என் மலர்
நீங்கள் தேடியது "குண்டுவீச்சு"
- சிரிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை, உள்நாட்டு மோதல் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 374 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது.
- மதகுருமார்களுக்கு அப்பகுதியில் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியை வழங்கியதாகக் கூறினார்.
சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து ஸ்விடா மாகாணத்துக்கு கூடுதல் அரசுப்படைகள் அனுப்பப்பட்டன. இதில் ட்ரூஸ் மதத்தினர் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது.
தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையை வீசியது. இதைதொடர்ந்து இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறும்போது, "போருக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது" என்றார்.
இந்நிலையில் அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் மத்தியஸ்தத்தின் கீழ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதையடுத்து சிரிய இராணுவத்திற்கும் ட்ரூஸ் படைகளுக்கும் இடையே பல நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, சிரிய இராணுவ படையினர் ஸ்விடா மாகாணத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
சிரிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை, உள்நாட்டு மோதல் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 374 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா, ட்ரூஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுக்கு அப்பகுதியில் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியை வழங்கியதாகக் கூறினார்.
- போப் ஆண்டவருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார்.
- கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் சுமார் 1,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். பாலஸ்தீன முஸ்லிம்களுடனும் அவர்கள் இணக்கமான உறவைக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று, காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்தது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் நிலைமை குறித்து போப் ஆண்டவருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டது.
போப் லியோ இந்தத் தாக்குதலைக் கண்டித்து, காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் குறித்து விசாரித்து வருவதாகக் கூறின. தேவாலயம் அழிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், காசாவில் கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 58,500ஐ கடந்துள்ளது. 1,39,600க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர்
- டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுத மோதல்கள் தொடங்கின.
உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர், அவர்களில் பாதி பேர் சிரியாவில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் உள்ள ட்ரூஸ் மக்களைப் பாதுகாப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
"டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் " என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார். ஸ்வீடா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தனது கடுமையான தாக்குதல்களைத் தொடரும் என்று அவர் எச்சரித்தார்.
பாதுகாப்பு அமைச்சராக நானும் பிரதமர் நெதன்யாகுவும் இதற்கு உறுதிபூண்டுள்ளோம் என்று காட்ஸ் கூறினார்.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு குண்டு விழுந்து வெடித்தது. இதனால் நேரடி ஒளிபரப்பில் இருந்த ஒரு தொகுப்பாளர் நிகழ்ச்சியை நடுவில் விட்டுவிட்டு ஓடினார். இதன் வீடியோவை காட்ஸ் பகிர்ந்துள்ளார்.
- குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டது.
ஏமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.
ஏமன் அரசுடன் கூட்டணியில் உள்ள இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் போராளிகள் குழுவால் பீரங்கி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏமன் மனித உரிமைகள் குழு, இந்த சம்பவத்தைக் கண்டித்து, குழந்தைகளின் சிதைந்த உடல்களின் புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறந்த சிறுவர்களில் இருவர் 12 வயதினர், மற்ற இருவர் 14 வயதினர் என்றும், ஐந்தாவது குழந்தையின் வயது தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்லாஹ் கட்சியால் ஆதரிக்கப்படும் பிற போராளிகளுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரின் முக்கிய களமாக தைஸ் நகரம் இருந்து வருகிறது.
ஏமனில் உள்நாட்டுப் போர் 2014 இல் தொடங்கியது. அப்போது ஹவுதிகள் தலைநகர் சனாவையும் வடக்கு யேமனின் பெரும்பகுதியையும் கைப்பற்றினர்.
- ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
- கொத்து குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரான் தங்கள் எல்லையில் கொத்து குண்டுகளை ஏவுவதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை செய்யப்பட்ட குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் ஏவிய ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கிலோமீட்டர் (4 மைல்) உயரத்தில் உடைந்து, மத்திய இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) சுற்றளவில் சுமார் 20 சிறிய குண்டுகளாக வெடித்து சிதறடித்தது.
சிறிய குண்டுகளில் ஒன்று மத்திய இஸ்ரேலில் உள்ள அசோர் நகரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி சேதம் ஏற்படுத்தியதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் இராணுவ நிருபர் இம்மானுவேல் ஃபேபியன் தெரிவித்தார். இருப்பினும், உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

வெடிக்காத குண்டுகளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் ஒரு கிராஃபிக் வீடியோவையும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டது.
கொத்து குண்டுகள் (Cluster bombs) என்பவை மிகவும் ஆபத்தான ஆயுதமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். ஏவப்படும் ஒரு குண்டு பல சிறிய குண்டுகளாக இலக்கின் மீது விழுந்து வெடிக்கிறது.
இவற்றில் சில உடனடியாக வெடிக்காமல் போகலாம். நீண்ட காலத்திற்குப் பிறகும் அவை வெடித்து பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே கொத்து குண்டுகளின் பயன்பாடு குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நீடித்து வருகிறது
கொத்து குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது. இதில் 111 நாடுகளும் 12 பிற அமைப்புகளும் கையெழுத்திட்டன. இருப்பினும், ஈரானும் இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தில் சேர மறுத்துவிட்டன.
