search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police raid"

    • ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
    • திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.

    காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.

    அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.

    இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.

    திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.

    மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.
    • தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    கோவை:

    தி.மு.க முன்னாள் அமைச்சரும், சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி கோவை பீளமேட்டில் வசித்து வருகிறார்.

    இவரது பெயரில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு கற்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இவர் நடத்தி வரும் கல்குவாரிகள், அரசின் விதியை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கல்குவாரி உரிமையாளரான பொங்கலூர் பழனிசாமியின் வீட்டில் சோதனை நடத்த கர்நாடக மாநில போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து கர்நாடக மாநில போலீசார் 15 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோர்ட்டு ஆர்டருடன் கோவைக்கு வந்தனர்.

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று, கோர்ட்டு ஆர்டரை காண்பித்து விட்டு சோதனை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.

    இந்த வீட்டில் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வசித்து வருகிறார். இவர் தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இதேபோல் பீளமேட்டில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்டம் முழுவதும் 226 கடைகளில் உணவுபாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 152 போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • இதில், ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    குறிப்பாக பல்வேறு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகின்றதா? என மாவட்டம் முழுவதும் 226 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 152 போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இதில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ததாக ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்த சுமார் 8 கிலோ மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரி கள் மூலமாக கடைகள் சீல் வைப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார்.

    கடலூர்

    பண்ருட்டி அடுத்த விலங்கல் பட்டை சேர்ந்தவர் பற்குணன் (வயது 40), ஆட்டோ டிரைவர்,இவரது போனுக்கு நேற்று ஒரு போன் வந்தது. போனில் பேசிய நபர் பண்ருட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு டிரைவர் வேலைக்கு உனக்குஆர்டர் வந்துள்ளது.இந்த வேலையில் சேர 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். நாளைக்கு காலை 10 மணிக்கு யூனியன் அலுவலகத்திற்கு பணத்துடன் வரவும் என்று கூறியுள் ளார் .

    போனில் பேசிய நபர் கூறியவாறு ஆட்டோ டிரைவர் பற்க்குணன் ரூ 50 ஆயிரம் பணத்துடன் பண்ருட்டி யூனியன் ஆபீசுக்கு நேற்று காலை வந்தார்.சிறிது நேரத்தில் போனில் பேசிய அந்த டிப் டாப் ஆசாமி பஸ்சிலிருந்து இறங்கி வந்துள்ளார். அவருக்காகயூனியன் அலுவலகம் வாசலிலே காத்திருந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் டிப்டாப் ஆசாமிடம் முதல் தவணையாக ரூ50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட டிப் டாப் ஆசாமி இங்கேயே இரு. உனக்கு ஆர்டர் எடுத்துக் கொண்டு ஜெயசீலன் என்பவர் வருவார் எனக்கூறி அங்கிருந்து பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் பற்க்குணன் வேலைக்கான ஆர்டர் வரும் என்று நம்பி அங்கேயே காத்திருந்திருந்தார். நேரமாக, நேரமாக டிப்டாப் சாமி சொன்னது போலயாரும்வரவில்லை நாம் ஏமாந்து விட்டோம் என நினைத்து டிப்டாப் ஆசாமிக்கு போன் செய்துள்ளார்.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பற்குணன் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
    • ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் வியாபாரம் முடிந்த பின்னர் டாஸ்மாக் கடை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர்.

    பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    கல்லாப் பெட்டியில் இருந்த பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பதறியடித்து கொண்டு சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    எவ்வளவு பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை போனது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அதன் பிறகே கொள்ளை போனவற்றின் மதிப்பு முழு அளவில் தெரிய வரும் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.

    இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தை சேர்ந்த 24 வயதுள்ள இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அந்த கம்பெனிக்கு அருகில் உள்ள டீக்கடையில் கேரள மாநிலம் மலப்புழா மாவட்டம் ஒலப்பிடுக்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது அஸ்வாக் (வயது 24) என்பவர் வேலை செய்து வந்தார்.

    அப்போது இவர் களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.பின்பு கடந்த மே மாதம் 26-ந் தேதி பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் உள்ள இளம்பெண்ணின் சித்தப்பா வீடான குடி யிருப்புக்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ள னர்.தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்ப தாக முகமது அஸ்வாக் மீது இளம்பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து முகமது அஸ்வாக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்து 2009ல் தொடங்கப்பட்டது இந்த ஊடகம்
    • சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    முற்போக்கு சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்தியாவிலிருந்து இயங்கும் இணையதள ஊடகம், நியூஸ்க்ளிக்.

    2009ல் தொடங்கப்பட்ட நியூஸ்க்ளிக், பல்வேறு மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை குறித்து செய்தியளிப்பதிலும், அரசின் தவறான கொள்கைகள் குறித்து விரிவாக செய்திகளை தருவதிலும் புகழ் பெற்றது. பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் பிரபீர் புர்கயாஸ்தா என்பவரால் நிறுவப்பட்டது.

    இந்நிலையில், நியூஸ்க்ளிக் ஊடகத்தின் அலுவகத்திலும், அதன் பல்வேறு நிரூபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் இல்லங்களிலும், டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலமாக நடைபெற்ற இந்த சோதனை, 30 இடங்களில் நடத்தப்பட்டது.

    சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உருவாகிய இந்தியா எதிர்கட்சிகள் கூட்டணி இந்த சோதனைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.

    அக்கூட்டணி இது குறித்து அறிவித்திருப்பதாவது:

    உண்மையை மக்களிடையே விளக்கி சொல்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து செயல்படுகிறது. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் ஊடகங்களை கைப்பற்ற உதவுவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து புள்ளி விவரங்களோடு அரசின் தவறுகளை வெளியே சொல்வதை இந்த அரசு தடுக்க விரும்புகிறது. உலக அரங்கில் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என கருதப்பட்டு வந்த இந்தியாவிற்கு, இதன் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் ஆகிய ஊடகங்கள் குறி வைக்கப்பட்ட வரிசையில் நியூஸ்க்ளிக் சேர்ந்துள்ளது.

    இவ்வாறு எதிர்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ்க்ளிக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கருத்து தெரிவித்திருக்கிறது.

    • 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

     சேலம்:

    சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

    போலீசில் புகார்

    உடனே அந்த பெண் சத்தம் போட்டு வெளியே ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த வாலிபர் வெளியே வந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அந்த பெண் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை சில்மிஷம் செய்தவர் பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    வழக்குப்பதிவு

    இதையடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து பணத்தை திருடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் டென்சிங்.

    இவர் பாப்பாநாட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன் மற்றும் பணத்தை திருடினர்.

    இவர்களின் சத்தம் கேட்டு எழுந்த ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் என 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்குள் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    அதேபோல் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் மோசடி வழக்கில் சிக்கியவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பிரதான சாலையில் வசித்து வருபவர் நீதிமணி. இவர் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது .

    இந்த நிலையில் கிச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமையில் போலீசார் வந்தனர். தொடர்ந்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாக அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இந்த அதிரடி சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நடந்த இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    ×