என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி குழுமம்"

    • ஊழல் முறைகேடுகள், அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, சுற்றுச்சூழல் விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
    • நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்ற நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.

    மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான ரவி நாயர் அதானி குழுமம் மீது, ஊழல் முறைகேடுகள், அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, சுற்றுச்சூழல் விதிகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.

    அக்டோபர் 2020 முதல் ஜூலை 2021 வரை, ரவி நாயர் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களைப் பற்றி அவதூறான மற்றும் தவறான கருத்துக்களைப் பதிவிட்டதாக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் கிரிமினல் அவதூறு புகார் அளித்திருந்தது.

    இந்த வழக்கை குஜராத்தின் காந்திநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதானி நிறுவனம் தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும், ரவி நாயர் பதிவிட்ட ட்வீட்கள் மற்றும் கட்டுரைகளின் நகல்கள் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

    ரவி நாயர் தரப்பு வழக்கறிஞர், இந்தப் பதிவுகள் அவதூறானவை அல்ல என்றும், இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரவி நாயரின் பதிவுகள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்றும் விமர்சனத்திற்கான எல்லையை அந்தப் பதிவுகள் மீறிவிட்டதாகவும் கூறி, ரவி நாயரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் குற்றவாளி என உறுதி செய்தது.

    எனவே அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், ரூ.5000 அபராதமும் விதித்தது.  

    • சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்தது.
    • அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது

    அதானி குழுமப் பங்குகள் இன்று 10% வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் 10% வரை சரிவைக் கண்டுள்ளன. கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் வாயிலாக நேரடியாக சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கோரியுள்ள நிலையில் அதானி குழும பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.

    சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்ததால், அவை தோல்வியடைந்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அறிவிப்புகளை வழங்க அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முயற்சித்து வருகிறது. அமெரிக்காவில் இந்தியப் பெருநிறுவனம் ஒன்று தொடர்புடைய மிக முக்கியமான சட்ட வழக்காக இது கருதப்படுகிறது.

    இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அதானி கிரீன் நிறுவனத்தின் பங்குகள் 10% சரிந்து ஒருநாள் வர்த்தகத்தில் குறைந்தபட்ச விலையான ரூ. 823-ஐ எட்டின. அதே சமயம் குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸின் பங்குகள் 8% சரிந்து ரூ. 1,936-ஐத் தொட்டன. மேலும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 5% சரிந்து ரூ. 1,343-க்கும், அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 8% சரிந்து ஒரு பங்கின் விலை ரூ. 852-க்கும் சரிந்தது.

    முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி தயாரிக்கும் மின்சாரத்திற்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தில் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுகள் எழுந்தது. அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது. மேலும், தனது நிலைப்பாட்டைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது. 

    ×