என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adani Groups"

    • ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல்
    • மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது

    ஏஐ தரவு மையங்கள் அமைப்பதற்காக ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தில் அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அதானி கோனெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், அதானி பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், என்எக்ஸ்ட்ரா டேட்டா லிமிடெட் மற்றும் என்எக்ஸ்ட்ரா விசாக் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் கூட்டாளிகள் என முன்னரே மாநில அரசிடம் கூகிளுக்கு சொந்தமான ரெய்டன் தெரிவித்தது.

    இந்நிலையில்," 28/11/2025 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி, விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் உள்ள 480 ஏக்கர் நிலத்தை அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் இதன் மூலம் அனுமதி அளிக்கிறது" என டிசம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் ஏஐ தரவு மையங்களை அமைக்க ரெய்டன் நிறுவனம் ரூ. 87,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில், மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

    • ஐ.பி.எல். போன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
    • ஆடவர் ஐபிஎல் போட்டியின் 2008 ஏலத் தொகையின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் அணிகள் முறியடித்தது.

    டெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்காக WPL கிரிக்கெட் போட்டி நடத்தப்பட இருப்பது வரலாற்றின் புதிய தருணம் என ஜெய்ஷா ட்வீட் செய்துள்ளார்.

    ஐபிஎல் போன்று மகளிருக்கான பிரீமியர் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ கடந்த வருடம் முதலே திட்டுமிட்டு வந்தது. ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் மகளிருக்கான பிரீமியர் லீக்குகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

    இதனால் இந்தியாவிலும் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். 

    மேலும் ஆடவருக்கான ஐபிஎல் அறிமுகத்தின்போது 8 அணிகளுக்கான மொத்த ஏலம் சுமார் ரூ.3000 கோடியாக இருந்த நிலையில் தற்போது மகளிருக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகத்தில் 5 அணிகள் ரூ.4669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆடவர் ஐபிஎல் ஏலத்தின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் முறியடித்துள்ளது.

    5 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த மகளிர் பிரீமியர் லீக்கில் அதானி குழுமம் களமிறங்கியுள்ளது. அதானி குழுமம் 1,289 கோடிக்கு அகமதாபாத் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது.

    5 அணிகளையும் ஏலம் எடுத்த நிறுவங்கள் விவரம்:-

    1. அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் - ரூ. 1,289 கோடி - அகமதாபாத்

    2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 912.99 கோடி - மும்பை

    3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 901 கோடி - பெங்களூரு

    4. ஜே.எஸ்.டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 810 கோடி - டெல்லி

    5. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 757 கோடி - லக்னோ

    மகளிருக்கான பிரீமியர் லீக் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா அணிகளின் உரிமையாளர்கள் பங்கு பெறவில்லை.

    ×