தனது தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் ஏமனில் இருந்து வெகுதூரத்தில் உள்ள ஏடன் வளைகுடாவில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்து வருவதாக பிரிட்டிஷ் ராணுவத்தின் இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    தீப்பற்றி எரியும் கப்பலை, மாலுமிகள் கைவிட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
    • மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் கதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.

    இந்நிலையில் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நீதிபதி விக்ரமநாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி இந்த தகவலை தெரிவித்தார்.

    "இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய ஒரு புதிய மத்தியஸ்தர் முன்வந்துள்ளார். இந்த விஷயத்தில் எந்த பாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நல்ல செய்தி" என்று அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து விசாரணை ஜனவரி 2026 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

    அவரது மரண தண்டனையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    • மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்தனர்.
    • இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை கடந்து நேற்று பின்னேரத்தில் டிரோன்கள் நகரத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டது.

    சுற்றுலா நகரமாக அறியப்படும் ஏலாட்டில் உள்ள மால் ஹயாம் ஷாப்பிங் சென்டர் அருகே ஏராளமான உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் கூடியிருந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடையாதோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஏமனில் இருந்து இஸ்ரேலின் மீது தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.

    டிரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது. 

    • இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
    • முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது

    ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் அங்கு 12 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்கப் போவதாக இஸ்ரேல் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. 

    ஹவுதிக்களின் ராணுவ கட்டமைப்புடை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள மக்களும் கப்பல்களும் தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தனது எச்சரிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த செப்டம்பர் 10 அன்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.
    • தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்.

    ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தினர்.

    தலைநகர் சனாவில் உள்ள ராணுவ தலைமையகம், எரிபொருள் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 130 -க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியது.
    • ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • நிமிஷா பிரியாவிற்கு 2018ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
    • 2023ஆம் ஆண்டு ஏமன் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

    அவரது மரண தண்ட னையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

    இந்தநிலையில் நர்சு நிமிஷா பிரியாவுக்கு கடந்த 16-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. நர்சு நிமிஷா பிரியாவை தூக்கு தண்டனையில்இருந்து காப்பாற்றும் நடவடிக்கை களில் அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.

    இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்வை எட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் நிமிஷா பிரியாவிற்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் நர்சுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டனர்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கியமாக கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டு குடிமகன் தலால் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் நர்சு குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது. நர்சு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற விரும்பவில்லை என்ற முடிவை, கொலை செய்யப் பட்ட தலாலின் குடும்பத்தினர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நர்சின் மரண தண்டனையை ரத்து செய்ய கொள்கை அளவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள தாக "சேவ் நிமிஷா பிரியா" கவுன்சிலின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வக்கீலுமான சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் எனவும், கருணை உள்ளிடட விவாதங்கள் தொடரும் என்றும் அவர் கூறி யிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    நர்சுக்கான மரண தண்டனைக்கான கோரிக்கையை வாபஸ் பெற தலாலின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தலாலின் பெற்றோர் உயிருடன் உள்ளனர். மேலும் அவரது குழந்தைகளும் இருக்கின்றனர். ஏமன் சட்டப்படி இறந்தவரின் சொத்தின் வாரிசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும்.அதன்படி இறந்தவரின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் தான் முடிவெடுக்க வேண்டும்.

    அவர்கள் இல்லையென்றால் தான் உடன் பிறந்த சகோதரர் முடிவெடுக்க முடியும். நாங்கள் எங்களின் சொந்தவழியில் விவாதங்களை நடத்து கிறோம். மத்திய அரசு இந்த விவாதங்களில் எதிலும் பங்கேற்கவில்லை. இரண்டு வாரங்களாக நாங்கள் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • பார்ட்னர் ஒருவருடன் சேர்ந்து தொழில் தொடங்கியுள்ளார்.
    • அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை கைப்பற்ற மயக்க ஊசி செலுத்தியபோது, கூடுதல் டோஸ் செலுத்தியதால் பார்ட்னர் உயிரிழப்பு.

    ஏமன் நாட்டில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற இருந்தது. இந்திய அரசு முடிவந்த அளவிற்கு தேவையான அனைத்தையும் செய்து வந்தது. கேரள மாநில மதகுரு, ஏமன் நாட்டின் மதகுருவிடம் இது தொடர்பாக பேசினார். இந்த நிலையில் நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டள்ளது.

    இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.

    ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, பார்ட்னராக சேர்த்துள்ளார்.

    நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

    மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    பின்னர 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

    • ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
    • 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கொலைக் குற்றத்திற்காக நாளை (ஜூலை 16) ஏமனில் மலையாள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (38) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் நிமிஷாவை காப்பாற்ற மதத் தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கேரள இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் ஏமன் மத குருக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் குறித்து அபூபக்கர், ஏமன் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமருடன் கலந்துரையாடினார்.

    மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று காந்தபுரம் அபூபக்கர் வலியறுத்தி உள்ளதாக தெரிகிறது. மரண தண்டனைக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    • குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டது.

    ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.

    இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.

    ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஏமன் மனித உரிமைகள் குழு, இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இறந்த சிறுவர்களில் இருவர் 12 வயதினர், மற்ற இருவர் 14 வயதினர் என்றும், ஐந்தாவது குழந்தையின் வயது தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    மேலும் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் பிற போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரின் முக்கிய களமாக தைஸ் நகரம் இருந்து வருகிறது.

    ஏமனில் உள்நாட்டுப் போர் 2014 இல் தொடங்கியது. அப்போது ஹவுதிகள் தலைநகர் சனாவையும் வடக்கு யேமனின் பெரும்பகுதியையும் கைப்பற்றினர்.  

    • பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்திருந்த பார்ட்னருக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார்.
    • கூடுதல் டோஸ் செலுத்தியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு.

    இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.

    ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, பார்ட்னராக சேர்த்துள்ளார்.

    நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

    மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    பின்னர 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து இந்த விசயம் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஏமன் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முடிந்த அளவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

    • கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான 'மேஜிக் சீஸ்' கப்பல் சேதமடைந்தது.
    • நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹவுத்திகளால் தாக்கப்பட்டன.

    ஏமனில் ஹவுத்திகள் வசம் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 20 போர் விமானங்களைப் பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன.

    திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஏமனில் உள்ள மூன்று துறைமுகங்கள் மற்றும் ராஸ் காதிப் மின் நிலையத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்தது.

    இதற்கிடையில், ஹவுத்திகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தனர். செங்கடலில் ஹவுத்திகள் நடத்திய தாக்குதலில் கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான 'மேஜிக் சீஸ்' கப்பல் சேதமடைந்தது. தீப்பிடித்து எரிந்ததால், கப்பலை கைவிட்டு ஊழியர்கள் தப்பினர். கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகுகளும் கப்பலில் வீசப்பட்டன.

    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரிட்டிஷ் கப்பலும் தாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தாவிட்டால் செங்கடலை முற்றுகையிடுவதாக ஹவுத்திகள் சபதம் செய்துள்ளனர்.

    நவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹவுத்திகளால் தாக்கப்பட்டன.

    ×