என் மலர்
நீங்கள் தேடியது "Bussinessmen"
- இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
- சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.
1917இல் முதலாம் உலகப் போர் சமயத்தில், மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
பிரிட்டிஷ் அரசுக்கு கடன் கொடுத்த விஷயம் ருதியா குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கான ஆவணங்கள் யாரிடமும் இல்லை. இதனால் 109 ஆண்டுகளாக இந்த விஷயம் கிடைப்பில் இருந்துள்ளது.
ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா, தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு பழைய ஆவணங்களையும் உயிலையும் ஆய்வு செய்தபோது, இந்தக் கடனுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் கிடைத்துள்ளன.
முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த 'போர்க் கடன்' வாங்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.
1917-ல் 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும். அன்றைய தங்கத்தின் விலையோடு ஒப்பிடும்போது, இந்தக் கடனின் இன்றைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களை தொடும்.
ஒரு இறையாண்மை கொண்ட நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்ற அடிப்படையில், கடனை திருப்பி கேட்டு பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப ருதியா குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
ஒரு காலத்தில் சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது.
இன்றும் சீஹோர் நகரின் 20 முதல் 30 சதவீத குடியிருப்புகள் இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில்தான் அமைந்துள்ளன.
தற்போது இவர்கள் விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது
- தற்போது தினமும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் மக்கள் சிரமம்
நெல்லை:
நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 5-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
இதன்மூலம் ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் தினந்தோறும் பயன்அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மதியம் 1.15 மணிக்கு மட்டுமே ஒரே ஒருமுறை ஆறுமுகநேரி, காயல்பட்டினத்திற்கு பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் மாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர். வியாபாரிகளும் நெல்லை மார்க்கெட்டுகளில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு செல்ல அவதி அடைகின்றனர்.
இந்த வழித்தடங்களில் தனியார் பஸ்களின் இயக்கமும் இல்லை. இதனால் பயணிகள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி வந்த இருந்த நிலையில் தற்போது தினமும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பிரச்சினையை கவனத்தில் எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






