என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Transport department"
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
- ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.
கோவை:
கோவையில் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இந்த சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துக்களும், இந்த விபத்துக்களில் உயிரிழப்புகளும் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மாநகர போலீசார், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்கவும், 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று ஒருசிலர் போலீசாரின் உத்தரவை கடைபிடித்து, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
இந்த திட்டம் அமலானதை அடுத்து முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகர போலீசார் முக்கியமான சாலைகளில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாலைகளில் வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என கண்காணித்தனர். அப்படி அணியவில்லை என்றால், அந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களை போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாநகரில் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தாலும், ஒரு சிலர் மட்டுமே இதனை கடைபிடித்தனர். ஆனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் அதனை யாரும் கடைபிடித்த மாதிரி தெரியவில்லை.
வழக்கம் போலவே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.
விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறோம். ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது.
- பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதையொட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது. மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் 2 நாட்களாக முகாம் நடந்தது.
முகாமில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் வாகனங்களில் ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? வாகனங்கள் முறையாக பராமரிக்கப் பட்டுள்ளதா? மாணவர்களின் பயணத்துக்கு பாதுகாப்பாக உள்ளதா? என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2 நாள் ஆய்வில் 273 வாகனங்களுக்கு அனுமதிக்கான மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 185 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி, முதலுதவி பெட்டி மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த வாகனங்களில் குறைகளை நீக்கி மீண்டும் ஒரு வாரத்துக்குள் அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி பெறாத வாகனங்கள் பெர்மிட் முடக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
- மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.
- எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-
பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை பயணிக்க அனுமதித்து, எந்தவித புகாரும் வராத வகையில் பணிபுரிய வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் அரசிடம் இருந்து நிலுவையின்றி பெறப்படுகிறது.
மேலும், அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை எனவும் இருக்கை உடனடியாக வழங்கப்படாமல் தாமதப்படுத்துவதாகவும் புகார் பெறப்படுவதாக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பஸ் ஓட்டுநர், நடத்துநர்கள் இடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படுவதுடன் பொது மக்கள் மத்தியில் நிர்வாகத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்கும் பொருட்டு, விரைவு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாகவும், தக்க மரியாதையுடனும் கவுரவத்துடனும் பயணிக்க உதவி புரிவது நமது கடமை. இனி வரும் காலங்களில் குளிர்சாதன பேருந்துகள் தவிர்த்து (தமிழகத்துக்குள் மட்டும்) இதர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளரை பயணிக்க அனுமதி அளித்து எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
- ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர்.
- வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.
திருப்பூர் :
தங்களது சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவோர் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.
பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை.இதனால், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க சொந்த வாகனங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பு சோதனை, தணிக்கை நடத்த வேண்டும். சோதனை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியு ள்ளார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,க்களுக்கும் விரிவான உத்தரவு அடுத்தடுத்து வர உள்ளது.
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்க ப்படுகிறது.பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவி த்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். போக்கு வரத்து ஆய்வாளர்கள் சிறப்பு தணிக்கையில் கவனம் செலுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.
- தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது
- தற்போது தினமும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் மக்கள் சிரமம்
நெல்லை:
நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 5-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
இதன்மூலம் ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் தினந்தோறும் பயன்அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மதியம் 1.15 மணிக்கு மட்டுமே ஒரே ஒருமுறை ஆறுமுகநேரி, காயல்பட்டினத்திற்கு பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் மாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர். வியாபாரிகளும் நெல்லை மார்க்கெட்டுகளில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு செல்ல அவதி அடைகின்றனர்.
இந்த வழித்தடங்களில் தனியார் பஸ்களின் இயக்கமும் இல்லை. இதனால் பயணிகள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி வந்த இருந்த நிலையில் தற்போது தினமும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பிரச்சினையை கவனத்தில் எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களையும், வாகன உரிமையாளர்களையும் முறைப்படுத்தும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துதுறை மேற்கொண்டு வருகிறது.
சாலை விபத்துகளை குறைக்கவும், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது.
டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இதுவரையில் காகிதமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த 2 முக்கிய ஆவணங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் கிரெடிட் கார்டு போன்று கையில் தழுவ உள்ளது.
கையடக்க இந்த ஸ்மார்ட் கார்டில் வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்கள் மட்டுமின்றி, அதன் உரிமையாளர் குறித்த முழு விவரங்களும் இடம் பெறும்.

விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட் கார்டு குறித்து போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:-
டிரைவிங் லைசென்சுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டும். பதிவு ஆவண சான்றிதழுக்கு (ஆர்.சி.) ஒரு ஸ்மார்ட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த கார்டில் எல்லா தகவல்களும் இடம் பெறும். ‘பார்கோடு’, புகைப்படம் போன்றவை கார்டில் இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை வட்டார போக்குவரத்து அலுவலர்களும் போலீசாரும் ஆய்வு செய்யலாம்.
‘பார்கோடினை’ பார்த்தாலே வாகனங்கள் குறித்தும் உரிமையாளர் பற்றிய தகவல்களும் தெரியவரும்.
இனி புதிதாக டிரைவிங் லைசென்சு மற்றும் வாகனங்கள் பதிவு செய்யக் கூடியவர்கள் நவீன ஸ்மார்ட் கார்டினை பெற முடியும். ஏற்கனவே பழைய முறையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களும் இதற்கான கட்டணம் செலுத்தி புதிய கார்டினை பெறலாம்.
நாடு முழுவதும் இந்த ஸ்மார்ட் கார்டினை பயன்படுத்தலாம். முறைகேடு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #DrivingLicence #Tamilnadu
சாலை விபத்து உயிர் இழப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது சாலை விபத்தில் தமிழகத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு உயிர் இழப்பு இருந்து வருகிறது.
அதனை குறைக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சாலை விபத்தை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விதிகளை மீறும் டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் விபத்து குறைந்து வருகிறது.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசி செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் அதிகளவு சரக்குகளை ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையுடன் போலீசாரும் இணைந்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் சாலை விபத்து கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கமிஷனர் சி.சமயமூர்த்தி நடவடிக்கை எடுக்க அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அதனையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத உங்களின் லைசெலன்சை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் ஓட்டுனர் உரிமத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் மோட்டார்சைக்கிளில் செல்போன் பேசிக் கொண்டே சென்ற 64,105 பேர் அவர்களது ஓட்டனர். உரிமத்தை இழந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான 6 மாதத்தில் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது:-
சாலை விபத்து மற்றும் உயிர் இழப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசாருடன் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடம் 57,158 பேர் மீது ஓட்டுனர் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 19,422 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 29,964 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல சிவப்பு சிக்னல் விழுந்த பின்னர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக 18,287 பேர் மீது லைசென்ஸ் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதாக 17,701 பேர் மீதும், வாகனத்தில் அதிகளவு சரக்குகளை ஏற்றி சென்றதாக 7,223 பேர் மீதும் லைசென்சு ரத்து நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் விவரம் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். அவர்களது லைசென்சு முடக்கம் செய்யப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
லைசென்சு செயலில் உள்ளதா? தடை செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது போன்ற விவரங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் தகவல் குறிப்பில் இடம் பெறும். லைசென்ஸ் “பார் சோடு” வழியாக அதனை கண்டறிந்து விடலாம்.
இந்த நடவடிக்கையின் மூலம் சாலை விபத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TamilNadu #License #DrivingLicense
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
