என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "britain"

    • மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
    • சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.

    இந்த சூழலில், இந்த மாதம் 25 ஆம் தேதி வெர்ஸ்டரில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார். விஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் உயிரிழந்தார்.

    விஜய்யின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்த இங்கிலாந்து காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விஜய்யின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமும், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.
    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்

    இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.

    இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும், உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஸ்டார்மர் உடன் விவாதித்தேன்.

    பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும்.

    ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம் " என்று தெரிவித்தார்.

    இதன்பின் பேசிய கெய்ர் ஸ்டார்மர், 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும். 

    உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம்காமன். காமன்வெல்த், ஜி20 இல் நாங்கள் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்' என்று கூறினார்.  

    • ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார்.
    • எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் பெரியாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    63 வயதான சாராம் முல்லாலி இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி தேவாலயத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். சாராம் முல்லாலி ஆங்ளிகன் சபையின் 106-வது ஆவார்.

     இவர் 2018 ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பரில்  பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்த காலியிடத்தில் சாராம் முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெற்றது.

    11 ஆண்டுகளுக்கு முன்பு சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே பெண்ணான முல்லாலி, பேராயர் பதவிக்கு வர வழிவகுத்தது.

     இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார். இதனால், சுமார் எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    • யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
    • டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

    உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

    அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. 

    ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

    இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

    • 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.
    • 20% அதிகமாக வேறொருவருக்கு வாடகைக்கு விட்டார்.

    பிரிட்டனின் வீட்டற்றோர் நலத்துறை அமைச்சர் ருஷனாரா அலி சர்ச்சைக்கு சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ருஷனாரா அலி லண்டனில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றி, மாத வாடகையை 700 பவுண்ட் (சுமார் ரூ.73,000) அதிகரித்து வேறொருவருக்கு வாடகைக்கு விட்டதாக 'தி ஐ பேப்பர்' (The i Paper) என்ற நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

    இது சர்ச்சையான நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு எழுதிய கடிதத்தில், தான் பதவியில் தொடர்ந்தால், அரசின் லட்சியப் பணிகளுக்கு ஒரு குறுக்கீடாக இருக்கும் என்று ருஷனாரா அலி குறிப்பிட்டுள்ளார்.

    அதே சமயம், தான் எல்லா நேரங்களிலும் அனைத்து சட்டத் நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், தனது பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ருஷனாரா அலியின் கடின உழைப்பை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
    • ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.

    செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வரவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்தார்.

    இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரிட்டனை கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளித்து ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.

    தங்கள் எல்லையில் உள்ள பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது எதிர்காலத்தில் பிரிட்டனுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதிகளை திருப்திப்படுத்துவது பலனளிக்காது என்றும், பிரிட்டனிலும் அதுவே நடக்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.

    முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்த முடிவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

    • லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.
    • முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை மாலை பிரிட்டன் தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டது.

    இந்தப் பிரச்சினையால் இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன.

    தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்பட்டு லண்டன் பகுதியில் இயல்புநிலை செயல்பாடுகளை மீட்டெடுத்ததாக NATS பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்தப் பிரச்சினையால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக NATS தெரிவித்துள்ளது.

    பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NATS மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இந்த சம்பவம் முக்கியமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை பாதித்தது.

    தற்போதைய பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டாலும், முழுமையான இயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
    • இந்நோய் அறிகுறிகளை விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்

    நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ்.

    இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

    எனவே இதன் தாக்குதலிலிருந்து மனிதர்களை காக்க ஒரு தடுப்பூசியை கண்டு பிடிக்க உலகெங்கிலும் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    லண்டனை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு பிரிட்டன் மருந்து நிறுவனம் க்ளாக்ஸோ ஸ்மித்க்லைன் (GSK). இந்நிறுவனம் இந்த நோய்க்கு எதிராக அரெக்ஸ்வி எனும் தடுப்பூசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனுமதி பெற்று விட்டது.

    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் உள்ள டெலாவேர் மாநில நீதிமன்றத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் அமெரிக்க பன்னாட்டு முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மீது காப்புரிமை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

    ஃபைசர் நிறுவனத்தின் அப்ரிஸ்வோ (Abrysvo) தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு, ஜிஎஸ்கே நிறுவனத்தின் 4 காப்புரிமைககளை மீறுவதாக ஜிஎஸ்கே குற்றம் சாட்டியுள்ளது.

    "ஃபைசர் நிறுவனம் தெரிந்தே அப்ரிஸ்வோ தடுப்பூசியில் எங்களுக்கு உரிமையுள்ள கண்டுபிடிப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துகிறது. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வி (Arexvy), ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 7 வருடங்களுக்கு முன்பே வளர்ச்சியில் இருந்தது. இவ்விவகாரத்தில் ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம். காப்புரிமை மீறலின் விளைவாக நாங்கள் இழந்த லாபங்கள் மற்றும் ராயல்டிகள் உட்பட பண நஷ்டத்திற்கும் ஈடு வேண்டும். மேலும் ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்புகள்தான் நிறுவனங்களின் புதுமையான ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அடிப்படை. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வியை அறிமுகப்படுத்துவது தடையின்றி நடைபெற வேண்டும்" என ஜிஎஸ்கே தன் புகாரில் கோரியுள்ளது.

    "எங்கள் அறிவுசார் சொத்துக்களின் நிலைப்பாடுகளில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நோயாளிகளை காக்க எங்களின் புதுமையான தடுப்பூசியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் நிலையை தற்காத்துக் கொள்ள நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்" என ஃபைசர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகள் தரப்பில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது
    • இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்

    அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (43) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

    இதற்கிடையே, இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) ஏற்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை அதிகாரிகள் தரப்பில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.

    இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து இங்கிலாந்து பிரதமரின் கருத்தாக அந்நாட்டிலிருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதில் தெரிவிக்கப்படுவதாவது:

    பொருளாதார வகையில் மட்டுமின்றி அனைத்து ஜனநாயக நாடுகளும் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்வதிலும் மற்றும் அனைத்து வகையிலான இரு தரப்பு உறவிலும், இங்கிலாந்திற்கு இந்தியா ஒரு தவிர்க்க இயலாத முக்கியமான வர்த்தக பங்காளி. தற்போது நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க கூடிய ஒரு ஒப்பந்த முயற்சிக்குத்தான் பிரதமர் ஒப்புதல் அளிக்க விரும்புகிறார்.

    வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நீடித்து நிற்கும் ஒரு உறவுமுறையை ஏற்படுத்த தாம் விரும்புவதாக கேபினெட் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார்.

    இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கிற்கு இந்திய வருகையின் போது, சிறப்பான வரவேற்பளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

    இந்திய மென்பொருள் துறையின் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான இந்தியாவின் முன்னணி கோடீசுவரர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷரா மூர்த்தி, ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன்.
    • ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

    அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

     

    இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி  தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கைலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

    பல்மோனரி பிலெப் எனப்படும் இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க ஐந்தரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினர். இதனால் கைலா உயிர்பிழைத்தார்.

     இதுகுறித்து கைலாவின் தந்தை கூறுகையில், 'எனது மகள் படும் வேதனையை பார்த்து நான் ஒரு குழந்தையைப் போல் அழுதேன். அவளுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. அவள் இறக்கப்போகிறாள் என்றே பயந்தேன், தயவு செய்து இளஞர்கள் புகைப்பழக்கத்தை கை விடுங்கள், அதனால் ஒரு பயனும் இல்லை, Its not worth it' என்று தெரிவித்தார்.

     

    சிகிச்சைக்ககுப் பிறகு உடல் தேறி வரும் கைலா பேசுகையில், 'எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன். ஆனால் இப்போது நன் அனுபவித்த வலிக்கு பிறகு நீ ஒருபோதும் சிகரெட்டை தொடப்போவதில்லை' என கூறினார். 

     

    சிகெரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிகெரெட் புகையை உள்ளிழுக்கும்போது நுரையீரலுக்குள் நச்சுத்தன்மை கொண்ட கேமிக்கல்களும்,  யுரேனியமும் படிமங்களாக சேகரமாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.
    • இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ்.

    மனிதர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிந்ததே. வினோதமான விஷயங்களை செய்பவர்களைக் குறித்து நாம் கேள்விப்படும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் பெண் ஒருவர் கடந்த 20 வருடங்களாக சிமெண்ட், செங்கல், கல், மண் ஆகியவற்றை தின்பண்டமாக தினமும் சாப்பிட்டு வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதாகும் பாட்ரிஸ் பெஞ்சமின் டேஸ்ட் நன்றாக இருக்கிறதென சிமிண்ட் செங்கலை நொறுக்குதீனியாக தினமும் சாப்பிட்டு வருகிறார்.

    இவைகளை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பாட்ரிஸ், வீட்டில் உள்ள சுவர்களை உடைத்து அதில் உள்ள செங்கல் சிமெண்ட் உதிரிகளையும் சாப்பிட்டு வருகிறாராம். அவரது கணவர் எவ்வளவோ கெஞ்சியும் பாட்ரிஸால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

     

    இதனால் தனது உடலில் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்தும் தனது பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகியுள்ளார் பாட்ரிஸ். சாப்பிடக் கூடாதவற்றை சாப்பிடத்தூண்டும் இந்த குறைபாட்டுக்கு பிக்கா என்பது மருத்துவப்பெயர். தனது 18 வது வயதில் பிக்கா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாட்ரிஸ் கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருகிறார். 

     

    தமிழில் சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் டியூப்லைட்டை உடைத்து சாப்பிடும் ஒருவரிடம் வடிவேலு மாட்டிக்கொளவார். காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் அவர் லைட் பல்புகளை சாப்பிடுவதாக சொல்வது காமெடியாக நாம் எடுத்துக்கொண்ட நிலையில் உண்மையிலேயே அதுபோன்ற நபர்கள் உலகத்தில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. 

    • கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
    • ரிஷி சுனக்கின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன

    பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

    பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தன. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. கடந்த ஜூன் 12 முதல் 14 வரை Savanta நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு சண்டே டெல்கிராப் இதழில் வெளியானது. அதில் தொழிலாளர் காட்சியைச் சேர்ந்த கெயர் ஸ்டாமருக்கு 46 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

     

    சண்டே டைம்ஸ் இதழில் வெளியயான SURVATION நிறுவனம் மே31 முதல் ஜூன் 13 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தம் 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 456 இடங்களைப் பிடிக்கும்(46%) என்றும், ரிஷி சுனக்கின் கன்செர்வேட்டிவ் கட்சி வெறும் 72 இடங்களைப் பிடிக்கும் (24%) எனவும் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 200 இடங்கள் வெற்றி பெற்றிருந்ததே குறைந்த பட்ட எண்ணிக்கை என்பது கவனிக்கத்தக்கது.

    சண்டே அப்சர்வர் இதழில் வெளியான OPINIUM நிறுவனம் ஜூன் 12 முதல் 14 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், தொழிலாளர் கட்சி 40% இடங்களைப் பிடிக்கும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி 23% இடைகளைப் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.




     


    ×