என் மலர்
நீங்கள் தேடியது "Nimisha Priya"
- தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
- மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் கதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதி விக்ரமநாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி இந்த தகவலை தெரிவித்தார்.
"இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய ஒரு புதிய மத்தியஸ்தர் முன்வந்துள்ளார். இந்த விஷயத்தில் எந்த பாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நல்ல செய்தி" என்று அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விசாரணை ஜனவரி 2026 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
அவரது மரண தண்டனையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
- நிமிஷா பிரியாவிற்கு 2018ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
- 2023ஆம் ஆண்டு ஏமன் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
அவரது மரண தண்ட னையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
இந்தநிலையில் நர்சு நிமிஷா பிரியாவுக்கு கடந்த 16-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. நர்சு நிமிஷா பிரியாவை தூக்கு தண்டனையில்இருந்து காப்பாற்றும் நடவடிக்கை களில் அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.
இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்வை எட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் நிமிஷா பிரியாவிற்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் நர்சுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கியமாக கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டு குடிமகன் தலால் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் நர்சு குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது. நர்சு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற விரும்பவில்லை என்ற முடிவை, கொலை செய்யப் பட்ட தலாலின் குடும்பத்தினர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நர்சின் மரண தண்டனையை ரத்து செய்ய கொள்கை அளவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள தாக "சேவ் நிமிஷா பிரியா" கவுன்சிலின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வக்கீலுமான சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் எனவும், கருணை உள்ளிடட விவாதங்கள் தொடரும் என்றும் அவர் கூறி யிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
நர்சுக்கான மரண தண்டனைக்கான கோரிக்கையை வாபஸ் பெற தலாலின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தலாலின் பெற்றோர் உயிருடன் உள்ளனர். மேலும் அவரது குழந்தைகளும் இருக்கின்றனர். ஏமன் சட்டப்படி இறந்தவரின் சொத்தின் வாரிசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும்.அதன்படி இறந்தவரின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் தான் முடிவெடுக்க வேண்டும்.
அவர்கள் இல்லையென்றால் தான் உடன் பிறந்த சகோதரர் முடிவெடுக்க முடியும். நாங்கள் எங்களின் சொந்தவழியில் விவாதங்களை நடத்து கிறோம். மத்திய அரசு இந்த விவாதங்களில் எதிலும் பங்கேற்கவில்லை. இரண்டு வாரங்களாக நாங்கள் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- பார்ட்னர் ஒருவருடன் சேர்ந்து தொழில் தொடங்கியுள்ளார்.
- அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை கைப்பற்ற மயக்க ஊசி செலுத்தியபோது, கூடுதல் டோஸ் செலுத்தியதால் பார்ட்னர் உயிரிழப்பு.
ஏமன் நாட்டில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற இருந்தது. இந்திய அரசு முடிவந்த அளவிற்கு தேவையான அனைத்தையும் செய்து வந்தது. கேரள மாநில மதகுரு, ஏமன் நாட்டின் மதகுருவிடம் இது தொடர்பாக பேசினார். இந்த நிலையில் நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
ஏமன் நாட்டின் விதிமுறைப்படி தொழில் தொடங்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தலால் அப்டோ மெஹ்தி என்பருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, பார்ட்னராக சேர்த்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல மெஹ்தி, நிமிஷா பிரியாவை மிரட்ட தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க மெஹ்தி கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விடுதலை ஆகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்தியதாக தெரிகிறது. கூடுதல் டோஸ் செலுத்தியதால் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் ஏமனில் இருந்து வெளியேற முயற்சித்தபோது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பின்னர 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
- நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.
- தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது33). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ம்ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். ஏமனுக்கு செல்ல தனக்கு அனுமதி வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. இதனால் நர்சு நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.






