என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yemen Houthi rebels"

    • ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியது.
    • ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • மூன்று சிறிய படகுகள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஏமனில் உள்ள அல் ஹுதைதா கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மூன்று சிறிய படகு மூலம் கப்பலை வழிமறித்துள்ளனர். இரண்டு படகில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்துள்ளனர். ஒரு படகில் மனிதார்கள் யாரும் இல்லை. ஆளில்லாத படகு கப்பல் மீது இரண்டு மூன்று முறை மோதியுள்ளது. பின்னர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது அநத் ஆளில்லாத படகு விலகிச் சென்றுள்ளனர்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்கள் உள்ள இரண்டு படகில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் இருந்து கப்பல் தப்பிவிட்டது.

    கப்பலில் இருந்து மாலுமிகள் உள்பட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நான்கு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
    ரியாத்:

    சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காசிப்-கே2 ரக ஆளில்லா விமானங்களை ஏவி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சவுதி விமானப்படை போர் விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    ×