இதற்கிடையில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷிய படைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அமெரிக்கா 2023 இல் உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்கியது. ரஷியாவும் கொத்து குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளும் கொத்து குண்டுகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலால் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் அமைக்கட்டப்பட்டன.
- காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையமும் இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்டது.
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
கடுமையான தீ விபத்தில் சிக்கிய ரஃபா ஜி.எச்.எஃப் முகாமில் சமீபத்தில் உணவு தேடி வந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
மே 27 முதல் GHF முகாம்கள் நோக்கி வரும் மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 340 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர், இதனால் பலி எண்ணிக்கை 54,418 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையமும் இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்டது.
- சந்தேகத்துக்குரிய 2 நபர்களை போலீசார் கண்காணித்தனர்.
- போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் கண்ட்வாலா பகுதியில் தாகூர் துவாரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென கோவில் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் சுவரின் ஒரு பகுதி சேதமானது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டு வீசியவர்களை தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அமிர்த சரஸ் கோவில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேகத்துக்குரிய 2 நபர்களை போலீசார் கண்காணித்தனர். ராஜ சான்சி பகுதியில் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலைமை காவலர் குர்பிரீத் சிங்குக்கு காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக சுட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் காயம் அடைந்தார். அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- காகோவ்கா நீர்மின் அணையின் உடைப்பு மக்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
- 7,00,000 மக்களுக்கு முறையான குடிநீரின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது
உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா. சபையின் உயர் உதவி அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும், துணைச் செயலாளர், ஜெனரல் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஒரு வருடமாக நடைபெற்று வரும் ரஷிய-உக்ரைன் போரின் விளைவாக குண்டு வீசி தகர்க்கப்பட்ட காகோவ்கா அணையிலிருந்து வெளியேறும் வெள்ளத்தினால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஒரு அசாதாரண நிலையாக 7,00,000 பேருக்கு உடனடியாக குடிநீர் தேவைப்படுகிறது. உக்ரைன் போன்ற உலகின் மிக முக்கியமான உணவு வழங்கும் பிராந்தியத்தில் பெரிய அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, வரும் காலங்களில் குறைந்தளவு தானிய ஏற்றுமதிக்கே வழிவகுக்கும். இது தவிர்க்க முடியாதது. இதனால், உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையும் உயரலாம். மேலும் பல லட்சம் மக்களுக்கு அவர்களின் தேவைக்கும் குறைவான அளவு உணவு மட்டுமே கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்" எனவும் தெரிவித்தார்.
அசோசியேட்டட் பிரஸ்ஸிற்கு பேட்டியளித்த அவர், "இது ஒரு தொடரப்போகும் பெரும் பிரச்சனை. ஆனால், இப்பொழுது வெளிப்படுவது (வெள்ளப்பெருக்கு), ஒரு செயலின் (குண்டு வீச்சு) விளைவுகளினால் ஏற்படும் பாதிப்பின் தொடக்கம் மட்டுமே" என கூறினார்.
புதன்கிழமையன்று காகோவ்கா நீர்மின் அணை உடைந்ததும், அதனைத் தொடர்ந்து நீர்த்தேக்கத்திலிருந்து நீர் டினிப்ரோ நதியில் முழுமையாக வெளியேற்றப்பட்டதும், ஏற்கனெவே பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஒரு வருடத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
டினிப்ரோ நதியின் மேற்குக் கரை பகுதியை உக்ரைன் தன்னகத்தே கொண்டுள்ளது. அதே சமயம், ரஷிய துருப்புகள் எளிதில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய தாழ்வான கிழக்குப் பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. அணையும் நீர்த்தேக்கமும் தெற்கு உக்ரைனின் குடிநீருக்கும் நீர்ப்பாசனத்திற்கும் அத்தியாவசியமானது. இந்தப் பகுதி கெர்ஸ்ன் பிராந்தியத்திலுள்ளது. இந்த இடத்தை செப்டம்பர் மாதம் ரஷியா சட்டவிரோதமாக ஒரு வருடமாக ஆக்கிரமித்துள்ளது.
உக்ரேனிய உதவிக் குழுக்கள் மூலம் மட்டுமே ஐ.நா. சபை உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளில் 30,000 மக்களை தேடி சென்றுள்ளதாகவும் ஆனால், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளை அடைய ரஷியா இதுவரை அனுமதிக்கவில்லை, எனவும் கிரிஃபித்ஸ் கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக கூறிய கிரிஃபித்ஸ், புதன்கிழமையன்று ரஷியாவின் ஐ.நா. தூதரான வாசிலி நெபென்சியாவை தாம் சந்தித்ததாகவும், உக்ரைனில் உள்ள ஐ.நா. குழுக்கள் அந்த பகுதிகளில் நேரிடையாக சென்று அங்குள்ள உக்ரைன் மக்களுக்கு உதவியும், ஆதரவும் தர அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், இது நடக்கும் என தாம் நம்புவதாகவும், அவர் கூறினார்.
"உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசர கால நடவடிக்கை அத்தியாவசியமானது. அதன் பின்னணியில், உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும், ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் 7,00,000 மக்களுக்கு முறையான குடிநீரின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அணையிலிருந்து விநியோகிக்கப்பட்ட குளிர்ச்சியான நீரை தற்பொழுது தொடர்ந்து வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும், "போரின்போது நிலத்தில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளுடன் கூடிய பகுதிகளிலும் வெள்ள நீர் வேகமாக பாய்ந்துள்ளது. அந்த கண்ணி வெடிகள் மக்கள் சற்றும் எதிர்பார்க்காத இடங்களில் மிதந்து வரலாம்," எனவும் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டார்.
"இது ஒரு தொடர் சிக்கல். மக்கள் இன்று உயிர் வாழ வழி செய்வதில் தொடங்கி, எதிர்காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் ஏதேனும் செய்ய வேண்டும்" என கூறினார்.
கிரிஃபித்ஸ் கூறுகையில், "அணை உடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பரந்த அளவிலான விளைவுகளின் காரணமாக, 'தவிர்க்க முடியாத காரணங்களால்', மேலும் அதிக நிதி உதவி வேண்டி ஐ.நா. ஒரு சிறப்பு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்த முறையீட்டை கோரி அறிவிப்பதற்கு முன்பு பொருளாதார, சுகாதார, மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளைப் பார்க்க சில வாரங்கள் காத்திருக்க விரும்புவதாக அவர் கூறினார்.
"கருங்கடல் தானிய முன்முயற்சியின்" விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக, தானும் ஐ. நா. வர்த்தகத் தலைவர் ரெபெக்கா கிரின்ஸ்பானும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கிரிஃபித்ஸ் கூறினார். துருக்கியும், ஐ.நா.வும் கடந்த ஜூலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உக்ரைனில் தானிய ஏற்றுமதிக்காக மூன்று, "கருங்கடல் துறைமுகங்களை" திறக்கின்றன்.
அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பாணையை ரஷ்யாவும் ஐ.நா.வும் கையெழுத்திட்டது. இது ரஷியாவின் உணவு மற்றும் உரக் கப்பல்கள் அனுப்புவதில் உள்ள தடைகளை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டது.
வோல்கா ஆற்றில் உள்ள ரஷிய துறைமுகமான டோக்லியாட்டியிலிருந்து கருங்கடலுக்கு செல்லும் குழாய் திட்டத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே ரஷியாவின் முக்கிய கோரிக்கையாகும். இந்த தடம் உக்ரைன் மீதான ரஷியாவின் பிப்ரவரி 24, 2022ல் படையெடுப்பிற்கு பிறகு மூடப்பட்டது. உரத்தின் முக்கிய மூலப்பொருளான அமோனியா இந்த குழாய் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
"உலக உணவு பாதுகாப்புக்கு அம்மோனியா அத்தியாவசியப் பொருள். அந்த குழாய் வழியை திறந்து கருங்கடலின் குறுக்கே அமோனியாவை உலகத்தின் தெற்கு பகுதிக்கு வழங்குவதே நம் அனைவருக்கும் முக்கிய கடமை," என்று கிரிஃபித்ஸ் கூறினார்.
செவ்வாயன்று ஷெல் தாக்குதல்கள் நடந்ததாகவும், அதனால் அந்த குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்ததாகவும், ஆனால் குழாய்த்திட்டம் போர்ப்பகுதியின் நடுவில் உள்ள காரணத்தால், ஐ.நா.வால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கிரிஃபித்ஸ் கூறினார். மேலும், அந்த பழுது எவ்வளவு விரைவாக சரி செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக சரி செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் நினைப்பதாகவும், அது மிக மோசமான அளவில் சேதமடைந்திருக்காது என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்.
- வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்தமாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. வடகரை தொகுதியில் கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி சைலஜா இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டார்.
அவருடன் அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரபுல் கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஷாபி பரம்பில் என மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது சமூகவலைதளங்களில் சைலஜாவின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வெளியானது.
அதனை ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் வெளியிட்டது என்று இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்த கட்சியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கருத்து தெரிவித்தது.
இதற்கிடையே மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் வடகராவில் கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஹரிஹரன், முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார்.
கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த கூட்டத்தில் ஹரிஹரன் பேசிய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் முன்னாள் மந்திரி சைலஜா பற்றி ஆபாசமாக பேசிய ஹரிஹரன் மீது பெண்களை அவமானப்படுத்துதல் (ஐபிசி 509), பாலியல் துன்புறுத்தல் (ஐபிசி 354 ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள மாநில காவல்துறை தலைவரிடம் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு மாநில செயலாளர் சனோஜ் புகார் அளித்தார்.
மேலும் கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளரிடம், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு வடகரா தொகுதி செயலாளர் விகேஷ் என்பவரும் புகார் கூறியிருக்கிறார். அவர்களது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரிஹரனின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தனது முகநூல் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் 'வடகரையில் நான் பேசிய உரையில் தகாத கருத்தை தெரிவித்ததாக நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அந்த கருத்தை தெரிவித்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டில் மர்ம நபர்கள் நேற்று இரவு வெடிகுண்டுகளை வீசினர். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர். ஆனால் அந்த குண்டுகள் வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.
முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் பற்றி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த நிலையில, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தலைவரின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






