என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adani Groups"

    • போக்குவரத்து மண்டலங்களைப் பொறுத்து, எரிவாயு விலை குறைப்பு மாறுபடும்
    • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் கட்டண சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்த விலைகுறைப்பு ஏற்பட்டுள்ளது.

    இயற்கை எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையை குறைத்துள்ளது. சிஎன்ஜி மற்றும் வீட்டிற்கு குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (PNG) விலையை 4 ரூபாய் வரை குறைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் கட்டண சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்த விலைகுறைப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து மண்டலங்களைப் பொறுத்து, எரிவாயு விலை குறைப்பு மாறுபடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மற்றும் அதை ஒட்டிய மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா பகுதிகளில், சிஎன்ஜி விலை தற்போது கிலோவுக்கு ரூ. 0.50 முதல் ரூ. 1.90 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடுகளுக்கான பிஎன்ஜி (PNG) எரிவாயு விலை ஒரு கன மீட்டருக்கு  ரூ. 1.10 வரை குறைக்கப்பட்டுள்ளது. 

    ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா-என்சிஆர், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் எல்லையோர உத்தரப் பிரதேசத்தில், சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1.40 முதல் ரூ.2.55 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டு உபயோகத்திற்கான பிஎன்ஜி விலை ஒரு கன மீட்டருக்கு ரூ.1.10 முதல் ரூ.4.00 வரை குறைக்கப்பட்டுள்ளது.

    ATGL-ஐத் தவிர, GAIL Gas நிறுவனமும் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையில் ஒரு ரூபாய் குறைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நகர எரிவாயு விற்பனை நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Ltd), டெல்லி மற்றும் NCR நகரங்களில் சமையலறைக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் (PNG) விலையை ஒரு கன மீட்டருக்கு (scm) 70 காசுகள் குறைத்துள்ளது. அதே நேரத்தில், திங்க் கேஸ் (Think Gas) நிறுவனம் CNG விலையை ஒரு கிலோவிற்கு ரூ. 2.50 வரையிலும், PNG விலையை ஒரு கன மீட்டருக்கு ரூ. 5 வரையிலும் குறைத்துள்ளது


    • ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல்
    • மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது

    ஏஐ தரவு மையங்கள் அமைப்பதற்காக ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தில் அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அதானி கோனெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், அதானி பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், என்எக்ஸ்ட்ரா டேட்டா லிமிடெட் மற்றும் என்எக்ஸ்ட்ரா விசாக் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் கூட்டாளிகள் என முன்னரே மாநில அரசிடம் கூகிளுக்கு சொந்தமான ரெய்டன் தெரிவித்தது.

    இந்நிலையில்," 28/11/2025 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி, விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் உள்ள 480 ஏக்கர் நிலத்தை அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் இதன் மூலம் அனுமதி அளிக்கிறது" என டிசம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் ஏஐ தரவு மையங்களை அமைக்க ரெய்டன் நிறுவனம் ரூ. 87,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில், மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.

    • ஐ.பி.எல். போன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
    • ஆடவர் ஐபிஎல் போட்டியின் 2008 ஏலத் தொகையின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் அணிகள் முறியடித்தது.

    டெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்காக WPL கிரிக்கெட் போட்டி நடத்தப்பட இருப்பது வரலாற்றின் புதிய தருணம் என ஜெய்ஷா ட்வீட் செய்துள்ளார்.

    ஐபிஎல் போன்று மகளிருக்கான பிரீமியர் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ கடந்த வருடம் முதலே திட்டுமிட்டு வந்தது. ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் மகளிருக்கான பிரீமியர் லீக்குகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

    இதனால் இந்தியாவிலும் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார். 

    மேலும் ஆடவருக்கான ஐபிஎல் அறிமுகத்தின்போது 8 அணிகளுக்கான மொத்த ஏலம் சுமார் ரூ.3000 கோடியாக இருந்த நிலையில் தற்போது மகளிருக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகத்தில் 5 அணிகள் ரூ.4669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆடவர் ஐபிஎல் ஏலத்தின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் முறியடித்துள்ளது.

    5 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த மகளிர் பிரீமியர் லீக்கில் அதானி குழுமம் களமிறங்கியுள்ளது. அதானி குழுமம் 1,289 கோடிக்கு அகமதாபாத் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது.

    5 அணிகளையும் ஏலம் எடுத்த நிறுவங்கள் விவரம்:-

    1. அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் - ரூ. 1,289 கோடி - அகமதாபாத்

    2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 912.99 கோடி - மும்பை

    3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 901 கோடி - பெங்களூரு

    4. ஜே.எஸ்.டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 810 கோடி - டெல்லி

    5. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 757 கோடி - லக்னோ

    மகளிருக்கான பிரீமியர் லீக் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா அணிகளின் உரிமையாளர்கள் பங்கு பெறவில்லை.

    ×