search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி
    X

    ஆட்டோ பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தொடங்கி வைத்தார்.

    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி

    • அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வுக்காக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
    • விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் சீர்காழி காவல்துறை சார்பில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) பழனிசாமி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் பங்கேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வாக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

    தொடர்ந்து மயிலாடு–துறை வட்டார போக்கு–வரத்து அலுவலர் நாக–ராஜன், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆட்டோ பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் தனியார் பள்ளி நிர்வாகி சக்திவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×