என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Stickers"
- நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது
- அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.
- அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிககள் ஸ்டிக்கர்களை விநியோகம் செய்தனர்.
- சிலர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
பல்லடம்:
பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர், செல்போன் ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை,அதிமுக ., நிர்வாகிகளுக்கு பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் நடராஜன் வழங்கினார்.
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் தண்ணீர் பந்தல் ப.நடராஜன், சென்னியப்பன் ,பரமசிவம், வைஸ் முத்துக்குமார், ஆறுமுகம், சுப்ரமணியம், மங்கையர்க்கரசி கனகராஜ், சதீஷ்குமார், இச்சிப்பட்டி நாச்சிமுத்து, கிட்டுசாமி, வேலுச்சாமி, நெய்க்காரர் மணி மற்றும் ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் பலர் இணைந்தனர்.
- ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும்.
- ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரில் குறுகலான சாலைகள் உள்ளன. ஆனால் இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே தேவாலா, பந்தலூரில் உள்ள ஆட்டோக்கள், உரிய அனுமதி இன்றி கூடலூரில் இயக்கப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் புகாா் அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும். ஆனால், தொலை தூரத்தில் இருந்து வந்து, கூடலூா் நகரில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் கூடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களை அடையாளம் காணும் வகையில் பிரத்யேக ஸ்டிக்கா் ஒட்டுவது என்று போக்குவரத்து வட்டார அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு இயக்கப்படும் உள்ளூா் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கான பணிகளில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி. செல்வராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குமாா், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் உள்ளூர் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனா்.
- இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஒட்டினர்.
- 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
மேலூர்
மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ேபாலிசாருக்கு உத்தரவிட்டார். ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது, இரவு நேரங்களில் அவை சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
- அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வுக்காக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
- விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் சீர்காழி காவல்துறை சார்பில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) பழனிசாமி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் பங்கேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வாக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
தொடர்ந்து மயிலாடு–துறை வட்டார போக்கு–வரத்து அலுவலர் நாக–ராஜன், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆட்டோ பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் தனியார் பள்ளி நிர்வாகி சக்திவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்